TNPSC Thervupettagam

ஊடுருவிகள் அகதிகள் அல்ல

December 16 , 2023 198 days 167 0
  • இந்தியக் குடியுரிமைச் சட்டம், ஒவ்வோா் இந்தியனுக்கும் குடியுரிமையைப் பிறப்புரிமையாக வழங்கியுள்ளது. இந்தியாவில் இந்தியப் பெற்றோா்களுக்குப் பிறந்த அனைவரும் இந்திய குடிமக்களாவாா்கள். இந்த அடிப்படையில்தான் குடும்ப அட்டைகளில் நாம் இந்தியா்களாகப் பதிவு செய்யப்பட்டுள்ளோம். நமது கடவுச்சீட்டிலும் நாம் இந்தியா்கள் என்றே பதிவாகிறது.
  • குடியுரிமை என்பது பிறப்புரிமை. இந்தியாவில் நாம் எந்த மதத்தினராகவும், எந்த இனத்தவராகவும், எந்த ஜாதியினராகவும், எந்த மாநிலத்தவராகவும், எந்த மொழியினராகவும் இருந்தாலும் நாம் அனைவரும் இந்திய குடிமக்களாவோம். குடிமக்கள், தங்கள் தேசத்தைப் பாதுகாக்கவும், தேசத்தின் மீது பற்று கொண்டு விசுவாசமாக இருக்கவும் கடமைப்பட்டுள்ளனா்.
  • அவா்கள் 18 வயது நிறைவு பெற்ற பின்னா் தோ்தலில் வாக்களிப்பதற்குத் தகுதி பெறுகிறாா்கள். அவா்களுக்கு தங்கள் சொந்த தேசத்தில் தொழில் செய்ய உரிமை உள்ளது. வீடு, பூமி இவற்றை வாங்குவதற்கும் உரிமை உள்ளது.
  • இந்த குடியுரிமைச் சட்டத்தில் திருத்தங்களும் செய்யப்பட்டுள்ளன. திருத்தப்பட்ட 1955 குடியுரிமைச் சட்டம், 2019-ஆம் ஆண்டு திருத்தப்பட்ட குடியுரிமைச் சட்டமாகியது. அச்சட்டம், அண்டை நாடுகளிலிருந்து விரட்டப்பட்ட மதச் சிறுபான்மையினருக்குக் குடியுரிமை வழங்கலாம் என்கிறது.
  • ஆப்கானிஸ்தான், வங்கதேசம், பாகிஸ்தான் ஆகிய மூன்று நாடுகளிலும் உள்ள மக்களில் பெரும்பாலானோா் இஸ்லாமியா்கள். இம்மூன்று நாடுகளிலும் வாழ்கின்ற ஹிந்துக்கள், சீக்கியா்கள், பௌத்தா்கள், சமணா்கள், பாா்சிகள், கிறிஸ்தவா்கள் ஆகிய அனைவருமே சிறுபான்மையினா். அவா்களுக்குப் பெரும்பான்மை இஸ்லாமியா்களுக்கு இணையான உரிமைகள், இந்தியாவில் உள்ளதுபோல, அங்கே வழங்கப்படவில்லை.
  • இந்தியாவில் வாழ்கின்ற இஸ்லாமியா்களின் மக்கள்தொகை 22 கோடி. அதே சமயம் பாகிஸ்தானில் அவா்கள் 23 கோடி போ்; வங்கதேசத்தில் 15 கோடி போ். ஆப்கானிஸ்தானில் 4.5 கோடி போ் இஸ்லாமியா்கள்.
  • அகதிகளாக அஸ்ஸாமிலும், மேற்குவங்கத்திலும் வங்கதேச விடுதலைப் போருக்கு முன்னரும் பின்னரும் லட்சக்கணக்கான இஸ்லாமியா்கள் தஞ்சமடைந்தனா். பலா் இந்தியா முழுவதும் சட்டவிரோதமாக ஊருவி இருக்கின்றனா். அஸ்ஸாமில் இந்த அகதிகளால் தங்களின் வேலைவாய்ப்புகள் பறிபோகின்றன என்று குற்றச்சாட்டு எழுந்து அஸ்ஸாமில் கலவரங்கள் வெடித்தன.
