TNPSC Thervupettagam

ஏ.ஐ.யும் இனி வரும் உலகமும்

August 15 , 2024 2 hrs 0 min 27 0

ஏ.ஐ.யும் இனி வரும் உலகமும்

  • மனித குல வரலாற்றில் மாற்றங்கள் இன்றியமையாதவை. மனிதர்​களின் கண்டு​பிடிப்பு​களின் வரிசையில் இன்னுமொரு சிகரம் செயற்கை நுண்ணறிவு. செயற்கை நுண்ணறிவின் வருகை ஒருவித பதற்றத்​தையும் அச்சத்​தையும் அளிக்​கிறது. மனிதர்கள் இதுவரை கண்டு​பிடித்தவை, அவர்களின் கட்டுப்​பாட்​டில்தான் இருந்தன.
  • ஒரு துப்பாக்​கியோ, அணுகுண்டோ அதற்குரிய விசையை இயக்கினால் மட்டுமே இயங்கும். ஆனால் செயற்கை நுண்ணறிவு, மனிதர்​களிட​மிருந்து எவ்வளவு விரைவாக, ஆழமாகக் கற்றுக்​கொள்ள முடியுமோ கற்றுக் கொண்டு, பன்மடங்கு ஆற்றலுடன் சுயமாக இயங்கக்​கூடிய வல்லமையைக் கொண்டுள்​ளது.
  • மாபெரும் மாற்றங்கள், எப்போதாவது ஏற்படு​வதைத்தான் உலகம் கண்டுள்ளது. இப்போது ஒரு சில மணி நேரத்​திலேயே புதிய கண்டு​பிடிப்புகள் ‘பிரேக்கிங் நியூஸ்’ போல வெளிப்​படு​வதைக் காண்கிறோம். இனி வரும் உலகம் எப்படி இருக்கும் என்பதுதான் உலகெங்கும் எழுந்​துள்ள கேள்வி. அது எத்தகைய விளைவுகளை ஏற்படுத்தும் எனக் கண்டறிவதே நம் முன்னுள்ள சவால்.

நன்மைகள் உண்டா?

  • மரபியலில் நினைத்துப் பார்க்க முடியாத விளைவுகளை செயற்கை நுண்ணறிவு உண்டாக்கும் என நம்பப்​படு​கிறது. CRISPR-Cas9 போன்ற மரபணு எடிட்டிங் கருவிகள் மூலம், மனிதர்​களின் டிஎன்ஏவைத் துல்லியமாக மாற்ற இயலும். இது தீர்க்க முடியாத நோய்களுக்கு வழிகாண உதவும்.
  • உதாரணமாக, 2019க்கு முன்பு, குணப்​படுத்த இயலாத சில நோய்களை இன்றைக்கு மரபணு எடிட்டிங் மூலமாகச் சரிசெய்ய முடிகிறது. நீரிழிவு, பக்கவாதம், புற்றுநோய் போன்றவற்றை முற்றி​லுமாக ஒழிக்க முடிய​லாம். குழந்தை கருவில் இருக்​கும்போதே குறைகளைச் சரி செய்ய முடியும்.
  • பூமியி​லிருந்து முற்றி​லுமாக அழிந்​துபோன உயிரினங்​களின் டிஎன்ஏ மாதிரி​களைக் கொண்டு, அவற்றை மீண்டும் உருவாக்கிட ஆராய்ச்​சிகள் நடைபெறுகின்றன. உதாரணமாக, பல ஆண்டு​களுக்கு முன்னர் அழிந்​துபோன மாமத யானை (Woolly Mammoth) போன்ற பெரிய யானைகளை​யும், ஆரோக்ஸ் என்னும் காட்டு மாடுகளையும் மீண்டும் உருவாக்குவது சாத்தியமாகலாம்.
  • உணவுக்காக ஆடு, மாடு, கோழிகள் வளர்க்​கப்​பட்டு, பின் கொன்று சாப்பிட வேண்டிய அவசியம் இல்லாமல் போகலாம். ‘கல்சர்’ முறையில் உருவாக்​கிக்​கொள்​ளலாம். முழு உயிராக அல்ல, விரும்பும் சுவையான பகுதிகளை மட்டும் உருவாக்க முடியும்.
  • முதலில் சிங்கப்​பூரில் விற்பனைக்கு வந்த இத்தகைய உணவு இன்று அமெரிக்கா, இஸ்ரேல் முதலிய நாடுகளில் வேகமாகப் பரவிவரு​கிறது. இவையெல்லாம் பரவலானால் சுற்றுச்​சூழல், சுகாதாரம், உணவுப் பற்றாக்குறை சார்ந்த பிரச்​சினைகளுக்கு முடிவுகட்ட முடியும்.
  • எல்லா​வற்​றையும் தாண்டி, ஆய்வகங்​களில் வடிவமைக்​கப்பட்ட குழந்தைகள் உருவாக்​கப்​படலாம். நோயற்ற, வலுவான, பேராற்றல் கொண்ட சந்ததி​யினர் உருவாக்​கப்​படக்​கூடும். மதம், இனம், சாதி, மொழி, நிறம் போன்ற பாகுபாடு​களற்ற ஒற்றைத்​தன்மை கொண்ட சமூகங்கள் அமையலாம். 2045க்குள் இறப்பற்ற நிலையை நோக்கி மனிதர்கள் நகர்வர் எனச் சில ஆய்வுகள் கணிக்​கின்றன. இதுவரை எவை கடவுள்​களின் தன்மை​களாகக் கருதப்​பட்டனவோ அவை மனிதர்கள் வசம் வந்து​விடும்.
  • ஆனால், இதுபோல் டிஎன்ஏவைத் திருத்துவது, ஆய்வக முயற்சிகள் ஆபத்தான விளைவுகள் ஏற்படு​வதற்குச் சாத்தி​யமுள்ளது என்பதை மறுக்க முடியாது. இதுபோன்ற தொழில்​நுட்​பங்களை யார் கட்டுப்​படுத்தப் போகிறார்கள் என்பதைப் பொறுத்தே விளைவுகள் அமையும்.

