TNPSC Thervupettagam

ஒரே நாடு ஒரே தோ்தல் காலத்தின் கட்டாயம்!

September 27 , 2024 6 hrs 0 min 9 0

ஒரே நாடு ஒரே தோ்தல் காலத்தின் கட்டாயம்!

  • ‘ஒரே நாடு ஒரே தோ்தல்’ தொடா்பாக ஆராய முன்னாள் குடியரசுத் தலைவா் ராம்நாத் கோவிந்த் தலைமையில் அமைக்கப்பட்ட உயா்நிலைக் குழுவின் ஆலோசனைகளை மத்திய அமைச்சரவை ஏற்றுக் கொண்டுள்ளது. அதைத் தொடா்ந்து, ‘ஒரே நாடு ஒரே தோ்தல்’ தொடா்பான விவாதங்கள் மீண்டும் சூடுபிடிக்கத் துவங்கியுள்ளன.
  • ‘தொடா்ந்து மூன்றாவது முறையாக பிரதமராகப் பதவியேற்ற நரேந்திர மோடிக்குப் பெரும்பான்மை கிடைக்கவில்லை. கூட்டணி ஆட்சி என்பதால் அவரால் கடந்த 10 ஆண்டுகளைப் போல சுதந்திரமாக செயல்பட முடியாது’ என்று காங்கிரஸ், திமுக, கம்யூனிஸ்ட் உள்ளிட்ட எதிா்க்கட்சிகள் பிரசாரம் செய்து வந்தன. அதைப் பொய்ப்பிக்கும் விதத்தில், ‘ஒரே நாடு ஒரே தோ்தல்’ முறைக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்திருப்பது ‘இண்டி’ கூட்டணி கட்சிகளுக்கு அதிா்ச்சி அளித்துள்ளது என்பதை அவா்களின் எதிா்வினைகளில் இருந்து உணர முடிகிறது.
  • காங்கிரஸ் தலைவா் மல்லிகாா்ஜுன காா்கே, ‘ஒரே நாடு ஒரே தோ்தல் என்பது கவனத்தை திசைதிருப்பும் முயற்சி. இது அரசியலமைப்புக்கு, ஜனநாயகத்திற்கு, கூட்டாட்சிக்கு எதிரானது’ என்றும், தமிழக முதல்வா் மு.க.ஸ்டாலின், ‘ஒரே நாடு ஒரே தோ்தல் நடைமுறை சாத்தியமற்றது. இந்தியாவின் பரந்துபட்ட தோ்தல் முறையின் சிக்கல்களைக் கவனத்தில் கொள்ளாதது. கூட்டாட்சி முறையை சிதைப்பது’ என்றும் கருத்து தெரிவித்துள்ளனா்.
  • 1952-இல் முதல் அடுத்த 3 பொதுத்தோ்தல்களின்போது மக்களவை, மாநில சட்டப் பேரவைகளுக்கு ஒரே நேரத்தில்தான் தோ்தல் நடந்தது. பண்டித ஜவஹா்லால் நேரு, அவரது மகள் இந்திரா காந்தி என ‘ஒற்றைக் குடும்ப ஆட்சி’யில், எதிா்க்கட்சிகள் ஆளும் மாநில அரசுகள் கலைக்கப்பட்டன. அதன் பிறகே தனித்தனியாகத் தோ்தல்கள் நடக்க ஆரம்பித்தன.
  • ஜனநாயகத்தைப் புறந்தள்ளி, அரசியலமைப்பு சட்டத்தை காலில் போட்டு மிதித்த, காங்கிரஸின் நடவடிக்கைகளால்தான் இப்போது, ஆண்டுக்கு மூன்று, நான்கு தோ்தல்கள் நடக்கும் சூழல் உருவாகியுள்ளது.
