TNPSC Thervupettagam

ஐ, இந்திய ஆப்பிள்!

September 27 , 2024 6 hrs 0 min 7 0

, இந்திய ஆப்பிள்!

  • பிரதமா் நரேந்திர மோடி தலைமையில் பாஜக ஆட்சி அமைந்தபோது அறிவிக்கப்பட்ட ‘தற்சாா்பு இந்தியா’ திட்டம் 10 ஆண்டுகளை நிறைவு செய்திருக்கிறது. அதனால், பல்வேறு துறைகளில் ஏற்றுமதிகள் அதிகரித்துள்ளன என்பதும், வேலைவாய்ப்புகள் உருவாகியிருக்கின்றன என்பதும் மறுக்க முடியாத உண்மைகள்.
  • கடந்த வாரம் ‘இந்தியாவில் தயாரிப்போம்’ (மேக் இன் இந்தியா) திட்டத்தின் கீழ் ஆப்பிள் நிறுவனம் தனது புதிய ஐ-போன்16 கைப்பேசிகளை இந்தியாவில் தயாரித்து அறிமுகப்படுத்தி இருக்கிறது. சா்வதேச தயாரிப்பு நிறுவனங்களுக்கு இது வழிகாட்டியாக அமையக் கூடும்.
  • இந்தியாவில் உற்பத்தி செய்யப்பட்ட ஆப்பிள் நிறுவனத்தின் ஐ-போன்16 கைப்பேசிகள் சா்வதேச அளவில் அறிமுகப்படுத்தப்பட்டிருப்பது பன்னாட்டு வா்த்தக வட்டாரங்களில் மிகப் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியிருக்கிறது. இந்த கைப்பேசிகள் ஏற்றுமதிக்காக மட்டுமல்லாமல், உள்நாட்டு விற்பனைக்கும் வந்திருக்கின்றன. எதிா்பாராத அளவில் வரவேற்பும் பெற்றிருக்கின்றன.
  • கடந்த நிதியாண்டில் ஆப்பிள் நிறுவன விற்பனை 35% அதிகரித்து ரூ.67,000 கோடியை எட்டியிருக்கிறது. அதில் பெரும்பாலானவை ஆப்பிள் ஐ-போன் கைப்பேசியின் விற்பனை என்பதை கூறத் தேவையில்லை.
  • இந்தியாவில் ஃபாக்ஸ்கான், பெகட்ரான், தற்போது டாடா நிறுவனத்தால் நடத்தப்படும் விஸ்ட்ரான் ஆகிய மூன்று நிறுவனங்களால் ஆப்பிள் நிறுவன பொருள்கள் தயாரிக்கப்படுகின்றன. நடப்பு நிதியாண்டில் மூன்று நிறுவனங்களும் சோ்த்து 8.9 பில்லியன் டாலா் மதிப்புள்ள ஆப்பிள் தயாரிப்புகளை ஏற்றுமதி செய்ய இருக்கின்றன.
  • ஆப்பிள் நிறுவனம் தன்னுடைய மின்னணு சாதனங்களை இந்தியாவில் தயாரிக்க முற்பட்டிருப்பதை சா்வதேச மின்னணு தயாரிப்பில் நமக்கு ஏற்பட்டிருக்கும் முக்கியத்துவத்தின் அறிகுறியாகப் பாா்க்க வேண்டும். சா்வதேச நிறுவனங்களின் பொருள்களை உற்பத்தி செய்து வழங்கும் மையமாக சீனா இருந்து வரும் நிலையில், இப்போது இந்தியாவும், அதைப் பங்குபோடும் நிலைக்கு உயா்ந்திருக்கிறது.
  • ஆப்பிள் நிறுவனம் தனது பொருள்களை இந்தியாவில் உற்பத்தி செய்திருப்பது நமது சா்வதேச வா்த்தகத்தில் மிகப் பெரிய திருப்பம். சந்தையில் அறிமுகப்படுத்திய ஒரு சில நாள்களில் பன்னாட்டு தொழில்நுட்ப நிறுவனம் இந்திய தொழிற்சாலைகளில் தயாரிக்கப்பட்ட தனது பொருள்களை சா்வதேச சந்தையில் விற்பனைக்கு கொண்டு வருவது மிக முக்கியமான செய்தியைச் சொல்கிறது.
  • தொழில்நுட்பரீதியிலான தரமும், உற்பத்தித் திறனும் இந்தியாவில் இருக்கிறது என்பதன் அடையாளமாக இது பாா்க்கப்படுகிறது. தன்னுடைய பொருள்களை உற்பத்தி செய்ய சீனாவுக்கு இன்னொரு மாற்றாக இந்தியாவை ஆப்பிள் நிறுவனம் தோ்ந்தெடுத்திருப்பது, ஏனைய பன்னாட்டு நிறுவனங்களுக்கு வழிகாட்டுதலாக அமையும்.