அதிசயங்கள் நிகழும்:

  • மூளையையும் கணினியையும் இணைக்கும் பிசிஐ (Brain-Computer Interface) தொழில்​நுட்​பத்தை நோக்கி அறிவியல் நகர்கிறது. இது முழுமையாக வெற்றியடைந்​தால், மூளை அடுக்​கு​களில் மின்னலைகளாகத் தோன்றும் எண்ணங்​களைக் கணினியில் கடத்தி, மனம் விரும்​புவதை இயந்திரங்கள் வழியாகச் செயல்​படுத்த முடியும். பக்கவாதம், விபத்து​களில் கை, கால் இழந்தவர்கள் இயல்பு நிலைக்குத் திரும்ப இத்தொழில்​நுட்பம் தற்போது உதவுகிறது.
  • ‘இத்தனை வேலை சொன்னா எப்படி? இருக்​கிறது இரண்டு கைகள்​தானே’ என்று கேட்பவர்கள், கூடுதலாகக் கைகளை உருவாக்​கிக்​கொள்​ளலாம். அவை உடலோடு ஒட்டி இருக்க வேண்டிய அவசியம் இல்லை. தனித்​திருக்​கும். வீட்டில் ‘அடுப்பை அணை, கதவைத் தாழ்ப்பாள் போடு’ என அலுவல​கத்​திலிருந்தே உத்தர​விடலாம்.
  • இந்தத் தொழில்​நுட்பம் அன்றாட வாழ்க்கையை எளிமையாக்க உதவும். நாம் அணியும் துணிகளில் மின்னணுச் சாதனங்கள் இழையாக அமைந்து, உடல்நிலை அளவீடுகளான இதயத்​துடிப்பு, ரத்த அழுத்தம் போன்றவை 24 மணி நேரமும் கண்காணிக்​கப்​படலாம். தேவைப்​பட்டால் உடனடி சிகிச்​சையளிக்​கலாம்.
  • டோபோமின் போன்ற வேதிப்​பொருள்கள் சுரப்பதன் அளவைக் கொண்டு எதிரில் இருப்பவர் என்ன மனநிலையில் இருக்​கிறார் என அறிந்து​கொள்​ளலாம். தேவையில்லாத சண்டைகள் தவிர்க்​கப்​படும். நாம் அறிந்​திராத மொழிகளில் பேசப்​படும் விஷயங்​களைப் புரிந்து​கொள்ள சாதனங்கள் ஏற்கெனவே சந்தைக்கு வந்து​விட்டன.

எப்படி எதிர்​கொள்வது?

  • வகுப்​பறை​யில், மனிதனோ, ஹியூமனாய்டோ வகுப்பு எடுக்​கும்​போது, மாணவர்கள் அவரவர்க்கு வேண்டிய வகையில் புரிந்து​கொள்ள வாய்ப்பு உண்டு. ஐஸ்கிரீம் பற்றி விவரிக்​கும்​போது, கண் முன்னே முப்பரிணா​மத்தில் மட்டுமல்ல, அதன் மணம், தொட்டால் குளிர்ச்சி, நாக்கை நீட்டினால் ருசி என ஆறு பரிணா​மங்​களில் கற்றுணர முடியும்.
  • எந்த வளர்ச்​சி​யிலும் நன்மைகள் மட்டுமல்​லாமல் பல தீமைகளும் உண்டு. அறம் சார்ந்த கேள்வி​களுக்​கும், மனிதத் தன்மைக்கும் செயற்கை நுண்ணறிவு உலை வைத்திடுமா என்கிற அச்சத்​துக்கு இதுவரை பதில் இல்லை. என்ன பாடத்​திட்​டங்கள், எந்த வகையில் கற்பிப்பது போன்றவற்றுக்கு உலகின் முன்னணிக் கல்வி நிறுவனங்களே விடை தெரியாமல் திண்டாடு​கின்றன.
  • இளைஞர்​களுக்கான வேலைவாய்ப்பு​களைச் செயற்கைத் தொழில்​நுட்பம் குறைத்து​விடலாம் என்ற அச்சம் பல்வேறு துறைகளில் நிலவு​கிறது. இளைஞர்கள் வாழ்நாள் முழுவதும் கல்வி, மாற்றங்களை எதிர்​கொள்​ளுதல், ஒன்​றில் மட்​டும் நிபுணத்துவம்​ பெறுவது என்​றில்​லாமல் பல திறன்​களைக் கற்றல்​ எனத் தங்​களைப் புதுப்​பித்​துக்​கொண்டே இருக்க வேண்​டும். செயற்கை நுண்ணறிவுத் தொழில்​நுட்பம்​ இதுவரை நாம் நினைத்​துப் பார்க்காத புதி​யதொரு உலகை முன்​வைக்​கப்​போகிறது என்ப​து மட்​டும்​ நிச்​சயம்​.

நன்றி: இந்து தமிழ் திசை (15 – 08 – 2024)

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

Categories