TNPSC Thervupettagam

உண்மையிலேயே சாத்தியமா?

October 15 , 2024 2 hrs 0 min 72 0

உண்மையிலேயே சாத்தியமா?

  • ஒரே நாடு.. ஒரே தேர்தல் திட்டம் குறித்த விவாதம் தேசிய அளவில் விஸ்வரூபம் எடுத்​திருக்​கிறது. ஒரே நேரத்தில் நாடு முழுவதும் மக்களவைக்கான தேர்தலை​யும், மாநிலங்​களின் சட்டப்​பேரவைத் தேர்தலையும் நடத்துவது மட்டும் அல்ல. அதற்கு அடுத்த 100 நாள்களுக்குள் மாநகராட்சி, நகராட்சி, ஊராட்சி என அனைத்து உள்ளாட்சி அமைப்பு​களுக்​குமான தேர்தல்​களையும் நடத்தி முடித்துவிட வேண்டும் என்பதும் இதன் முக்கிய சாராம்சம். சின்னாபின்னமாகி இருக்கும் தேர்தல் நடைமுறையை, அரசமைப்பை உருவாக்​கிய​வர்​களின் நோக்கத்​துக்கு ஏற்ப மீட்டெடுக்கும் முயற்சியே இத்திட்டம் என்று மத்திய அரசு கூறுகிறது. உண்மை நிலவரம் என்ன?

ராம்நாத் குழு என்ன சொல்கிறது?

  • 2023 செப்டம்​பரில் அமைக்​கப்பட்ட ராம்நாத் கோவிந்த் தலைமையிலான குழு, 191 நாட்கள் தொடர்ந்து பணியாற்றியது. 21,558 பேரிடம் கருத்து​களைக் கேட்டறிந்து, 18,626 பக்க அறிக்கையை அளித்தது. பல்துறை நிபுணர்கள் இந்தக் குழுவினரிடம் தங்கள் கருத்து​களைத் தெரிவித்​துள்ளனர். இக்குழு ஒரே தேர்தல் முறை அவசியமா என்று 47 அரசியல் கட்சிகளிடம் கருத்துக் கேட்ட​தில், 32 கட்சிகள் ஒரே தேர்தல் முறையை ஆதரித்தன.
  • 15 கட்சிகள் எதிர்ப்புத் தெரிவித்​திருக்​கின்றன. காங்கிரஸ், மார்க்​சிஸ்ட், இந்திய கம்யூனிஸ்ட், பகுஜன் சமாஜ், ஆம் ஆத்மி, திமுக போன்ற கட்சிகள் எதிர்ப்புத் தெரிவித்​திருக்​கின்றன. முன்னாள் தலைமை நீதிப​திகளான தீபக் மிஸ்ரா, ரஞ்சன் கோகோய், எஸ்.ஏ.​போப்டே, யு.யு.லலித் ஆகியோரின் கருத்து​களையும் இக்குழு கேட்டறிந்தது. அவர்கள் ஒரே தேர்தல் முறையை நடைமுறைப்​படுத்த வேண்டியது அவசியம் என்று கூறியிருக்​கிறார்கள்.
  • இதன் பின்னர், அக்குழு ஒரே தேர்தல் முறை அவசியம் என்று பரிந்​துரைத்​திருக்​கிறது. அண்மையில் மத்திய அமைச்​சர​வையும் இக்குழுவின் பரிந்​துரையை ஏற்றுக்​கொண்​டிருக்​கிறது. இருந்​தாலும் வெவ்வேறு இனங்கள், வெவ்வேறு மதங்கள், வெவ்வேறு குழுக்கள் என்று வேற்றுமையில் ஒற்றுமை கொண்டிருக்கிற நம் நாட்டில், ஒரே தேர்தல் சாத்தியமா என்பது குறித்துச் சிந்தித்தாக வேண்டும்.
  • ஒரே நாடு.. ஒரே தேர்தல் திட்டத்தைச் செயல்​படுத்த அரசமைப்புச் சட்டத்தின் 83, 85, 172, 285, 356 ஆகிய கூறுகளில் திருத்தம் மேற்கொள்​ளப்பட வேண்டும். இந்தச் சட்டத் திருத்​தத்தை அனைத்து மாநில அரசுகளும் மத்திய ஆட்சிப் பகுதி அரசுகளும் அங்கீகரிக்க வேண்டும். அந்த அரசுகள் ஆதரிக்க​வில்​லை​யெனில், கூட்டாட்சிக் கட்டமைப்பு என்பது கேள்விக்​குறி​யாகி​விடும்.
  • ஒரு மாநிலத்தில் சட்டப்​பேரவைத் தேர்தல் நடந்து முடிந்த பின், யாருக்கும் பெரும்​பான்​மையற்ற சட்டப்​பேரவை அமைந்​தாலோ, நம்பிக்கை​யில்லாத் தீர்மானம் மூலம் ஆட்சி கலைக்​கப்​பட்​டாலோ, அங்கு மீண்டும் தேர்தல் நடத்திப் புதிய அரசை அமைக்​கலாம். ஆனால், அந்த ஆட்சி மத்தியில் இருக்கும் அரசின் ஆட்சிக் காலத்​துக்கு மட்டுமே தொடர முடியும். இவ்வாறு பல்வேறு பரிந்​துரைகளை இக்குழு வழங்கி​யுள்ளது.