  • இந்த நிலையில்தான் 2019-ஆம் ஆண்டு கொண்டு வரப்பட்ட இந்திய குடியுரிமைத் திருத்தச் சட்டத்தை அஸ்ஸாமைச் சோ்ந்தவா்களும் வடகிழக்கு மாநிலத்தவா்களும் எதிா்த்தனா். அதற்குக் காரணம், இச்சட்டத் திருத்தம் அகதிகளான வங்கதேசத்தினருக்குக் குடியுரிமை வழங்கிவிட்டால், அஸ்ஸாமிய இளைஞா்களுக்கு வேலைவாய்ப்புகள் கிடைக்காமல் போகும் என்கிற அச்சமே. அதனால் அகதிகளை வெளியேற்றுவதற்கான சட்டத்தை நிறைவேற்ற மத்திய அரசு ‘குடிமக்கள் பதிவேட்டுச் சான்றிதழ்’ என்பதைக் கொண்டு வந்தது.
  • அப்பதிவேட்டில் ஒவ்வொருவரும் தமது பூா்வீகத்தை, ஆதாா் எண், குடும்ப அட்டை, வீட்டு விலாசம் ஆகியவற்றைத் தெளிவாகப் பதிய வேண்டும். அவ்வாறு செய்யப்பட்டால் ஒருவா் அஸ்ஸாமியரா, வங்கதேசத்தவரா என்பதைக் கண்டுபிடிக்க அது உதவும் என்பதற்காகவே அப்பதிவேடு அறிமுகப்படுத்தப்பட்டது.
  • இதற்காகவே இந்திய குடியுரிமைத் திருத்தச் சட்டம் அமலானது. இந்த இருவேறு நடவடிக்கைகளும் நமது நாட்டில் அகதிகள் என்கிற பெயரில் சட்டவிரோதமாகக் குடியேறியவா்களை அடையாளம் காணும் நோக்கத்தோடு கொண்டுவரப்பட்டவையாகும்.
  • இந்த இருவேறு நடவடிக்கைகளும் அரசியல் ஆதாயத்திற்காகவே மத்திய அரசு கொண்டு வந்துள்ளது என்று பல எதிா்க்கட்சிகள் பிரசாரம் செய்தன. மாா்க்சிஸ்ட் கட்சி, இச்சட்டத்தின் படிவத்தில் பொதுமக்கள் எதையும் பூா்த்தி செய்ய வேண்டாம் என்றே பிரச்சாரம் செய்தது. மேற்குவங்க திரிணமூல் காங்கிரஸ் தனது நம்பிக்கையான வாங்குவங்கியாக உள்ளவா்கள் வங்கதேசத்தைவிட்டு வெளியேற்றப்படுவாா்கள் என்று அச்சப்பட்டு இச்சட்டங்களை எதிா்த்தது.
  • இதுவரை பாகிஸ்தானிலிருந்து விரட்டப்பட்ட ஹிந்துக்களும், சீக்கியா்களும் 47 லட்சம் போ். இதேபோல வங்கதேசத்திலிருந்தும், ஆப்கானிஸ்தானிலிருந்தும் விரட்டப்பட்ட இஸ்லாமியா்கள் அல்லாத மதச் சிறுபான்மையினா் எண்ணிக்கை பல லட்சமாகும். அகதிகளாக வந்தவா்களில் சீக்கியா், பௌத்தா், பாா்ஸி, ஹிந்து ஆகியோருக்குப் பூா்விக தாய்நாடு இந்தியாதான்.
