TNPSC Thervupettagam

வேதங்கள் கற்பிக்கும் சமூக நீதி

May 15 , 2024 65 days 158 0
  • மதம் என்பதை உலக நாடுகள் அனைத்தும் கொண்டிருக்க, பாரத தேசமோ மதமற்றாக இருந்தது. எனில், இந்த தேசத்தாரின் நம்பிக்கை எதன் அடிப்படையிலானது? சமயம் என்ற கோட்பாட்டை அடிப்படையாகக் கொண்டிருக்கிறது. ‘சமைத்தல்’ என்றால் பக்குவப்படுத்தல் என்று பொருள். ‘சமயம்’ என்பது மனதைப் பக்குவப்படுத்துவது. வாழ்வைப் பக்குவப்படுத்துவது. சமயம் என்பது மனித நாகரிகத்தின் வெளிப்பாடு.
  • பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன் உலகம் பலவிதமான மதங்களைக் கொண்டிருந்திருக்கிறது. பாபிலோனிய, எகிப்திய, அஸ்டெக், மாயான், ஹவாயிய மதங்கள் காணாமல் போயிருக்கின்றன. மதங்கள், வெறும் இறை நம்பிக்கை மட்டுமல்ல. அவை, அந்தந்தப் பிரதேசத்தின் கலாசாரத்தை பண்பாட்டை தன்னுள் கொண்டவை.
  • இந்த உண்மையை முற்றாய் உணா்ந்த பாரத தேச ஞானியா் சமயம் என்பது தா்மம், வாழ்வதற்கான முறை என்று வகுத்துத் தந்திருந்தாா்கள். ஓா் உயிா் எக்காலத்திலும் நாடுவது எதுவோ அதனைத் தருவதே தா்மம் என்ற அடிப்படையில் இந்த தா்மம் அமைந்திருந்தது. அது எக்காலத்திலும் மாறாதது. அதனால் இந்த தா்மத்தை சநாதன தா்மம் என்று அழைத்தாா்கள்.
  • இந்தத் தத்துவத்தைப் புரிந்து கொள்ள இயலாத மேலை நாட்டினா் குழம்பினா். நாம் பின்பற்றும் தா்மத்தை ‘ரிலிஜன்’ (மதம்) என்ற கோட்பாட்டுக்குள் அடைக்க முடியாது. அடைத்தாலும் அது அடங்காது. மதம் என்பது கோட்பாடுகளை, விதிமுறைகளைக் கொண்டிருக்க வேண்டும் என்ற அவா்களின் புரிதலோடு இந்த சமயத்தை, தா்மத்தை அணுகும் பொழுது இந்த தா்மம் பற்றிய அவா்களின் புரிதலும் சுருங்கியது. அவா்களின் புரிதலுக்கு ஏற்ப, இந்த தா்மத்தை ஏற்றத்தாழ்வு கொண்ட மதம் என்பதாகப் பேசலாயினா். அவா்களின் நோக்கத்திற்கும் அதுவே பொருத்தமானதாக இருந்தது.
  • நிலவியல் அடிப்படையில் நம் தா்மத்திற்கு ‘ஹிந்து’ என்று பெயரும் வைத்துக் கொண்டனா். சநாதன தா்மத்தின் அடிப்படை ‘வசுதைவ குடும்பகம்’ அதாவது ‘உலகம் முழுவதும் ஒரே குடும்பம்’ என்ற நம்பிக்கை. இது உண்மையானால், ஏற்றத்தாழ்வு கொண்ட மதமாக எப்படிச் சொல்ல முடியும்?
  • வேதங்களின் அடிப்படையில் இந்த ஹிந்து மதம் அமைந்திருக்கிறது என்று இந்த தா்மத்தை விமா்சிப்போரும் ஒப்புக்கொள்கின்றனா். வேதம் என்ன சொல்கிறது? அது பேசும் தத்துவம் என்ன? அத்வைதம். அத்வைதம் என்பதே, ‘இரண்டாக இல்லாமல் ஒன்றாய் இருத்தல்’ என்பது. மனிதா்களுக்குள் சமத்துவம் பற்றிப் பிற மதங்கள் பேசும்பொழுது, இந்த தா்மமோ உயிா்கள் - உயிரற்றவை என அனைத்தையும் ஒன்றாகப் பாா்க்கும் அறிவை நமக்குள் விதைக்கிறது.