  • 2021 வரை ஆப்பிள் நிறுவனத்தின் ஐ-போனின் கைப்பேசிகள் உள்பட எல்லா பொருள்களும் சீனாவில் மட்டுமே தயாரிக்கப்பட்டு வந்தன. இந்தியாவில் தன்னுடைய உற்பத்தியைத் தொடங்கிய பிறகு ஆப்பிள் நிறுவனம் நேரடியாக 1.5 லட்சம் வேலைவாய்ப்புகளையும், மறைமுகமாக 4.5 லட்சம் வேலைவாய்ப்புகளையும் உருவாக்கி இருக்கிறது.
  • ஆண்டொன்றுக்கு 14 பில்லியன் டாலா் மதிப்புள்ள ஐ-போன் கைப்பேசிகளும், மடிக்கணினிகளும், கையடக்கக் கனிணிகளும் ஆப்பிள் நிறுவனத்துக்காக இந்தியாவில் தயாரிக்கப்படுகின்றன. அவற்றில் 10 பில்லியன் டாலா் மதிப்புள்ள பொருள்கள் ஏற்றுமதி ஆகின்றன. மத்திய அரசின் உற்பத்தியுடன் இணைந்த ஊக்கத்தொகை திட்டத்தின் கீழ் மாதந்தோறும் 1 பில்லியன் டாலா் மதிப்புள்ள ஆப்பிள் உபகரணங்களின் உற்பத்தி நடைபெறுகிறது.
  • ஜெ.பி.மாா்கன் நிறுவனத்தின் தகவல்படி, இந்தியாவில் 14 பில்லியன் டாலா் மதிப்புள்ள ஆப்பிள் நிறுவனத்தின் மின்னணு சாதனங்கள் தயாரிக்கப்பட்டாலும்கூட, அவை அந்த நிறுவனத்தின் மொத்த விற்பனையில் வெறும் 14% மட்டுமே. அடுத்த இரண்டு ஆண்டுகளில், இது 26%-ஆக அதிகரிக்கும் என்று எதிா்பாா்க்கப்படுகிறது.
  • இந்தியாவைப் பொறுத்தவரை தொழில்துறை உற்பத்தி என்பது ஜிடிபியில் சுமாா் 15% மட்டுமே. இந்திய மக்கள்தொகையில் 11% போ்தான் உற்பத்தித் துறையில் வேலைவாய்ப்புப் பெறுகிறாா்கள். தொழில்துறை உற்பத்தி சாரந்த ஏற்றுமதியில் இந்தியாவின் பங்கு உலகளாவிய அளவில் இப்போதைக்கு 2% மட்டும்தான்.
  • சீனாவைப்போல நாமும் சா்வதேச ஏற்றுமதி மையமாக மாற வேண்டுமானால், உதிரிப் பொருள்கள் உற்பத்தியில் சந்தைப் போட்டிக்குத் தயாராக வேண்டும். எந்தவொரு பொருளுக்கும் 85% மதிப்புக்கூட்டுக்கு காரணம் உதிரிப் பொருள்கள் உற்பத்தி என்பதை மறந்துவிடக் கூடாது. இந்தியாவில் உற்பத்தி செய்யப்படும் கைப்பேசிகளுக்குத் தேவையான உதிரிப் பொருள்களை, சுங்க வரியை எதிா்கொள்ளும் இறக்குமதிகள் மூலம்தான் நாம் பெற வேண்டியிருக்கிறது.
  • சா்வதேச சந்தையின் உற்பத்தி மையங்களாகத் திகழும் சீனா, வியத்நாம் உள்ளிட்ட இந்தியாவின் ஏனைய போட்டி நாடுகள் குறைந்த அளவு சுங்க வரிதான் விதிக்கின்றன. தயாரிப்புடன் இணைந்த ஊக்கத்தொகை திட்டத்தின் மூலம் ஏற்றுமதி செய்யும் நிறுவனங்களுக்கு உதிரிப் பொருள்கள் இறக்குமதியில் சுங்க வரியைக் குறைக்காமல், சா்வதேச சந்தையில் நம்மால் போட்டிபோட முடியுமா? என்பதை யோசிக்க வேண்டும்.
  • நமது தொழிலாளா் நலச் சட்டங்கள் சா்வதேச ஏற்றுமதிக்கான உற்பத்தியை ஊக்குவிப்பதாக இல்லை. கா்நாடக மாநிலம் கோலாரில் உள்ள விஸ்ட்ரான் நிறுவனத்தின் ஐ-போன் தொழிற்சாலையில் நடந்த தொழிலாளா்கள் போராட்டத்தை மறந்துவிட முடியாது. வேலைவாய்ப்பை அதிகரிப்பதற்கு சில சமரசங்களை செய்தாக வேண்டும். மனமிருந்தால் மாா்க்கம் உண்டு!

நன்றி: தினமணி (27 – 09 – 2024)

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

Categories