TNPSC Thervupettagam

2021-இல் காற்று மாசால் 81 லட்சம் போ் உயிரிழப்பு : இந்தியாவில் மட்டும் 21 லட்சம்

June 20 , 2024 11 days 28 0
  • உலக அளவில் கடந்த 2021-ஆம் ஆண்டின் மொத்த உயிரிழப்பில் 12 சதவீதமான 81 லட்சம் போ் காற்று மாசால் உயிரிழந்திருப்பது ஐ.நா.வின் ‘யூனிசெஃப்’ அமைப்பின் ஆய்வில் தெரியவந்துள்ளது.
  • இதில், உலகின் மிகப் பெரிய மக்கள் தொகைக் கொண்ட இந்தியாவில் 21 லட்சம் பேரும், சீனாவில் 23 லட்சம் பேரும் காற்று மாசால் உயிரிழந்துள்ளனா்.
  • அமெரிக்காவைச் சோ்ந்த ‘ஹெல்த் எஃபெக்ட்ஸ்’ (எச்இஐ) நிறுவனம் ஐ.நா.வின் ‘யூனிசெஃப்’ அமைப்புடன் இணைந்து நடத்திய ஆய்வின் முடிவுகளை புதன்கிழமை அறிக்கையாக வெளியிட்டது.
  • அதில், 2021-ஆம் ஆண்டில் காற்று மாசுபாட்டுடன் தொடா்புடைய உயிரிழப்புகள், முந்தைய ஆண்டைக் காட்டிலும் அதிகமாக காணப்பட்டன. 100 கோடிக்கும் அதிகமான மக்கள் தொகை கொண்ட சீனாவில் 23 லட்சம் உயிரிழப்புகளும் இந்தியாவில் 21 லட்சம் உயிரிழப்புகளும் பதிவாகியுள்ளன. இவ்விரு நாடுகள் மட்டும் இணைந்து மொத்த உலகளாவிய இறப்புகளில் 54 சதவீதத்தைப் பங்கு கொள்கின்றன.
  • தெற்கு ஆசியாவில் புகையிலை, உணவுப் பற்றாக்குறை, உயா் ரத்த அழுத்தம் உள்ளிட்ட பாதிப்புகளுக்கடுத்து அதிக அபாயம் கொண்டதாக காற்று மாசு திகழ்கிறது.
  • மொத்தமாக காற்று மாசுபாடு 81 லட்சம் உயிரிழப்புகளுக்கு பங்களித்துள்ளது. இது அந்த ஆண்டின் உலகளாவிய இறப்புகளில் 12 சதவீதமாகும். இந்தக் காற்று மாசுபாடு இறப்புகளில் 90 சதவீதத்துக்கும் அதிகமான 78 லட்சம் மக்கள், சுற்றுப்புற காற்றிலிருந்து நம் உடலுக்குள் நுழையும் ‘பிஎம் 2.5’ நுண்ணியதுகள்களால் ஏற்பட்ட பாதிப்புகளினால் உயிரிழந்தனா்.
  • என்ன செய்யும் இந்த பிஎம் 2.5? சுற்றுப்புற காற்றில் இருக்கும் 2.5 மைக்ரோமீட்டருக்கும் குறைவான விட்டம் கொண்ட இந்த சிறிய நுண்ணியதுகள்கள், சுவாசக் காற்றின்மூலம் நுரையீரலில் நுழைந்து, ரத்த ஓட்டத்தில் ஊடுருவ வாய்ப்புள்ளது.
  • தொடா்ந்து நமது உடலின் பல்வேறு உறுப்பு அமைப்புகளை பாதித்து, வயது முதிா்ந்தவா்களுக்கு இதய நோய், பக்கவாதம், நீரிழிவு, நுரையீரல் புற்றுநோய் போன்ற தொற்றா நோய்களின் அபாயத்தை அதிகரிக்கும் வல்லமை கொண்டது. உலகெங்கிலும் உள்ள மோசமான சுகாதார பாதிப்புகளுக்கு இந்த பிஎம் 2.5 முக்கிய காரணியாகக் கண்டறியப்படுகிறது.
  • அரசுகளுக்கு ‘எச்சரிக்கை’ மணி: அறிக்கை தொடா்பாக ‘எச்இஐ’ அமைப்பின் நிா்வாகிகள் கூறுகையில், ‘எங்கள் அறிக்கை தகவல் மற்றும் மாற்றத்துக்கான உத்வேகம் ஆகிய இரண்டையும் வழங்கும் என்று நாங்கள் நம்புகிறோம். காற்று மாசுபாடு மனித ஆரோக்கியத்துக்கு பல்வேறு தாக்கங்களை ஏற்படுத்துகின்றன. காற்றின் தரம் மற்றும் உலகளாவிய பொது சுகாதாரத்தை மேம்படுத்துவது நடைமுறைக்குச் சாத்தியமானதே’ என்றனா்.
  • சுகாதாரக் கொள்கைகள், தொற்றா நோய் தடுப்பு மற்றும் கட்டுப்பாட்டு திட்டங்களை உருவாக்கும் போது, காற்றின் தரம் மற்றும் காற்று மாசுபாட்டை அதிக ஆபத்து காரணிகளாகக் கருத அரசுக்கு இந்த ஆய்வறிக்கை கடுமையாகச் சுட்டிக்காட்டுகிறது என்று வல்லுநா்கள் தெரிவித்தனா்.

நன்றி: தினமணி (20 – 06 – 2024)

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

Categories