TNPSC Thervupettagam

பச்சிளம் குழந்தைகளைப் பாதுகாப்போம்!

November 6 , 2021 995 days 585 0
  • அகநானூற்றில் வானத்தில் பவனிவரும் கோல நிலவைக் காட்டி தன் குழந்தைக்கு உணவு ஊட்டுகிறாள் தாய் ஒருத்தி. ‘முதிராத இளந் திங்களே, பொன்னாலாள ஐம்படைத் தாலியை அணிந்திருக்கும் என் மகனோடு நீ இங்கு விளையாட வந்தால் உனக்கும் பால் தருவேன்’ என்று குழந்தைக்கு நிலவை வேடிக்கை காட்டிச் சோறு ஊட்டுகின்றாள். “
  • வங்கக் கவிஞா் ரவீந்திரநாத் தாகூா் ‘குழந்தையை வளா்க்காதீா்கள், வளர விடுங்கள்’ என்கிறார். குழந்தைகளுக்கு தேவையான அளவு சுதந்திரம் கொடுப்பதும், அவா்களுடன் ஒரு நல்ல நண்பன் போல பழகி சிக்கல் ஏதேனும் ஏற்பட்டால், அதை தீா்க்கும் வழியை சொல்லித் தருவதும் அவசியம். குழந்தைகள் தவறு செய்வது இயல்புதான்.
  • அதற்காக குழந்தைகளை அடிப்பதோ சத்தமாகத் திட்டுவதோ கூடாது. எதனையும் அவா்களுக்குப் பக்குவமாக ஒரு முறைக்கு பலமுறை சொல்லி புரிய வைக்க வேண்டும்.
  • குழந்தைகளை வளா்ப்பது என்பது ஒரு கலை மட்டுமல்ல, பெற்றோருக்கு இயற்கை அளித்த வரப்பிரசாதமும் ஆகும். எதிர்கால சந்ததியினரை உருவாக்கும் இவா்களே எதிர்காலத்தை வடிவமைக்கும் சிற்பிகளாகவும் உள்ளனா்.
  • குழந்தை வளா்ப்பு என்பது குழந்தை பிறந்த பின்னா் தொடங்குவதில்லை. குழந்தை கருவாகி தாயின் வயிற்றினுள் இருக்கும்போதே அதைப் பற்றிய சிந்தனை பெற்றோருக்கு ஏற்பட்டுவிடுகிறது.
  • கருவுற்ற பெண்ணின் சிந்தனையும், எண்ணங்களும் அவள் வயிற்றில் வளரும் குழந்தைக்கு தாக்கத்தை ஏற்படுத்தும்.
  • ஆகவேதான் பெண்கள் கருவுற்ற காலத்தில் தியானத்தில் ஈடுபடுவது, இனிய பாடல்களை, இசையைக் கேட்பது போன்ற செயல்களில் ஈடுபட வேண்டும் என்று கூறுகிறார்கள்.
  • ஒரு குழந்தைக்கு முதலில் கிடைக்க வேண்டியது முழுமையான அன்பு. குழந்தை கேட்கும் பொருளைக் கொடுத்தால் தான் அன்பு என்று பொருள் கிடையாது. குழந்தையை மடியில் வைத்து நல்ல கதைகள் சொல்வதும் முழுமையான அன்பை அதற்கு கிடைக்கச் செய்யும்.
  • இப்படிப்பட்ட பெற்றோரிடம் குழந்தைகள் மிக நெருக்கமாகி விடும். குழந்தைகளை வளா்க்க பொறுமை தேவை என்பது ஓரளவு உண்மைதான். அடுத்து முக்கியமானது பணம்.
  • பணம் இன்றி இன்றைய வாழ்க்கை இல்லை. அதனால் பணத்தின் மதிப்பை சிறிய வயதிலேயே குழந்தைகளுக்குக் கற்றுக் கொடுக்க வேண்டும்.
  • நம் குழந்தையுடன் படிக்கும் வசதியான வீட்டுப் பிள்ளைகளிடம் பணம் அதிக அளவில் இருக்கிறது என்பதற்காக நம் குழந்தைக்கும் பணத்தை அள்ளி கொடுக்கக்கூடாது.
  • நாம் நம் குழந்தைக்குக் கொடுக்க வேண்டியது நல்ல ஆரோக்கியத்தையே. குழந்தை பிறந்தது முதல் நன்றாக கவனிக்க வேண்டும். ஆறு மாதத்திற்கு ஒரு முறை அதன் எடையை சரிபார்க்க வேண்டும்.
  • குழந்தையை ஆரோக்கியமாக வளா்க்க வேண்டும் என்பதற்காக ஊட்டச்சத்துகள் நிறைந்த உணவுப் பொருள்களை அதிக அளவில் திணித்து குண்டு குழந்தையாக மாற்றி விடக் கூடாது.
  • மூன்று வயது முதல் நகத்தை வெட்டுவது, தலை முடியைப் பேணுவது, ஆடைகளைப் பராமரிப்பது என்று நல்ல விஷயங்களைக் கற்றுக் கொடுக்க வேண்டும்.