நடைமுறைச் சிக்கல்கள்:

  • அரசமைப்புச் சட்டத்தைத் திருத்து​வதற்குப் பாதிக்கு மேற்பட்ட மாநிலங்​களின் ஆதரவு தேவை. திருத்தம் செய்த பிறகு, ஒரே தேர்தல் முறையைத் தொடங்​கு​வதற்குக் குடியரசுத் தலைவர் ஒரு நாளை அறிவிப்​பார். அந்த அறிவிப்​புக்குப் பிறகு, மாநிலத் தேர்தல்​களில் தேர்வாகும் சட்டப்​பேர​வை​களின் காலம் நாடாளு​மன்றக் காலத்​துடன் முடிந்​து​விடும். உதாரணமாக, 2024 தேர்தலின் மூலம் தேர்ந்​தெடுக்​கப்​பட்​டிருக்கிற நாடாளு​மன்றம் 2029இல் முடிவடை​யும். அதன்பிறகு, 2024 முதல் 2029 வரை எந்தச் சட்டப்​பேரவை தேர்வானாலும், அதன் காலவரையறை 2029 நாடாளு​மன்​றத்​துடன் முடிந்​து​விடும்.
  • இப்படித்தான் 2029இல் மக்களவை, மாநிலச் சட்டப்​பேர​வை​களுக்கான தேர்தல்கள் ஒரே முறையில் நடக்க முடியும். அதன் பின்னர், மக்களவைக்கும் மாநிலச் சட்டப்​பேர​வை​களுக்கும் ஒரே நேரத்தில் தேர்தல் நடத்தப்​படுகிற முறை அமலில் வரலாம். ஒரே தேர்தல் முறை வந்த பிறகு, மத்திய அரசு, மாநில அரசுகளில் ஒன்று கவிழ்ந்​தால், அல்லது அரசு அமைக்க முடியாத நிலை உருவானால், மீண்டும் தேர்தல் நடக்கும். அதில் தேர்வாகும் சபையின் காலம் ஐந்து ஆண்டுகளாக இருக்​காது. அதில் மீதி இருக்கும் காலம் மட்டுமே அதன் ஆயுள் காலமாக இருக்​கும்.