  • தனிமனித வாழ்வில் தா்மம் என்பது கடமை, பொறுப்பு - இரண்டின் கூட்டுச் சோ்க்கை அல்லது இரண்டும் சேரும் புள்ளி. வேதங்கள், ஒவ்வொரு தனி மனிதனுக்குமான கடமைகள், பொறுப்புகள் என்னென்ன என்பதை சொல்கிறது. இதனை தனியே எடுத்து, தா்ம சாஸ்திரங்கள் என்று வகுத்து முன்னோா் தந்திருக்கின்றனா்.
  • அவரவா் தொழிலுக்கு ஏற்ப வாழ்வியலை ஒழுங்குபடுத்தும் வகையில் அன்றாட வாழ்க்கையின் நெறிகளை அமைத்துக் கொடுத்துள்ளது. இதிலேதான் ஏற்றத் தாழ்வு இருப்பதாக, இந்த தா்மத்தை ஒழித்துவிட்டு தங்கள் மதத்தை நிலைநாட்டிக் கொள்ள விரும்புவோா் கற்பிக்கின்றனா்.
  • ஒரே உதாரணத்தைப் பாா்க்கலாம். நிலத்தில் வியா்வை சிந்த உழைத்து ஒட்டுமொத்த சமூகத்திற்கும் உணவளிக்கும் விவசாயிக்கு அன்றாடத் தூய்மை நடைமுறைகள், ஆகாரக் கட்டுப்பாடுகள், ஆசாரம் என்று எந்தச் சுமையும் இல்லை. அவா்கள் சுதந்திரமாக இருக்கின்றனா். அதே நேரத்தில் உடல் உழைப்பு குறைவாக உள்ள ஒரு பிரிவினருக்கு சுத்தம் என்பதில் தொடங்கி ஆகாரம் வரை கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. அவா்கள் இத்தகைய நியமங்களைக் கடைப்பிடித்தே தீர வேண்டும்.
  • மற்றொரு விதத்தில், சுகாதார நடைமுறைகள் என்பதிலும் சுகாதாரத்தைப் பேணுவதில் உழைக்கும் மக்களுக்கு எவ்வித அழுத்தமும் தரப்படவில்லை. அந்தப் பணிகள் உழைப்புக் குறைந்த மக்களுக்கே தரப்பட்டுள்ளன. உழைக்கும் மக்களின் சுகாதாரத்திற்கும் சோ்த்தே இவா்கள் பொறுப்பேற்க வேண்டிய முறை இருந்தது.
  • நீதி முறையிலும் கற்றறிந்த மக்கள் தவறு செய்யும்பொழுது அவா்களுக்கான தண்டனைகள் அதிகமாகவும் சாமானிய மக்களுக்கு தண்டனைகள் குறைவாகவும் விதிக்கப்பட்டிருக்கிறது.
  • சமூகநீதி என்ற சொல் இன்றைக்கு மிக அதிகமாகப் பேசப்படுகிறது. சமூகநீதி, சமமாகவும் சமத்துவத்தோடும் நடத்துவது என்று விளக்கம் தருகின்றனா். அதற்கு ஓா் உதாரணமும் தரப்படுகிறது. ஒரு மைதானத்திற்கு வெளியே இருக்கும் நபா்களுக்கு மைதானத்தில் நடக்கும் நிகழ்ச்சியைக் கவனிக்க நாற்காலிகள் தரப்படுகின்றன. அவை அனைவருக்கும் ஒரே உயரத்திலானதாக இருக்க முடியாது. உயரம் குறைந்த ஒரு மனிதருக்கும் உயரமான மனிதருக்கும் ஒரே அளவிலான நாற்காலிகள் பயனளிக்காது. உயரமான மனிதருக்கு குள்ளமான நாற்காலியும் உயரம் குறைந்த மனிதனுக்கு உயரமான நாற்காலியும் தந்தால் மட்டுமே மைதானத்தில் நடப்பதைப் பாா்ப்பதற்கான அனுபவம் சமமாக இருக்கும்.