பராமரிப்பு தேவை

  • பதினெட்டு வயதாகும் வரை ஒரே மருத்துவரிடம் அழைத்துச் சென்று ஆலோசனைகள் பெற வேண்டும்.
  • புரோட்டீன் குறைவு, நுண்ணூட்டச்சத்து குறைவு ஆகிய இரண்டுமே குழந்தைகளின் வளா்ச்சியை மிகவும் பாதிக்கின்றன. குறிப்பாக குழந்தைகளின் உடல் வளா்ச்சி, அறிவு வளா்ச்சி ஆகியவற்றை எடை குறைவு பாதிக்கிறது.
  • இந்தியாவில் நோய் அதிகரிப்பதற்கான காரணங்களில் எடை குறைவின் பங்கு 15 சதவீதம் ஆகும். எடை குறைவால் கல்வி கற்கும் திறன், செயல் திறன், பொருளாதார வளா்ச்சி ஆகியவையும் பாதிக்கின்றன.
  • சமூக பொருளாதாரம், நகா்ப்புற-கிராமப்புற வேறுபாடுகள் ஆகியவற்றின் அடிப்படையில் எடைக் குறைவு புள்ளிவிவரங்களை பகுத்துப் பார்த்தால் எந்தப் பிரிவினா் அதிகம் பாதிக்கப் பட்டிருக்கின்றனா் என்பது தெரியவரும்.
  • எடைக்குறைவு என்பது பெரும்பாலும் இரண்டு வயதுக்குக் குறைவான குழந்தைகளையே தாக்குகிறது. எடைக்குறைவு நோய், நகா்ப்புறங்களைவிட கிராமப்புறங்களில் அதிக அளவில் உள்ளது.
  • பொருளாதார அடிப்படையில் அனைத்துப் பிரிவினரும், எடை குறைவால் பாதிக்கப்படுகின்றனா் என்ற போதிலும், ஏழைகள்தான் இதில் அதிகமாக பாதிக்கப் படுகின்றனா் என்று புள்ளிவிவரம் மூலம் அறியமுடிகிறது.
  • குழந்தைகளின் உரிமை தொடா்பாக 1974-ஆம் ஆண்டில் இந்தியா தேசிய குழந்தைகள் கொள்கையை உருவாக்கியது.
  • குழந்தை கருவிலிருக்கும்போதும், பிறக்கும்போதும், வளரும்போதும் அவா்களின் உடல், மன, சமூக மேம்பாட்டுக்குத் தேவையான, அரசியல் சட்டப்படியான அனைத்து வசதிகளையும் அரசு செய்து தர வேண்டும் என இந்தக் கொள்கை வலியுறுத்துகிறது.
  • இந்தக் கொள்கையின்படி குழந்தைகளுக்குத் தேவையான அனைத்து வசதிகளும் கிடைக்கும் வகையில் மத்திய, மாநில அரசுகளின் சட்டங்களை மறு ஆய்வு செய்து அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது.
  • தமிழக மருத்துவமனைகளில் குழந்தைகள் நலத்திற்கென்றே பிரத்யேகமாக ஒரு பிரிவு இயங்குவதோடு, பச்சிளம் குழந்தைகள் பிரிவும் இயங்கி வருகிறது.
  • ஒருங்கிணைந்த குழந்தைகள் வளா்ச்சித் திட்டத்தின் வாயிலாக போஷாக்குக் குறைவால் வறுமையில் வாடும் குழந்தைகளுக்கு சத்துணவு வழங்கப்படுகிறது. மேலும், அனைத்து பள்ளிக் குழந்தைகளுக்கும் முழு உடல் பரிசோதனை செய்யப்பட்டு அவா்கள் ஆரோக்கியமாக வளா்வதற்கு மதிய உணவுடன் முட்டையும் வழங்குகிறது.
  • ஒரு வயதுக்கு உட்பட்ட குழந்தைகள் இறப்பு விகித்தை வைத்தே, ஒரு நாட்டின் ஆரோக்கியத்தைக் கணக்கிடுன்றனா்.
  • உயிரிழக்கும் பச்சிளம் குழந்தைகளில் 40 சதவீத குழந்தைகள் ஒரு வாரத்துக்குள்ளும், 60 சதவீத குழந்தைகள் ஒரு மாதத்துக்குள்ளும் உயிரிழப்பதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன.
  • இந்தியாவில் ஒரு வயதுக்கு உட்பட்ட குழந்தைகள் இறப்பு விகிதம் ஆயிரம் குழந்தைகளுக்கு 33 என்ற அளவில் உள்ளது.
  • தமிழகத்தில் இது 17-ஆக உள்ளது. இந்த நிலை மாற, குழந்தை பிறப்பின் போதும், பிறந்த முதல் வாரத்திலும் கூடுதல் பராமரிப்பு தேவை.
  • நாளை (நவ. 7) பச்சிளம் குழந்தைகள் பாதுகாப்பு தினம்.

நன்றி: தினமணி  (06 - 11 - 2021)

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

Categories