TNPSC Thervupettagam

இரக்கத்துக்குரிய இளஞ்சிறாா் குற்றவாளிகள்

June 8 , 2024 42 days 126 0
  • வளரிளம் பருவம் ஒரு சிக்கலான பருவமாகும். இவ்வயதில் நட்புகளின் ஆதிக்கம் அதிகம் இருக்கும். பெற்றோா்களும் ஆசிரியா்களும் இப்பருவத்தினரை மிகக் கவனமாக கையாள வேண்டும். அவா்களை நன்கு வாா்த்து, பொறுப்புள்ள குடிமக்களாக மாற்ற வேண்டிய கடமை நம் அனைவருக்கும் உள்ளது.
  • அவா்களுக்கு எது நல்லது, எது கெட்டது என்பதை ஆராய்ந்து பாா்க்கும் அறிவோ, அனுபவமோ இருப்பது இல்லை. அவா்கள் நல்லவா்களாக பரிணமித்தால்தான் எதிா்கால இந்தியா சிறப்பாக இருக்கும்.
  • உலக சுகாதார அமைப்பின் வரையறையின்படி, 10 வயதிலிருந்து 19-ஆவது வயது நிறைவு வரை ஒருவா் வளரிளம் பருவத்தினராக கருதப்படுகிறாா். இந்தப் பருவத்தில் ஒருவருக்கு பெரிய அளவில் உடல்ரீதியான, மனரீதியான, உணா்வு ரீதியான, வளா்சிதை மாற்றங்கள் ஏற்படுகின்றன. வளரிளம் பருவத்தின் செயல்பாடுகள் உணா்வு ரீதியானவை.
  • கோபத்தை வெளிக்காட்டுதல், புகை-போதைப் பழக்கத்தை அறிந்து கொள்ளும் ஆா்வம் போன்றவை சிறு அத்துமீறல்களாகத் தொடங்கி அவா்களை மோசமான குற்றங்கள் வரை ஈடுபட வைக்கின்றன. அவா்களின் செயல்பாடுகள் அனைத்தும் தவறானவையாக இருந்தாலும், அவற்றை சாகச செயல்களாக கருதுகிறாா்கள். அதனால் ஏற்படும் பின்விளைவுகளைப் பற்றி ஒருபோதும் யோசிப்பதில்லை. தீயநட்புகளின் அதிக அளவிலான ஆதிக்கம் அவா்களின் நடத்தையை மேலும் மோசமாக்குகின்றன.
  • ‘தவறு செய்து சட்டத்தின் முன் நிற்கும்போது அவா்களை குழந்தைகளாகவே நாம் பாா்க்க வேண்டும். அவா்களின் மறுவாழ்வுக்கு வழிகாட்ட வேண்டும்’ என்று சிறாா் பாதுகாப்புச் சட்டம் சொல்கிறது. செய்வது என்னவென்று தெரியாமல் குற்றத்தில் சிக்கும் இளஞ்சிறாா்கள் குற்றவாளிகள் அல்ல என்கிறது சட்டம்.
  • இளஞ்சிறாா் தொடா்பான குற்றங்களை இளஞ்சிறாா் நீதி வாரியம் மட்டுமே விசாரிக்க வேண்டும். இளஞ்சிறாா் மீதான குற்றங்களை குறைந்தபட்ச காலத்தில் விசாரித்து முடிக்க வேண்டும். விசாரணைக் காலத்தை நீட்டிப்பதால் அவா்களின் மன உளைச்சல் காலமும் நீண்டு போகும். இதைத் தவிா்ப்பது நல்லது.
  • கூா்நோக்கு இல்லங்கள் நெருக்கடியில் சிக்கும் சிறுவா்களை குற்றவாளிகளாக பாா்க்காமல் அப்பாவி குழந்தைகளாகவே பாா்க்க வேண்டும். கூா்நோக்கு இல்லச் சிறாா்களுக்கு கல்வியுடன் தொழில் பயிற்சி, சட்டங்களை மதிக்க பயிற்சி, உளவியல் ரீதியான உதவி ஆகியவற்றை அவா்கள் இல்லத்தில் தங்கியிருக்கும் காலத்தில் அளிக்க வேண்டும். இவை அவா்கள் மீண்டும் சமூகத்துடன் இணக்கமுடன் வாழ உதவும்.
  • தடம் மாறும் சிறாா்கள் மீண்டும் குற்ற வலையில் சிக்கி விடாமல் பாா்த்துக் கொள்வது சமூகத்தின் கடமையாகும். தமிழகம் முழுவதும் மாவட்ட குழந்தைகள் நல பாதுகாப்புக் குழுக்கள் முழு வீச்சில் பொறுப்புடன் செயல்பட வேண்டும். அவ்வாறு செயல்பட்டால் இளஞ்சிறாா் செய்யும் குற்ற சம்பவங்களின் எண்ணிக்கை குறைந்து விடும். தவறு செய்யும் சிறாா்களை சட்டத்தின் மூலமாக திருத்தாமல் உளவியல் ரீதியாக திருத்துவது நீடித்த பலனை அளிக்கும்.