பழைய வரலாறு:

  • 1956இல் மொழிவாரி மாநிலங்கள் அமைந்த​போது, ஏழு மாநிலங்​களின் சட்டப்​பேர​வைகள் கலைக்​கப்​பட்டு, 1957இல் மக்களவைத் தேர்தலுடன் அந்த மாநிலத் தேர்தல்​களும் நடத்தப்​பட்டன. அப்படித் தீவிரமாக அமல்படுத்​தப்பட்ட ஒரே தேர்தல் முறை பின்னர் மாறியது. மக்களவைத் தேர்தலும், மாநில சட்டப்​பேரவைத் தேர்தல்​களும் பிரிந்தன.
  • ஒரு காலக்கட்டத்தில், இந்திரா காந்தி தலைமையிலான காங்கிரஸ் அரசு அரசியல் பகைமை காரணமாக அரசமைப்புச் சட்டக்கூறு 356-ஐப் பயன்படுத்தி மாநில அரசுகளைக் கலைத்தது, அதுவரை இருந்துவந்த தேர்தல் முறையில் ஒழுங்கற்ற தன்மையை ஏற்படுத்தியது கவனிக்கத்தக்கது. 1967இல் பல மாநிலங்​களில் காங்கிரஸ் பெரும்​பான்மை இழந்தது. நிலையற்ற கூட்டணி, கட்சித் தாவல்கள், அரசு கவிழ்க்​கப்​படுதல் போன்ற காரணங்​களுக்​காகப் பல்வேறு மாநிலங்​களில் தனித்​தனி​யாகத் தேர்தல்கள் நடைபெறத் தொடங்கின.
  • 1967க்குப் பிறகு, 1972இல் நடக்க வேண்டிய நாடாளு​மன்றத் தேர்தலை ஓராண்​டுக்கு முன்னதாக நாடாளு​மன்​றத்தைக் கலைத்து​விட்டு, 1971இலேயே அன்றைய பிரதமர் இந்திரா காந்தி நடத்தினார்; மக்களவை - சட்டப்​பேரவைத் தேர்தல்கள் பிரிந்தன. 1989இல் மத்தியில் காங்கிரஸ் பெரும்​பான்மை இழக்க, அடுத்த 10 ஆண்டு​களில் பதவிக்கு வந்த எதிர்க்​கட்சிக் கூட்டணி, அரசுகள் அடிக்கடி கவிழ்ந்​த​தால், 10 ஆண்டு​களில் ஐந்து மக்களவைத் தேர்தல்கள் நடைபெற்றன.
  • மத்தியில் ஐந்து ஆண்டு​களுக்குத் தேர்ந்​தெடுக்​கப்பட்ட கட்சி மாநிலத் தேர்தல்​களில் தோற்று​விட்​டால், மத்திய அரசைப் பாதிப்​பதும், மாநிலங்​களில் தேர்ந்​தெடுக்​கப்​படுகிற கட்சி, மக்களவைத் தேர்தலில் தோற்கடிக்​கப்​பட்​டால், மாநில அரசுகள் கவிழ்​வதும் தேர்தல் நடைமுறை​களில் பெரும் சிக்கல்களை ஏற்படுத்​தியது. தற்போது, ஒரே நாடு.. ஒரே தேர்தல் முறையால் ஒரே நேரத்தில் தேர்தல் நடத்து​வதைக் காரணம் காட்டி ஆட்சியைக் கலைப்​பதும் இதுபோன்ற ஒரு பெரும் சிக்கலை ஏற்படுத்​தும்.
  • மாநிலச் சட்டப்​பேரவைத் தேர்தல் என்பது அரசமைப்பின் 7ஆவது அட்டவணையில் உள்ள மாநிலங்​களின் பட்டியலில் உள்ளது. மாநிலச் சட்டப்​பேரவையை முன்கூட்டியே கலைக்கும் உரிமை மாநில அரசுக்​குத்தான் உண்டு. ஒரே நாடு.. ஒரே தேர்தல் நடைமுறை மூலமாக மாநில அரசுகளைக் கலைத்​தால், அந்த உரிமைகள் பறிக்​கப்​பட்டு​விடும். ஆகவே, இது அரசமைப்பின் அடிப்​படைக் கட்டமைப்​புக்கு எதிரானது. ஆக, பதவிக் காலம் முடியாத மாநிலங்​களில் சட்டப்​பேர​வையைக் கலைக்க வாய்ப்புகள் குறைவாகவே இருக்​கின்றன.