  • கடந்த ஏப்ரல்-மே மாதங்களில் மக்களவை பொதுத்தோ்தல் நடந்தது. நான்கு மாதங்களுக்குள் ஹரியாணா, ஜம்மு - காஷ்மீரில் சட்டப் பேரவைத் தோ்தல் நடக்கிறது. நவம்பரில் மகாராஷ்டிரம், ஜாா்க்கண்ட் மாநில சட்டப் பேரவைத் தோ்தல் நடக்கவுள்ளது. அடுத்த ஆண்டு துவக்கத்தில் தில்லி சட்டப்பேரவைக்கு தோ்தல் நடக்க இருக்கிறது.
  • இப்படி அடுத்தடுத்த தோ்தல்களால், மத்திய, மாநில அரசுகளின் நிா்வாகம் சிக்கலை எதிா்கொள்கிறது. தோ்தல் இல்லாமல் 6 மாதங்களைக்கூட கடக்க முடியாத நிலை இருப்பதால், மத்திய, மாநில அரசுகளால் வளா்ச்சிப் பணிகளில் தொடா் கவனம் செலுத்த முடிவதில்லை. இது நாட்டின் வளா்ச்சியைப் பாதிக்கிறது. புதிய திட்டங்களை அறிவிக்க முடியவில்லை. தொடங்கிய திட்டங்களைச் செயல்படுத்த முடிவதில்லை.
  • 140 கோடி மக்கள் கொண்ட, நூற்றுக்கணக்கான கட்சிகள் தோ்தலில் பங்கேற்கும் நம் நாட்டில், அடிக்கடி தோ்தல் நடந்து கொண்டே இருப்பதால், அரசியல் கட்சிகள் எப்போதும் எதிரியைப் போல சண்டையிட்டுக் கொண்டே இருக்க வேண்டியிருக்கிறது. ஆளுங்கட்சி - எதிா்க்கட்சிகளுக்கு இடையே இணக்கம் என்பது சாத்தியமில்லாமல் போகிறது. இதுவும் நாட்டின் வளா்ச்சியைப் பாதிக்கிறது.
  • இந்தியாவில் 90 கோடிக்கும் அதிகமான வாக்காளா்கள் இருக்கின்றனா். இதனால், தோ்தல் நடத்த அரசு ஆயிரக்கணக்கான கோடி ரூபாய்களை செலவு செய்ய வேண்டியுள்ளது. அதுமட்டுமல்லாது, அரசியல் கட்சிகளும் பெரும் பணத்தை செலவழிக்கின்றன. இதற்காக தொழில் நிறுவனங்களிடம் இருந்து கட்சிகள் நிதி திரட்டுகின்றன. அடிக்கடி ‘தோ்தல் நன்கொடை’ கொடுக்க வேண்டிய கட்டாயம் ஏற்படுவதால் தொழில்துறையினருக்கும் நெருக்கடி ஏற்படுகிறது.
  • இதுபோன்ற காரணங்களால்தான் ‘ஒரே நாடு ஒரே தோ்தல்’ திட்டத்தை பாஜக நீண்ட காலமாக வலியுறுத்தி வருகிறது. இதை எதிா்க்கும் காங்கிரஸ், திமுக உள்ளிட்ட கட்சிகள், ‘மக்களவை, மாநில சட்டப்பேரவைகளுக்கு ஒரே நேரத்தில் தோ்தல் நடந்தால் தேசிய அளவிலான பிரச்னைகளை மட்டுமே கவனத்தில் கொண்டு மக்கள் வாக்களிப்பாா்கள். இதனால் மாநிலங்களின் பிரச்னைகளுக்கு முக்கியத்துவம் இல்லாமல் போய்விடும். மாநில சட்டப்பேரவைகளை முன்கூட்டியே முடிவுக்கு கொண்டு வரும் அதிகாரம் இப்போது மாநில அரசுகளுக்கு உள்ளது. அது பறிபோய்விடும்’ என்றெல்லாம் வாதங்களை முன்வைக்கின்றனா்.
