TNPSC Thervupettagam

‘எக்ஸ்-ரே’ எடுப்பதில் ஏன் இவ்வளவு தடைகள்?

February 11 , 2025 2 hrs 0 min 19 0

‘எக்ஸ்-ரே’ எடுப்பதில் ஏன் இவ்வளவு தடைகள்?

  • நான் ஒரு ஓய்வுபெற்ற மருத்துவர். எளிய மக்களின் உடல்நலம் காக்கும் செயல்பாடுகள் சார்ந்து ஓர் அமைப்புடன் இணைந்து செயல்பட்டுவருகிறேன். தமிழகத்தின் பெரும்பாலான ஆரம்ப சுகாதார நிலையங்களில் ‘எக்ஸ்-ரே’ பரிசோதனை மேற்கொள்ளப்படுவதில்லை. என்னிடம் சிகிச்சை பெற வருபவர்களும், என் மருத்துவ நண்பர்கள் பலரும் இதைச் சுட்டிக்காட்டினார்கள்.
  • ‘எக்ஸ்-ரே’ என்பது மிக அடிப்​படையான ஒரு பரிசோதனை முறை; பல்வேறு நுரையீரல் நோய்களைக் கண்டறிய இது உதவுகிறது. நிமோனியா, காசநோய், நுரையீரல் வீக்க நோய், புற்று​நோய், கோவிட் போன்ற எண்ணற்ற நோய்களை ஆரம்ப நிலையிலேயே கண்டறிய உதவுகிறது. நியாய​மாகப் பார்த்தால் அனைத்து ஆரம்ப சுகாதார நிலையங்​களும் ‘எக்ஸ்-ரே’ வசதி உள்ளதாக இருக்க வேண்டும். ஆனால், உண்மை நிலவரம் அப்படி இல்லை! தமிழகத்தில் ஏறத்தாழ 2,200 ஆரம்ப சுகாதார நிலையங்கள் செயல்​பாட்டில் உள்ளன.
  • இவற்றில் 320 நிலையங்​களில்தான் ‘எக்ஸ்-ரே’ வசதி உள்ளது. எனினும், இந்த நிலையங்​களிலும் அந்த வசதி முழுமை​யாகப் பயன்பாட்டில் இருக்​கிறதா என்பது முக்கியமான பிரச்​சினை. நிறைய இடங்களில் ‘எக்ஸ்-ரே’ இயந்திரம் சரிசெய்ய முடியாத அளவுக்குப் பழுதடைந்து உள்ளது.
  • இயந்திரம் நல்ல நிலையில் இருக்கும் இடங்களில் ‘எக்ஸ்-ரே’ பிலிம் பற்றாக்குறை நிலவு​கிறது. ஒரு மாதத்தில் ஒரு நிலையத்தில் அதிகபட்சம் ஐந்து ‘எக்ஸ்​-ரே’தான் எடுக்க முடிகிறது. ஆரம்ப சுகாதார நிலையங்கள் மட்டுமல்​லாமல், தாலுகா அரசு மருத்​துவ​மனை​களிலும் பிலிம் பற்றாக்குறை நிலவிவரு​கிறது. ‘எக்ஸ்-ரே’ எடுக்க, நோயாளி​களிடம் ரூ.20 வசூலிக்​கப்​படு​கிறது. இந்தப் பணத்திலேயே பிலிம் வாங்கி​விடலாம்.
  • இப்படியான பிரச்சினைகள் காரணமாக, சாதாரண ‘எக்ஸ்-ரே’ எடுக்க நோயாளி பல கி.மீ. அலைய வேண்டி​யுள்ளது. தற்போது 100 நாள் தீவிர காசநோய் கண்டறியும் முகாம் இந்தியா முழுவதும் நடைபெற்று​வரு​கிறது. இந்த முகாமில் ஒரு திட்டமாக அனைத்து சர்க்கரை நோயாளி​களுக்கும் ‘எக்ஸ்-ரே’ எடுக்​கப்பட வேண்டும் என்று மத்திய அரசு வலியுறுத்து​கிறது.
  • தமிழ்​நாட்டில் சுமார் 1 கோடி சர்க்கரை நோயாளிகள் உள்ளனர். இருக்கும் உள்கட்​டமைப்பு வசதிகளை வைத்து அனைவருக்கும் ‘எக்ஸ்-ரே’ எடுக்க முடியாது. தனியாரிடம் இந்தப் பணியை ஒப்படைக்கத் திட்டம் உள்ளதாகத் தெரிகிறது. இப்படியான சூழலில், அரசு உடனடியாக அனைத்து ஆரம்ப சுகாதார நிலையங்​களிலும் ‘எக்ஸ்-ரே’ பிலிம் குறை​பாட்டைச் சரிசெய்ய வேண்​டும்​.

நன்றி: இந்து தமிழ் திசை (11 – 02 – 2025)

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

Categories