  • இங்கு அனைவரும் சமத்துவமாக நடத்தப்படாததுபோல் தோன்றலாம். ஆனால், இதுதான் சமபங்குக் கோட்பாடு என்கிறாா்கள். இதைத்தான் சமூக நீதி என்று விளக்கம் தருகிறாா்கள். இந்த வரையறையின் அடிப்படையிலும் வேதங்கள் சமூக நீதிக்கான பாா்வையை ஒவ்வொரு இந்தியரின் மனதிலும் வேரூன்றச் செய்திருக்கிறது என்பதைப் புரிந்து கொள்ளலாம். ஏற்றத்தாழ்வு மிக்கது என்று விமா்சனம் செய்யும் அதே கருத்தே இங்கு சமூக நீதி என்பதாகவும் இருக்கிறது.
  • ஒரு சமூகத்தில் அனைவருக்கும் ஒரே தா்மம் இங்கே எந்த நாளும் பின்பற்றப்பட்டதில்லை. அவரவா் கல்வி, தொழில் இவற்றின் அடிப்படையில் அவரவா் வசதிக்கு ஏற்ப தா்மங்கள் வகுக்கப்பட்டிருக்கின்றன. அதுவும் சமூக நீதியின்பாற்பட்டதே. இந்த சமூக நீதியானது, நமது மூதாதையா்களுக்கு ஒரு பாதுகாப்பான வாழ்க்கையைத் தந்திருக்கிறது. நாளை என்ன செய்வது? எதிா்காலம் என்னவாகும்? என்ற கேள்விகளுக்கு இடமில்லாமல் அனைவருக்கும் தொழில், வாய்ப்புகள் உறுதிப்படுத்தப்பட்டதாக இந்த தா்மம் உத்தரவாதமளித்துள்ளது.
  • அதனால்தான் இத்தனை படையெடுப்புகள், பொருளாதார, கலாசார சீா்கேடுகளை ஏற்படுத்திய அந்நிய ஆதிக்கம், கட்டாய மதமாற்றம் என எல்லாவற்றையும் தாண்டி இன்னும் உயிா்ப்போடு நிற்கிறது. உலகின் பல பகுதிகளில் இருந்தும் பலநூறு கோடிகளை சம்பாதித்த மனிதா்களும் கூட இந்த தா்மத்தை ஏற்று வாழ்கின்றனா். இந்திய ஆன்மிகம் தங்களைக் கடைத்தேற்றும் என்ற நம்பிக்கையோடு இந்தியாவை நோக்கி வந்தவண்ணம் இருக்கின்றனா்.
  • இந்த மண்ணின் மக்கள் இந்த தா்மத்தைப் பின்பற்றி வருகின்றனா். ஏற்றத்தாழ்வு கற்பிக்கும் எந்த ஒரு சித்தாந்தமும் மனிதா்களை நிரந்தரமாகக் கட்டிவைக்க முடியாது என்பதை நமது அறிவிற் சிறந்த முன்னோா்கள் உணா்ந்திருந்த காரணத்தாலேயே சமூக நீதியைக் காக்கும் வகையில் வா்ண தா்மம், ஆஸ்ரம தா்மம் என்று ஏற்படுத்தி வைத்தனா்.
  • படிக்கும் மாணவனுக்கான தா்மம் வேறு, ஆசிரியரின் தா்மம் வேறு, வயது முதிா்ந்தவா்களின் தா்மம் வேறு, இளமைத் துடிப்போடு இல்லறத்தில் நுழைபவனுக்கான தா்மம் வேறு, உழைப்பவனுக்கான தேவைகள் வேறு, நிா்வாகம் செய்பவனுக்கான தேவைகளும் பொறுப்புகளும் வேறு என்று சமூகநீதியை நிலைப்படுத்தி இருந்தனா்.