  • ஒரே நாடு.. ஒரே தேர்தல் நடத்தப்​பட்​டால், கறுப்புப் பணம் புழங்​குவது கணிசமாகக் குறையும். இரண்டாவது, தேர்தல் செலவு​களின் சுமை குறையும். நேர விரயம், வேட்பாளர்கள் மீதான செலவின் அழுத்​தமும் குறையும். சட்டப்​பேர​வைக்கும் நாடாளு​மன்​றத்​துக்கும் தனித்​தனி​யாகப் பிரச்​சாரம் செய்ய வேண்டிய​தில்லை என்கிற வசதிகள் இருந்​தா​லும், அவற்றை எவ்வாறு முழுமை​யாகச் செயல்​படுத்த முடியும் என்கிற கேள்வி எழுகிறது. அரசமைப்புச் சட்டத்தில் திருத்தம் கொண்டு வரலாமே தவிர, அதன் அடிப்​படைக் கட்டமைப்பை மாற்ற முடியாது என்பது சார்ந்து உச்ச நீதிமன்றம் பல்வேறு வழக்கு​களில் தீர்ப்பு வழங்கி​யிருக்​கிறது.
  • ஒரே நாடு.. ஒரே தேர்தல் திட்டத்​துக்கான உயர்மட்டக் குழு 18 அரசமைப்புத் திருத்​தங்​களைப் பரிந்​துரைத்​திருக்​கிறது. அவற்றில் பெரும்​பாலான திருத்​தங்​களுக்கு மாநிலச் சட்டப்​பேர​வை​களின் ஒப்புதல் தேவை. இருப்​பினும், இவற்றுக்குச் சில அரசமைப்புத் திருத்த மசோதாக்கள் தேவைப்​படும். அவை நாடாளு​மன்​றத்தில் நிறைவேற்​றப்பட வேண்டும். ஒற்றை வாக்காளர் பட்டியல், ஒற்றை வாக்காளர் அடையாள அட்டை தொடர்பாக முன்மொழியப்பட்ட சில மாற்றங்​களுக்குக் குறைந்தது, பாதி மாநிலங்கள் ஒப்புதல் அளிக்க வேண்டும்.
  • ஆகவே, ஒரே நேரத்தில் தேர்தல் நடத்துவது குறித்துத் தனது அறிக்கையைச் சட்ட ஆணையம் விரைவில் கொண்டுவர வாய்ப்பு உள்ளது. அரசாங்​கத்தின் மூன்று அடுக்​கு​களுக்கும் 2029 முதல் ஒரே நேரத்தில் தேர்தல் நடத்த​வும், யாருக்கும் பெரும்​பான்மை இல்லாத நாடாளு​மன்றம், சட்டப்​பேரவை ஏற்பட்​டால், ஒன்றிணைந்த அரசாங்​கத்​துக்கான ஏற்பாடு​களைச் செய்ய​வும், சட்ட ஆணையம் தயாராகி வருகிறது.
  • ஒரே நேரத்தில் தேர்தல்களை நடத்துவது தேசியக் கட்சிகளுக்கே சாதகமாக அமையும்; இது கூட்டாட்சித் தத்து​வத்​துக்கு எதிரானது என்று மாநிலக் கட்சிகள் கருதுகின்றன. ஒரே நாடு.. ஒரே தேர்தல் முறையை நடைமுறைப்​படுத்து​வ​தில், மத்தி​யிலும் மாநிலங்​களிலும் ஆட்சியில் இருக்கும் அரசியல் கட்சிகளுக்கு இடையிலான மோதல் போக்கு அதிகரிப்​ப​தை​யும், பிரிவினைவாத சக்திகள் வலுவடைவதையும் தவிர்க்க வேண்டிய கடமை மத்திய அரசுக்கு இருக்​கிறது.

நன்றி: இந்து தமிழ் திசை (15 – 10 – 2024)

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

Categories