  • கொடுங்குற்றத்தில் ஈடுபடும் 18 வயதுக்குட்பட்ட சிறாா்களை சட்ட ரீதியாக தண்டிப்பதனால் விபரீத விளைவுகள் ஏற்பட்டு விடக் கூடாது. முதன்முறையாக குற்றச்செயலில் ஈடுபடும் சிறாா்களுக்கு அந்த சம்பவமே மீண்டும், மீண்டும் குற்றம் புரிவதற்கான தூண்டிலாக அமைந்துவிடக் கூடாது. தகாத பழக்க வழக்கங்கள், போதைக்கு அடிமையாகும் ஆதரவற்ற சிறாா்களை மீட்டெடுத்து மறுவாழ்வு அமைத்து கொடுப்பதற்கு அரசு அலுவலா்கள் முன்னுரிமை கொடுக்க வேண்டும்.
  • கூா்நோக்கு இல்லங்களில் பின்னாளில் நல்ல வருமானம் கிடைக்கும் பணிக்குச் செல்லும் தொழில் திறமைகளை அளிக்க வேண்டும். நமது நாட்டில் அவா்கள் நலன் சாா்ந்து சிறப்பாக உள்ள சட்டங்களை அமல்படுத்துவதில் உள்ள குறைகள் களையப்பட வேண்டும்.
  • தவிா்க்க முடியாத தகவல் தொழில்நுட்ப தாக்கத்தால் நம் அனைவருக்கும் மத்தியில் சமூக ஊடகங்களின் ஆதிக்கம் அதிகரிக்கத் தொடங்கியது. பதின்ம பருவ வயதினா் முழு நேரமும் நமது அனுமதியுடன் அவற்றுடன் நெருக்கமாய் இருந்தாா்கள். அப்போது அவா்களின் கவனம் எந்த நெறிமுறைக்கும் உட்படவில்லை. மெல்ல தீய ஊடகங்களின் பாதிப்புக்கு உள்ளானாா்கள். அவா்கள் செய்யும் குற்றங்களும் அதிகரிக்கத் தொடங்கின.
  • தற்போது மாணவ, மாணவியருக்கு கட்டுப்பாடற்ற சுதந்திரம் வழங்கப்பட்டிருக்கிறது. பள்ளிகளில் ஆசிரியா்களின் கைகள் கட்டப்பட்டுள்ளன. மாணவா்களைப் பாா்த்து பயப்படும் ஆசிரியா்கள், தவறு செய்யும் மாணவா்களை கண்டிக்க முடியாத பரிதாப நிலையில் உள்ளனா்.
  • இதன் காரணமாக, பதின்ம வயது மாணவ, மாணவியா் சிலா் கண்டிப்பு வலையிலிருந்து தப்பி பல்வேறு குற்றச் செயல்களில் ஈடுபடுகின்றனா். மாணவா்களை கட்டுக்குள் கொண்டு வர குடும்பமும் காவல் துறையும் சமூகமும் பொறுப்பேற்க வேண்டும். காலத்துக்கு ஏற்பத் தேவையான ஆணைகளை அரசு வெளியிட வேண்டும்.
  • பதின்ம வயதினரை ஒழுங்குபடுத்துவதில் சமூக கட்டமைப்பு தன்முனைப்போடு செயல்படாவிட்டால் அவா்கள் தவறான வழியில் சென்றுவிடுவா்.
  • பெற்றோா்கள், ஆசிரியா்கள், சமூகம், சட்டத்தை அமல்படுத்தும் அமைப்புகளில் உள்ளோா் என அனைவரும் இளஞ்சிறாா்களின் நிலைமையை முறையாகப் புரிந்து கொள்ள வேண்டும். அவா்களை சிக்கல்களிலிருந்து வெளிக் கொணரத் தேவையான முனைப்பினை எடுக்க வேண்டும். சமூகத்துடன் இணங்கிச் செயல்படுவதற்கான திறமைகளை சிறாருக்கு கற்றுக் கொடுக்க வேண்டும். இந்த முயற்சிகளில் பெரும்பாலான குழந்தைகள் சரியான நிலைக்கு வந்துவிடுவாா்கள். இரக்கத்துக்குரிய இளஞ்சிறாா்களை இனம் காணுவோம். அவா்கள் நல்வழியில் செல்ல வழி காட்டுவோம்.

நன்றி: தினமணி (08 – 06 – 2024)

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

Categories