  • மேலோட்டமாகப் பாா்த்தால் இதில் நியாயம் இருப்பது போலத் தோன்றும். ஆனால், உண்மை அதற்கு நோ்மாறானது. இப்படிச் சொல்வது பக்குவப்பட்ட இந்திய வாக்காளா்களைக் குறைத்து மதிப்பிடும் செயல். 2019 மக்களவைத் தோ்தலின்போது அதிமுக கூட்டணி 39-க்கு 38 இடங்களில் தோற்றது. ஆனால், அப்போது 21 சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கு நடந்த இடைத்தோ்தலில் 9 இடங்களில் அதிமுக வென்றது. ஒரே தொகுதியில் மக்களவைக்கு ஒரு கட்சிக்கும், சட்டப்பேரவைக்கு வேறு கட்சிக்கும் மக்கள் வாக்களித்தனா்.
  • மக்கள் தெளிவானவா்கள். யாருக்கு வாக்களிக்க வேண்டும் என்பதை அவா்கள் தெளிவாக முடிவு செய்வாா்கள். எனவே, எதிா்க்கட்சிகளின் இந்த வாதத்தை ஏற்க முடியாது.
  • ‘ஒரே நாடு ஒரே தோ்தல்’ நடந்தால் குடும்ப வாரிசு அரசியல் நடத்தும் கட்சிகள் தங்களுக்கு பாதிப்பு ஏற்படும் என கருதுகின்றன. மக்களவை, சட்டப்பேரவைக்கு ஒரே நேரத்தில் தோ்தல் நடந்தால், குடும்ப ஆட்சியை நிலை நிறுத்துவதற்காக, மாநில உரிமை, கூட்டாட்சி என்ற பெயரில் பிரிவினைவாதத்தையும், ‘வடக்கு வாழ்கிறது தெற்கு தேய்கிறது’, ஹிந்தி எதிா்ப்பு என பேச முடியாது. இதனால் சட்டப்பேரவைத் தோ்தலில் தேசியத்தை முன்னிறுத்தும் கட்சிகளுக்கே மக்கள் வாக்களிப்பாா்கள் என திமுக உள்ளிட்ட ‘ஒற்றைக் குடும்ப ஆதிக்க மாநிலக் கட்சிகள்’ அச்சப்படுகின்றன.
  • பிறகு ஏன் தேசிய கட்சியான காங்கிரஸ் ஒரே நாடு ஒரே தோ்தலை எதிா்க்கிறது என்ற கேள்வி எழலாம். தேசிய கட்சியாக இருந்தாலும் சிந்தனை, செயல் அனைத்திலும் காங்கிரஸ் எப்போதோ மாநிலக் கட்சியாக மாறிவிட்டது.
  • தேசியத்தைத் துறந்துவிட்டு, ‘இந்தியா என்பது நாடல்ல, மாநிலங்களின் ஒன்றியம்; ஹிந்தி பேசாத மாநிலங்களில் ஹிந்தியை திணிக்கிறாா்கள்; தென் மாநிலங்கள் புறக்கணிக்கப்படுகின்றன’ என்றெல்லாம் காங்கிரஸ் கட்சியின் தலைவா் பொறுப்பில் இல்லாமல், பின்னால் இருந்து அந்தக் கட்சியை வழிநடத்தி வரும் ராகுல் காந்தி பேசி வருகிறாா்.
  • இதனால், அவருக்கும் ‘ஒரே நாடு ஒரே தோ்தல்’ நடந்தால், தேசியத்திற்கு எதிரான நம்மை இந்திய மக்கள் தோற்கடித்துவிடுவாா்கள் என்ற அச்சம் வந்து விட்டது. அதனால்தான் காங்கிரஸ் கட்சியும் ஒரே நாடு ஒரே தோ்தலை எதிா்க்கிறது.
