TNPSC Thervupettagam

பிரிட்டன் சிறார் இலக்கியச் சூறாவளி

February 2 , 2025 6 hrs 0 min 12 0

பிரிட்டன் சிறார் இலக்கியச் சூறாவளி

  • லூ யி கரோல், ஆர்.எல்​.ஸ்​டீவன்​சன், பியாட்​ரிக்ஸ் பாட்​டர், எனிட் பிளைடன், ரோல் தால், ஜே.கே. ரௌலிங், ஜூலியா டொனால்ட்சன் என உலகக் குழந்தைகளை தங்கள் பால் ஈர்த்த பிரிட்​டிஷ் சிறார் எழுத்து மரபின் புதிய குழந்தை டேவிட் வாலி​யம்ஸ் (David Walliams).
  • ஒரு கணக்​கீட்​டின்படி அவருடைய 50-க்​கும் மேற்​பட்ட நூல்கள் மொத்​தமாக 5 கோடிக்கு மேல் விற்றுள்ளன, 55-க்​கும் மேற்​பட்ட மொழிகளில் அவருடைய நூல்கள் மொழிபெயர்க்​கப்​பட்​டுள்ளன. 2000-க்​குப் பின்பு எழுதத் தொடங்​கிய​வர்​களில் மிக அதிகமாக விற்ற சிறார் புத்​தகங்களை எழுதிய பெரு​மைக்​குரியவர் வாலி​யம்ஸ். இவ்வளவுக்​கும் அவருடைய முதல் சிறார் நூல் 2008இல்​தான் வெளி​யானது. அதுவரை ஒரு நகைச்​சுவை கலைஞராக, நடிகராக மட்டுமே அவர் அறியப்​பட்​டிருந்​தார். அந்த வகையில் எழுத்​தாளராக தற்போது அடைந்​துள்ள உலகப் புகழை அவர் பெரு​மித​மாகக் கருதுகிறார்.
  • பிரிட்​டனின் புகழ்​பெற்ற சிறார் எழுத்​தாளர் ரோல் தாலுடன் வாலி​யம்ஸ் ஒப்பிடப்​படு​கிறார். இதற்​குக் காரணம் ரோல் தாலின் எழுத்​தில் இருந்த குழந்தைகளை எளிதில் ஈர்க்​கும் தன்மை​யை​யும் வேடிக்கை-நகைச்​சு​வைத் தன்மை​யை​யும் வாலி​யம்ஸ் சில வகைகளில் பிரதிபலிப்​ப​தால்​தான். வாலி​யம்​ஸுக்​கும் ரோல் தாலுக்​கும் இடையே உள்ள மற்றொரு தொடர்பு, ரோல் தால் நூல்கள் புகழ்பெற ஒரு காரணமாக இருந்த ஓவியர் க்வின்​டின் பிளேக், வாலி​யம்​ஸின் முதல் 2 புத்​தகங்​களுக்கு வரைந்​தது​தான். பிளேக்​கின் ஓவியப் பாணி​யிலேயே வரையும் டோனி ராஸ், வாலி​யம்​ஸின் மற்ற நூல்​களுக்கு வரைந்​து​வரு​கிறார்.

வாசிப்பும் விருப்​ப​மும்:

  • பெண்கள் அணியும் நீண்ட உடையான டிரெஸ்ஸை ஒரு சிறுவன் அணிந்து பள்ளிக்​குச் சென்றால் என்ன நடக்​கும், அவனுடைய நண்பர்கள் எப்படி எதிர்​வினை ஆற்று​வார்கள் என்பதே ‘தி பாய் இன் தி டிரெஸ்’ எனும் அவருடைய முதல் சிறார் நாவல். இந்தக் கதையில் வரும் அந்தச் சிறுவன் கதாபாத்​திரத்​துக்கு உத்வேகமாக இருந்தது வேறு யாரு​மல்ல, சிறு வயது டேவிட் வாலி​யம்​ஸே​தான்.
  • அந்தப் புத்​தகம் தந்த வெற்றி​யின் மூலம் முக்​கியமான விஷயங்களை நகைச்​சுவை சேர்த்​துக் குழந்தை​களிடம் கடத்​தலாம் என நினைத்​திருக்​கிறார். வறுமை, வீடு இல்லாமல் இருப்​பது, செல்​வந்தர்க் குழந்தை​களின் தனிமை, நெருங்​கிய​வரின் இறப்பு, மறதி நோய் எனப் பல விஷயங்களை தன் சிறார் நாவல்கள் மூலம் வாலிம்ஸ் பேசி​யுள்ளார்
  • ‘‘டேவிட் காப்​பர்ஃபீல்ட், ஆலிவர் ட்விஸ்ட், வில்​லியம் ஷேக்ஸ்​பியரின் படைப்புகள் போன்ற​வற்றை ஒருவர் படிப்பது நிச்​சயம் புத்​திசாலித்​தன​மானது என்ப​தில் சந்தேகமில்லை. ஆனால், யாரும் எடுத்​தவுடனே அந்த நூல்​களைப் படிக்கத் தொடங்க மாட்​டார்​கள். எனவே, ஒரு குழந்​தையை வாசிக்க வைக்க, அவர்கள் ரசித்து அனுபவிக்​கும் விஷயங்களை தொடக்​கத்​தில் வாசிக்கத் தருவது முக்​கிய​மானது என நான் நினைக்​கிறேன்’’ என்கிறார்.
  • அடுத்த தலைமுறை வாசிக்க விரும்​புவ​தில்லை என்கிற அங்கலாய்ப்புகளை அதிக​மாகவே கேட்​கிறோம். அது பெரு​மளவு உண்மை. எவ்வளவு விமர்​சனம் இருந்​தா​லும் ஹாரி பாட்டர் நாவல் வரிசை​யின் வசீகரம் மூலம் பெருங்​கூட்​டத்தை வாசிப்பை நோக்​கித் திருப்​பியவர் ஜே.கே.ரௌலிங். அதேபோல் டேவிட் வாலி​யம்​ஸின் ‘மிஸ்டர் ஸ்டிங்க்’, ‘கேங்ஸ்டா கிரானி’, ‘பில்​லியனர் பாய்’ உள்ளிட்ட நூல்கள் பெரு​மளவு விற்​பனை​யாகி, தொலைக்​காட்​சித் தொடர்​களாக​வும் வெற்றி​பெற்றுள்ளன.

இந்தியக் குழந்தை​களு​டன்...:

  • இந்தியா வந்த டேவிட் வாலி​யம்ஸ், சென்னை, பெங்​களூரு, மும்பை, புனே, தலைநகர் டெல்லி, ஜெய்ப்​பூர் எனக் கடந்த மாதம் இறுதி வரை இந்தியா​வில் சுற்றுப் பயணம் மேற்கொண்டார். இதன் ஒரு பகுதியாக பொங்கல் திரு​விழாவை ஒட்டி சென்னை​யில் நடைபெற்ற தி இந்து இலக்​கியத் திரு​விழா​வில் அவர் பங்கேற்​றார். இந்த நிகழ்ச்​சி​யின்​போது குழந்தை​களும் பெற்​றோருமாக அரங்​க​மும் நிரம்​பிவழிய, பலரும் நின்​று​கொண்டே அவருடைய நிகழ்த்​துதலை கவனித்​துக்​கொண்​டிருந்​தார்​கள்.
  • இந்திய நடைமுறையைப் பின்​பற்றி எளிய கால்​சட்​டை-​முழுக்கைச்​சட்​டையை அணிந்​திருந்த அவர் நுழைந்த​போது அரங்கம் அதிர்ந்​தது. இவ்வளவுக்​கும் டேவிட் வாலி​யம்ஸ் திரை நட்சத்​திரமோ, விளை​யாட்டுப் பிரபலமோ கிடை​யாது.
  • அவருடைய நிகழ்ச்சி நடைபெற்ற கால அளவு அரை மணி நேரத்​துக்​கும் சற்றே அதிகம். ஆனால், அவ்வளவு குறுகிய நேரத்​தில் டேவிட் வாலி​யம்ஸ் தந்த அனுபவம் ஒரு எழுத்​தாளரிட​மிருந்து பொதுவாக யாரும் எதிர்​பார்க்காத ஒன்று. அடிப்​படை​யில் ஒரு நகைச்​சுவை நிகழ்த்​துக் கலைஞராக​வும் நடிகருமான வாலி​யம்ஸ் தன் திறமைகள் அனைத்​தை​யும் மிகச் சிறப்பாக வெளிப்​படுத்​தினார். தான் எழுதிய கதாபாத்​திரங்கள் சிலவற்றின் வசனத்தை பாவனை​யுடன் வாலி​யம்ஸ் வாசித்​துக்​காட்​டியது வரவேற்​பைப் பெற்​றது.
  • அத்துடன் தன் புகழ்​பெற்ற நூல்கள் உருவான விதம், தான் சித்தரித்த சில சுவாரசி​யமான கதாபாத்​திரங்​கள், அவற்றுக்கு உத்வேகமாக இருந்த நபர்​கள்​-சம்​பவங்​கள், தன் நூலின் சில பத்தி​கள், தன் வாழ்க்கை​யின் பழைய படங்​கள், சிறார் வாசகர்​களின் எதிர்​வினை-ப​தில்கள் என அவருடைய நிகழ்ச்சி சிரிப்​பலைகள், ஆச்சரி​யம், புது​மை​களால் நிரம்​பி​யிருந்​தது. ‘‘ஆலிஸின் அற்புத உலகம் உலகின் மிகச் சிறந்த சிறார் நூல். காரணம் அதுதான் முதல் சிறார் இலக்​கிய​மாகப் பரிணமித்தது என்றும் தனக்​குப் பிடித்த எழுத்​தாளர் ரோல் தால், அவர் எழுதிய ‘சார்லி அண்ட் தி சாக்​லேட் ஃபேக்​டரி’, ‘பி.எஃப்​.ஜி.’ ஆகியவை தனக்​குப் பிடிக்​கும் என்றும் கூறினார். எப்போதுமே சுயமாக சிந்​தித்து எழுதுங்​கள். எல்லோரிட​மும் கதைகள் குவிந்​துகிடக்​கும். அதை நாம்​தான் தேடிப் போக வேண்​டும் என்றும் வலியுறுத்​தினார்.
  • நிகழ்ச்சி முடிந்து திரும்​பிய​போது, இதில் பங்கேற்​ப​தற்​காகவே சேலத்​திலிருந்து வந்திருந்த தீவிர வாசகரும் ஆசிரியருமான ஒரு நண்பர் கேட்​டார், தமிழ் எழுத்​தாளர்கள் என்றைக்கு இதுபோல் மக்களை அணுகப் போகிறார்கள் என்று? இதை ஒட்டி​யும் டேவிட் வாலி​யம்ஸ் தன்னை முன்​வைத்​துக்​கொண்ட விதம் குறித்​தும் யோசித்த​போது சில விஷயங்கள் முக்​கிய​மாகப் பட்டன. அந்த நிகழ்ச்​சி​யில் வாலி​யம்ஸ் தன்னைத் தானே நிறைய பகடி செய்​து​கொண்​டார்.
  • அது மட்டுமல்​லாமல் குழந்தை​களிடம் இருந்து தனக்கு வந்த சில கடிதங்களை பகிர்ந்​து​கொண்​டார். அந்​தக் கடிதங்​களில் ‘அவருடைய புத்​தகம் தனக்​குப் பிடிக்க​வில்லை, சலிப்பாக இருந்​தது’ என்​றும், ‘தனக்கு பிடித்த ​முதல் எழுத்​தாளர் வாலி​யம்ஸ்​ அல்ல’ என்​றும் சில குழந்தை​கள் எழு​தி​யிருந்​ததை​யும் கவனப்​படுத்​தினார். நிச்சய​மாக, நாம் இன்னும்​ நிறைய தூரம்​ ​போக வேண்​டி​யிருக்​கிறது.

நன்றி: இந்து தமிழ் திசை (02 – 02 – 2025)

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

Categories