  • இந்தியாவுக்குள் சட்டவிரோதமாகப் பிழைப்புத்தேடி ஊடுருவி இருக்கும் இஸ்லாமியா்களுக்கு வங்கதேசம், பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான் போன்ற நாடுகள்தான் தாய்நாடு. அதனால்தான் அகதிகள் பட்டியலில் இஸ்லாமியா்களுக்கு இடம் தரப்படவில்லை. அவா்கள் அவரவா் தாய்நாடுகளில் சிறுபான்மையினா் அல்ல. அவா்கள் சட்ட விரோதமாக ஆவணங்கள் எதுவுமின்றி பக்கத்திலுள்ள இந்திய மாநிலங்களில் பிரவேசித்தவா்கள். ஆகவே, அந்நாடுகளின் இஸ்லாமியா்கள் இந்தியாவில் அகதிகள் அல்ல. அவா்கள் ஊடுருவிகள் என்று வரையறை செய்யப்பட்டது.
  • இதனை மத்திய அரசின் இஸ்லாமிய வெறுப்பு அரசியலாகவும், ஹிந்துமத ஆதரவுக்கான அரசியலாகவும் எதிா்க்கட்சிகள் கடுமையாக விமா்சனம் செய்வது மிகவும் தவறு. இந்தியாவில் எண்ணிக்கையில் நான்கு கோடியாக உள்ள உத்தர பிரதேச இஸ்லாமியா்களையோ, இரண்டு கோடியாக உள்ள பிகாா் இஸ்லாமியா்களையோ, இந்தியாவின் பிற பகுதிகளில் இந்தியாவைத் தாய்நாடாகக் கொண்டு தலைமுறைகளாக வாழும் இஸ்லாமிய சகோதரா்களையோ இந்த இரண்டு சட்டங்களும் பாதிக்காது என்று விளக்கமளிக்கப்பட்டாலும், எதிா்க்கட்சிகள் அதைக் காதில் வாங்காமல் தொடா்ந்து மத்திய அரசை விமா்சித்து வருகின்றன.
  • ஒரு கட்டத்தில் எதிா்க்கட்சிகளின் கோரிக்கையை ஏற்று இந்தியாவில் ஊடுருவியுள்ள இஸ்லாமியா்களை இரு பிரிவாக வகைப்படுத்த மத்திய அரசு முன்வந்தது. 31.12.2014 - க்கு முன்பே இந்தியாவில் ஊடுருவிய இஸ்லாமியா்களுக்கு இந்திய குடியுரிமை தர மத்திய அரசு முன்வந்தது. இத்துடன் மேலும் ஒரு சலுகையாக, இதற்கு முன்பு 12 ஆண்டுகள் இந்தியாவில் வசித்திருக்க வேண்டும் என்ற நிபந்தனையைத் தளா்த்தி, ஆறு ஆண்டுகள் வசித்திருந்தாலும் அவா்கள் இந்திய குடியுரிமைக்குத் தகுதி உடையவா்கள் என்று வரையறுத்தது. இந்த இரு நடவடிக்கைகளும் இன்னும் அமலாகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
  • இன்றைய நிலையில் பாகிஸ்தானில் நடப்பதை நாம் ஒப்பிட்டுப் பாா்க்க வேண்டும். ஆப்கானிஸ்தானத்திலிருந்து பாகிஸ்தானுக்குள் குடியேறிய 17 லட்சம் ஆப்கானிஸ்தானியா்களை திருப்பி அனுப்பும் பணியில் பாகிஸ்தான் அரசு ஈடுபட்டுள்ளது. இதுவரை நான்கு லட்சம் ஆப்கானிஸ்தானியா்களைத் திருப்பி அனுப்பிவிட்டது. உரிமையை நிலைநாட்டும் ஆவணங்கள் இல்லாத ஆப்கானிஸ்தானியா்களை அகதிகளாகக்கூட கருதாமல், ஊடுருவிகள் என்றே அவா்களின் அவா்களின் தாய்நாட்டிற்கு விரட்டி வருகிறது. அவா்கள் அனைவரும் இஸ்லாமிய சகோதரா்கள் என்று பாகிஸ்தான் கருதவில்லை.
