TNPSC Thervupettagam

மோடி என்னும் பிரம்மாண்ட ஆளுமை

February 8 , 2025 5 hrs 0 min 6 0

மோடி என்னும் பிரம்மாண்ட ஆளுமை

  • இந்தியா​வின் முக்​கியமான பிரதமர்​களில் ஒருவர் நரேந்திர மோடி. தொடர்ந்து மூன்​றாவது முறையாக அவர் இந்தியா​வின் சக்தி வாய்ந்த பிரதமராக அரியணை ஏறியிருக்​கிறார். மோடி​யின் அரசியல் வாழ்க்கை​யை​யும் அறியாத தனிப்​பட்ட வாழ்க்கை​யை​யும் இந்த நூல் அலசி ஆராய்ந்​துள்ளது. இதன் வழி பெரும்​பான்​மை​யானோர் அறியாத தகவல்கள் நம்மால் அறிய இந்த நுல் வழிகோல்​கிறது.
  • மோடி​யின் சொந்த ஊரான வாட்​நகர் பற்றிய சித்தரிப்​பில் இந்த நூல் தொடங்​கு​கிறது. குஜராத் மாநிலம், மெஹ்சானா மாவடத்தில் அமைந்​துள்ள ஊர் இது. இந்த ஊரின் அருமை பெரு​மை​களை​யும் இந்த நூல் கூறுகிறது. மோடி​யின் தாய், தந்தையரை​யும், உடன் பிறந்​தோரை​யும் புகைப்​படங்கள் வழியாக அறிமுகப்​படுத்து​கிறது இந்த நூல்.
  • அவரது தந்தை வாட்​நகர் ரயில் நிலை​யத்​தில் வைத்​திருந்த தேநீர்க் கடையின் புகைப்​படத்​தை​யும் இந்த நூல் காட்​சிப்​படுத்​தி​யுள்​ளது. அதன் வழி அங்கு சிறு​வய​தில் மோடி வேலை பார்த்த சித்திரத்தை மனது உருவாக்​கிக்​கொள்​கிறது. சிறு​வய​தில் மோடிக்கு இருந்த நல்ல குணங்​கள், தீர மனம் எல்லா​வற்​றை​யும் காட்சி விவரிப்பு​களாகவே இந்த நூல் பதிவுசெய்​துள்ளது சிறப்​புக்கு உரியது.
  • வாட்​நகரில் பகவதாச்​சார்யா நாராயணாச்​சார்யா பள்ளி​யில் மாணவனாக இருந்த மோடியை புகைப்​ படத்​துட​னும் அவரது பள்ளிக்காலத் திறனுட​னும் நூல் நமக்கு அறிமுகப்​படுத்து​கிறது. இளம் வயதிலேயே ஆன்மிக அறிவும் அரசியல் அறிவும் பெற்​றவராக மோடி திகழ்ந்​துள்ளார். அவர் அகமதாபாத்​தில் அரசியல் அறிவியலில் பட்டப் படிப்பு முடித்​துள்ளார். கல்வி ஒரு பக்கம் தொடர்ந்​தா​லும் ஆர்.எஸ்​.எஸ். இயக்கச் செயல்​பாட்​டாளராக அவர் சம காலத்​தில் செயலாற்றிவந்​தார். விவே​கானந்​தர், கர்மயோகத்​தைப் பின்​பற்றியது போல் மோடி​யும் மக்கள் சேவை வழியாக மகேசனைக் கண்டார் எனலாம்.
  • இந்தியா​வில் இந்திரா காந்தி ஆட்சிக் காலத்​தில் கொண்டு​வரப்​பட்ட நெருக்​கடிநிலை, நாட்​டின் ஜனநாயகத்​தைக் கேள்விக்கு உள்ளாக்​கியது. அந்தக் காலக் கட்டத்​தில் அதற்கு எதிராகப் போராடிய தலைவர்கள் பலர். ஜெய்​பிர​காஷ் நாராயண், மொரார்ஜி தேசாய், வாஜ்பாய் உள்ளிட்ட பல தலைவர்கள் முன்​களத்​தில் இருக்க, அவர்​களுக்​குப் பின்னே களமாடிய இளைஞர்​களில் மோடியும் ஒருவர்.
  • குஜராத் லோக் சங்கர்னஷ் சமிதி என்னும் ஒரு இயக்​கத்​தைத் தொடங்கி இந்திரா காந்தி அறிவித்த நெருக்கடி நிலை​யைக் கடுமையாக எதிர்த்​துள்ளார் மோடி. அந்தக் காலக்​கட்​டத்​தில் ஜனநாயகமற்ற முறை​யில் பல தலைவர்​களைக் கைதுசெய்து அரசு சிறை​யில் அடைத்து​வந்​தது. மோடி நெருக்​கடிநிலைக் காலகட்​டத்​தில் தலைமறைவாக இருந்து அரசியல் நடவடிக்கையை மேற்​கொண்​டார். அதாவது மாறு​வேட​மிட்டுச் செயல்​பட்​டார். அந்தப் புகைப்​படங்​களை​யும் இந்த நூல் காட்​சிப்​படுத்​தி​யுள்​ளது.
  • மோடி, பிரதம​ராகப் பதவி ஏற்ற காலத்​தில்​தான் உலகம் பொருளாதார நெருக்​கடி, கரோனா பொது முடக்கம் எனப் பல இன்னல்​களைச் சந்தித்​தது. அதை மோடி, ஒரு இந்தியப் பிரதம​ராக​வும், ஒரு உலகத் தலைவ​ராக​வும் எதிர்​கொண்ட விதம் உண்மை​யில் பாராட்டுக்கு உரியது.
  • அதை இந்த நூல் விரிவாகச் சொல்​கிறது. அந்தக் காலகட்​டத்​தில் பல ஐரோப்பிய நாடு​களுக்கே இந்தியா​தான் மருந்​துகளை விநி​யோகம் செய்தது என்பது கவனம் கொள்​ளத்​தக்​கது. இந்தியப் பிரதமர்​களில் அதிகம் வெளி​நாடு​களுக்​குச் சென்றவர் மோடி​தான். அதன் வழி இந்தியா​வில் வெளிநாட்டுறவைப் பலப்​படுத்​தி​யுள்​ளார். அதுவும் இந்த நூல் வழித் தெளிவாகச் சொல்​லப்​பட்​டுள்​ளது.
  • மோடி தன் ஆட்சிக் காலத்​தில் முன்னெடுத்த மக்கள் நலத் திட்​டங்​கள், தேசியப் பாது​காப்புத் ​திட்​டங்​கள் ​போன்றவை எல்​லாம் அது ​கொண்டு​வரப்​பட்ட கால வரிசைப்படி தொகுக்​கப்​பட்​டுள்ளன. மேலும் இந்த நூல் மோடி என்னும் ஆளு​மை​யின் ​முழு​மையை உணர்த்​தும் ​விதத்​தில் ஆ​தா​ரமான பு​கைப்​படங்​களுடன்​ ஆழ​மாகத்​ தொகுக்​கப்​பட்​டுள்​ளது.

நன்றி: இந்து தமிழ் திசை (08 – 02 – 2025)

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

Categories