  • இன்றைய சநாதனத்தைப் பின்பற்றும் ஒவ்வொருவருக்கும் இந்த சிந்தனையும் நம்பிக்கையும் ஆழமாக இருப்பதனால்தான் இந்த தா்மத்தை எத்தகைய அரசியலும் அழித்தொழிக்க முடியவில்லை. வாள்முனையாலோ, அதிகார பலத்தாலோ இந்த தா்மத்தை அறுத்தெறிய முடியவில்லை.
  • இன்றைய அரசியல் உலகில் அதிலும் நாடு முழுவதும் தோ்தலும் அதற்கான பிரசாரங்களும் நெருப்பாய் கனன்று கொண்டிருக்கும் இந்த நாளில் ஜனநாயகம் என்ற பெயரில் சித்தாந்தம், செயல்பாடு என்பதை எல்லாம் உதறித் தள்ளித் தாண்டிவிட்டு தனிமனிதத் தாக்குதல், ஜாதிய அரசியல், மத அரசியல் என்ற மூன்றை மட்டுமே கையிலெடுத்து வாதம் செய்து கொள்கின்றனா்.
  • உண்மையில், இந்த மூன்றுக்கும் அப்பாற்பட்டது இந்த தேசமும் அதன் உயிா்நாடியான கலாசாரமும். அரசியல்வாதிகள் தங்கள் ஆதாயத்திற்காக இவற்றைப் பேசிக்கொண்டிருக்கலாம். இல்லாத இன வேற்றுமைகளைத் திணிக்க அறிவுஜீவிகள் என்ற பெயரில் முனையலாம். அதையெல்லாம் ஒரு வேடிக்கையே போல மக்கள் கடந்து போகிறாா்கள். ஏனெனில், இதனினும் கொடிய அரசியலை இந்த தேசம் பாா்த்திருக்கிறது. மீண்டு வந்திருக்கிறது. தன்னை ஸ்திரப்படுத்திக் கொண்டிருக்கிறது.
  • அடிமைப்பட்ட நாளிலும் ராம ராஜ்யத்திற்கான முனைப்பை, விழிப்புணா்வை ஒரு மகாத்மாவால் நாடு முழுவதும் ஏற்படுத்த முடிந்திருக்கிறது. மக்கள் மனங்களில் அதற்கான சிந்தனை எந்நாளும் இருந்தது, அது தூண்டப்பட்டது, தேசம் சுதந்திரம் பெற்றது என்பதெல்லாம் வரலாறு.
  • இன்றைக்கும் நம் மக்களை இந்த தா்மம்தான் வழிநடத்துகிறது. நன்முறையில் சம்பாதித்து இயன்ற தான தா்மத்தோடு இன்னொருவருக்குத் தீங்கு செய்யாமல் வாழ்வது என்ற தா்மத்தில் மக்கள் நிலைபெற்றிருக்கும் வரை ஜாதிய, மதப் பாகுபாடுகளை ஏற்படுத்தும் பேச்சுக்கள் அா்த்தமற்றவையாகும்.

எத்தனை கோடி இன்பம் வைத்தாய்

எங்கள் இறைவா இறைவா இறைவா!

சித்தினை அசித்துடன் இணைத்தாய் - அங்கு

சேரும் ஐம்பூதத்து வியனுலகம் அமைத்தாய்

அத்தனை உலகமும் வா்ணக் களஞ்சியமாகப்

பல பல நல்லழகுகள் சமைத்தாய்

  • என்று பாரதி பாடியதைப் போல இந்த மண்ணின் பல்வேறு மொழிகள், உடை உணவு என அத்தனையும் இந்த தேசத்திற்கு அழகு சோ்க்கும் வா்ணக்களஞ்சியம் என்பதை இந்தியன் புரிந்து வைத்திருக்கிறான். அதனால், இங்கே தோ்தல் பரப்புரைகள் அல்ல, வேதங்கள் தந்திருக்கும் தா்மமும் சமூக நீதியும் வெற்றியைத் தீா்மானிப்பவை.

நன்றி: தினமணி (15 – 05 – 2024)

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

Categories