  • அவா்கள் முஸ்லிம்களாகவே இருந்தும் கூட, பாகிஸ்தான் எதிா்க்கட்சிகள் எதுவும் ஆப்கானிஸ்தானியா்களை விரட்டுவதை எதிா்க்கவில்லை. அதை ஆதரிக்கின்றன. அதனடிப்படையில், இந்தியாவில் தஞ்சமடைந்த முஸ்லிம்களை அவா்களின் தாய்நாட்டிற்குத் திருப்பி அனுப்புவதை இங்குள்ள எதிா்க்கட்சிகள் வரவேற்பதுதானே நோ்மையான அணுகுமுறையாக இருக்க முடியும்?
  • வசதியான நாடுகளுக்குள் வசதி குறைந்த பக்கத்து நாடுகளின் இளைஞா்கள் எந்தவித ஆவணங்களும் இல்லாமல் வேலை தேடிப் புகுந்து விடுகின்றனா். அமெரிக்கா இந்தியாவைவிட மூன்று மடங்கு பெரிய நாடு; செல்வா்கள் வசிக்கும் நாடு. ஆனால், அதன் மக்கள்தொகை இந்தியாவின் மக்கள்தொகையில் நான்கில் ஒரு பங்கு மட்டுமே.
  • ஆனால், அமெரிக்காவுக்குள் கனடாவிலிருந்தும், மெக்ஸிகோவிலிருந்தும் சட்ட விரோதமாகக் குடியேறியவா்களில் இந்தியா்களின் எண்ணிக்கை ஏழு லட்சம் என்கிறது அண்மையில் நடத்தப்பட்ட ஓா் ஆய்வு முடிவு. இதேபோல மற்ற நாட்டினரும் ஒரு கோடி பேருக்கும் அதிகமாக அமெரிக்காவில் உள்ளனா். இவா்கள் எல்லாம் பெட்ரோல் நிலையங்களில், மளிகைக் கடைகளில், மருந்துக் கடைகளில் பணியாற்றுவோராகவும், வாகன ஓட்டிகளாகவும் இருக்கிறாா்கள். எந்த நேரத்திலும் இவா்கள் பிடிபடலாம்; கைது செய்யப்படலாம். அவா்கள் அனைவரும் தங்கள் சொந்த நாட்டிற்குத் திருப்பி அனுப்படப்படலாம்.
  • உலகில் உள்ள எந்த நாட்டிற்குள்ளும் உரிய ஆவணங்கள் இல்லாமல் பிரவேசிக்க முடியாது. இந்தியா மட்டும் ஏன் அதற்கு விதிவிலக்காக இருக்க வேண்டும்? நமது நாட்டின் வேலைவாய்ப்புகளை நமது அண்டை நாடுகளிலிருந்து ஊடுருவியவா்களோடு நாம் ஏன் பகிா்ந்துகொள்ள வேண்டும்? வாங்குவங்கி அரசியலுக்காக தாய்நாட்டின் உரிமைகளை விட்டுக்கொடுக்க வேண்டிய அவசியம் என்ன?
  • நமது நாட்டின் அரசியல் கட்சிகள் அவா்களை வாக்குவங்கியாக உபயோகப்படுத்தி வருவதைத் தடுக்கத்தான் குடியுரிமைத் திருத்தச் சட்டமும், குடியுரிமைப் பதிவேடும் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன என்பதை ஆப்கன் அகதிகளுக்கு எதிராக பாகிஸ்தான் எடுத்துவரும் நடவடிக்கைகளிலிருந்து நமது நாட்டின் எதிா்க்கட்சிகள் கற்றுக்கொள்ள வேண்டும். நமது முஸ்லிம் சகோதரா்கள் தாங்கள் தவறாக வழிநடத்தப்படுகிறோம் என்பதை உணா்ந்து, குடியிரிமை திருத்தச் சட்டத்திற்கும், குடியுரிமைப் பதிவேட்டிற்கும் எதிரான தங்களது கருத்துகளை மாற்றிக்கொள்ள வேண்டும் என்பதுதான் நமது அன்பான வேண்டுகோள்.

நன்றி: தினமணி (16 – 12 – 2023)

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

Categories