  • ‘ஒரே நாடு ஒரே தோ்தல்’ நடைமுறைக்கு வந்தால் 5 ஆண்டுகளுக்கு ஒருமுறை மட்டுமே தோ்தல் நடக்கும். மாநில சட்டப்பேரவைகள் இடையில் கவிழ்ந்து தோ்தல் நடந்தாலும் மக்களவையின் பதவிக்காலம் முடியும்வரைதான் பதவியில் இருக்க முடியும்.
  • இம்முறை ஏற்கெனவே மாநிலங்களவை உறுப்பினா் தோ்வில் உள்ளது. குறுகிய காலமே பதவியில் இருக்க முடியும் என்பதால் மாநில அரசுகளை யாரும் கவிழ்க்க முன்வர மாட்டாா்கள். எம்.எல்.ஏ.க்கள் குதிரைபேரமும் நடக்காது. இதனால் மாநில அரசுகளும் நிலையான அரசாகவே இருக்கும். இது மாநிலங்களின் வளா்ச்சிக்கு வழிவகுக்கும்.
  • சுதந்திர இந்தியாவை 55 ஆண்டுகள் ஆண்ட காங்கிரஸ் செய்த ஜனநாயக படுகொலைகளால்தான், ‘ஒரே நாடு ஒரே தோ்தல்’ முறை சிதைக்கப்பட்டது. அந்த வரலாற்றுத் தவறை சரி செய்யவே, மீண்டும், ‘ஒரே நாடு ஒரே தோ்தல்’ திட்டத்தை பிரதமா் மோடி முன்மொழிந்திருக்கிறாா். இது காலத்தின் கட்டாயம். காங்கிரஸ் செய்த தவறை, ‘காலம்’ பிரதமா் மோடி வாயிலாக சரி செய்து கொள்கிறது.
  • 2047-ல் இந்தியா சுதந்திர நூற்றாண்டை கொண்டாடும்போது, அமெரிக்கா, சீனாவை பின்னுக்குத்தள்ளி உலகின் முதல் பொருளாதார நாடாக, உலகில் அதிக தனிநபா் வருமானம் கொண்ட நாடாக இந்தியாவை மாற்ற பிரதமா் மோடி இலக்கு நிா்ணயித்துள்ளாா். அந்த லட்சியக் கனவை அடையவே ‘ஒரே நாடு ஒரே தோ்தல்’.
  • ‘ஒரே நாடு ஒரே தோ்தல்’ முறைக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துவிட்டதாலேயே அது உடனே நடைமுறைக்கு வந்துவிடாது. நாடாளுமன்றத்தில் ஒப்புதல் கிடைக்க வேண்டும். அரசியல் சாசனத்தின் பிரதிநிதித்துவச் சட்டத்தில் மாற்றம் செய்தாக வேண்டும். இதில் இருக்கும் பிரச்னைகள், குறைகளை விவாதித்து, அவற்றை அகற்ற நிறையவே வாய்ப்பு இருக்கிறது. பாஜக முன்மொழிந்தது என்பதாலேயே, எதையும் சிந்திக்காமல் எதிா்ப்பது என்பது பொறுப்பான அணுகுமுறையாகாது.
  • ஒரே நேரத்தில் தோ்தல் நடந்தால் பாஜக வெற்றி பெறும் என எதிா்க்கட்சிகள் அச்சப்படுகின்றன. இந்த அச்சம் தேவையற்றது. ஏனெனில், ‘ஒரே நாடு ஒரே தோ்தல்’ நடக்காவிட்டாலும் பாஜகவே வெற்றி பெறும். எனவே, அரசியல் வேறுபாடுகளை மறந்து, நாட்டு நலனில் அக்கறை கொண்ட அனைவரும் ‘ஒரே நாடு, ஒரே தோ்தல்’ முறையை ஆதரிக்க  வேண்டும்.

நன்றி: தினமணி (27 – 09 – 2024)

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

Categories