TNPSC Thervupettagam

சாதி... கிராமம்... நகரம்: ஒரு விளக்கம்

July 25 , 2024 8 hrs 0 min 22 0
  • தன்னாட்சி அமைப்​பின் பொதுச் செயலாளர்​ வினோத்​குமார் எழுதிய ‘நகரமயத்​தால் சாதி ஒழிந்து​விடுமா?’ கட்டுரையைப் படித்​தேன். ஜூலை 4 அன்று நான் எழுதிய ‘ஊர் - சேரி - காலனி: மாற்றத்​துக்கான தருணம்’ கட்டுரைக்கு ஏறக்குறைய மறுப்புக் கட்டுரையாகவே அவரது கட்டுரை அமைந்துள்ளது. எனவே, சில விளக்​கங்களை அளிக்க வேண்டியது எனது கடமை.
  • முதலில், ஊர் சேரி காலனி என்பது புதிய பிரச்சினை அல்ல. பல நூற்றாண்​டுகளாக இருக்​கும் பிரச்​சினைதான். ஆனால் அதை இணைப்​ப​தற்கு அல்லது பாதிக்​கப்​பட்ட​வர்களை அதிகாரப்​படுத்​து​வதற்கு இதுவரை யாரும் எந்தத்​ திட்டத்​தையும் முன்வைக்​க​வில்லை என்ப​தைச் சுட்டிக்​காட்டி​யிருப்​ப​துடன், அதற்குச் சில தீர்வு​களை​யும் முன்வைத்​திருக்​கிறேன்.
  • எனது முன்வைப்​புகள்​ சாதியை ஒழித்​து​விடும் என்று எங்கேயும் நான் சொல்ல​வில்லை. நகரமயத்​தால் சாதி ஒழிந்து​விடும் என்பது எனது கருத்தே அல்ல. நகரமயத்​தால் சாதி தளர்ந்து​விடும் என்ப​துதான் எனது முன்வைப்பு.
  • இரண்டாவது, கட்டுரையாளர் சாதி ஒழிப்​பைப் பற்றி வைத்திருக்​கும் கண்ணோட்டம் தவறானது. சாதி என்பது ஒரு மனநிலை. அதை ஒரே அடியாக வெட்டி வீழ்த்த முடியாது. அதனால்​தான் அம்பேத்கர்​ Annihilation of Castes என்று பெயரிட்டார். Eradication of Castes என்று அவர் வரையறுக்​க​வில்லை. அம்பேத்​கரின் சாதி ஒழிப்பு என்பது ஒரு பரிணாம மாற்றக்​ கோட்பாடாகும், அதன்படி சாதி ஒழிப்பு படிப்​படி​யாகத்​தான் நிகழும். எனவே, பொத்தாம்​ பொதுவாக நகர மய​மாக்கம்​ சாதியை ஒழிக்காது என வாதிடுவது சரியல்ல.
  • மூன்றாவதாக, சேரிகள்​ தங்களுக்​கெனத் தனிப் பெயரைச் சூட்டிக்​கொள்​வ​தால் என்ன நிகழும்? முதலில் சேரியை ஒரு தனி கிராமமாக அங்கீகரியுங்​கள். பிறகு என்ன மாற்றம்​ நடக்கிறது என்று பார்ப்​ப​தற்கு ஒரு பத்தாண்​டுகள் பொறுத்​திருங்​கள். அதற்குப் பிறகு முறையான ஆய்வுகளை மேற்கொள்​ளுங்​கள்.
  • சேரிகள்​ பண்பு மாற்றத்​தைப் பெற வேண்டு​மானால், அவை​ தங்களுக்கெனப் புதிய அடையாளத்​தைப் பெற வேண்டும். தங்களை அதிகாரம் உள்ளவர்​களாகத் தகவமைத்​துக் ​கொள்​வதற்கான நம்பிக்கையை வழங்க வேண்டும். அதற்கான தூண்டுகோல்​தான் பெயர் மாற்றத்​ திட்டம்.
  • நான்காவதாக, சாதி ஒழிப்​பைப் போல சேரி ஒழிப்பு நடக்காது. சாதி என்பது சாதியை நம்பும் சாதி இந்துக்​களின் பிரச்​சினை. சாதியை எதிர்க்​கும் தலித்​துகளின் பிரச்சினை அல்ல. சேரி என்பது தீண்டா​மையின் வரையறுக்​கப்பட்ட நில அடிப்​படை​யிலான வடிவம். அதைச் சாதி இந்துக்களாலும் ஒழிக்க முடியாது.
  • எனவேதான், பண்பு மாற்றம்​ வேண்டும் என்கிறேன். சேரி என்னும் இழித்​தன்மையை தலித்​துகளே ஒழித்​து​விடுவார்​கள். அவர்களுக்​குத் தனி கிராமத் தகுதி​யும், தனி உள்ளாட்சி அதிகார​மும், தனி கிராமப் பெயரை​யும் வழங்குங்​கள். பத்தாண்​டுகளில் தமிழ்​நாட்டில் ஒரு அமைதிப் புரட்சி நடந்திருப்​ப​தைக் காண்பீர்​கள்.
  • ஐந்தாவது, கள்ளக்​குறிச்​சிக்கு அருகே ஒரு சேரியை ‘பெரிய வேங்கை’ எனப் பெயர் மாற்றம்​ செய்திருக்​கிறார்​கள். ‘இந்து தமிழ் திசை’யில் வந்த கட்டுரையின் எதிர்வினை அது. தூத்துக்​குடிக்கு அருகே சங்கரலிங்​கபுரம் கிராமத்​தில் தீண்டா​மைச் சுவரால் பாதிக்​கப்பட்ட தலித் மக்கள்​ தங்களது சேரிக்கான பெயரை மாற்று​வதாக என்னிடம் சொன்னார்​கள். சுயமரியாதைக்கான ஒரு விதையை விதைத்​திருக்​கிறோம். விவாதங்கள்​ தொடரட்டும்!

நன்றி: இந்து தமிழ் திசை (25 – 07 – 2024)

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

Categories