TNPSC Thervupettagam

புயல் நிவாரண நிதி போதுமானதா?

March 4 , 2025 16 days 58 0

புயல் நிவாரண நிதி போதுமானதா?

  • தமிழ்நாட்டில், கடந்த 2024 நவம்பர், டிசம்பர் மாதங்களில் ஃபெஞ்சல் புயலால் ஏற்பட்ட வரலாறு காணாத மழை வெள்ளம் கடலூர், விழுப்புரம், கிருஷ்ணகிரி உள்ளிட்ட 18 மாவட்டங்களில் பயிரிடப்பட்ட பயிர்களுக்குப் பெரும் சேதத்தை ஏற்படுத்தி, விவசாயிகளுக்குப் பெரும் பொருளாதார இழப்பை ஏற்படுத்திவிட்டது.
  • தற்போது பயிர்ச் சேதங்கள் கணக்கிடப்பட்டு, இப்புயல் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட 5,18,783 விவசாயிகளுக்கு நிவாரணமாக ரூ.498.8 கோடி வழங்கப்படும் என்கிற அரசாணையைத் தமிழக அரசு பிப்ரவரி 19, 2025 அன்று வெளியிட்டுள்ளது. பயிர்களுக்கு அறிவிக்கப்பட்டுள்ள நிவாரணத் தொகை போதுமானதாக இல்லை எனப் பாதிக்கப்பட்ட விவசாயிகள் கூறிவருகிறார்கள். உண்மை நிலவரம் என்ன?

தர​வு​களில் குழப்பம்:

  • அரசு வெளி​யிட்​டுள்ள தகவல்​களின்​படி, ஃபெஞ்சல் புயலால் பாதிக்​கப்​பட்ட 18 மாவட்​டங்​களில் சேதமடைந்த பயிர்கள் பற்றிய தரவுகளை முறை​யாகக் கணக்​கெடுப்பு நடத்தி, இம்மாவட்​டங்​களில் மொத்​த​மாகப் பாதிப்​புக்​குள்ளான 3.25 லட்சம் ஹெக்​டேர் பரப்​பளவு வேளாண் - தோட்​டக்​கலைப் பயிர்​களைச் சாகுபடி செய்திருந்த 5,18,783 விவசா​யிகள் பயன்​பெறும் வகையில் இத்திட்டம் அறிவிக்​கப்​பட்​டுள்​ளது.
  • இந்த மதிப்​பீ​டானது, கணக்​கெடுப்பு நடத்​தப்​பட்ட மாவட்​டங்​களின் மொத்த சாகுபடிப் பரப்​பளவோடு ஒப்பிடு​கை​யில் மிகவும் குறைவாக உள்ள​தால், எதன் அடிப்​படை​யில் பாதிக்​கப்​பட்ட பரப்​பளவு கணக்​கிடப்​பட்​டுள்ளது என்கிற கேள்வி முதலில் எழுகிறது. பாதிக்​கப்​பட்​டுள்ள பயிர்​களின் பரப்​பளவைக் கணக்​கிட்டு மதிப்​பீடு செய்​வ​தில் முரண்​பாடுகள் இருந்​தா​லும், பயிர், ஆடு, மாடுகளை முற்றி​லும் இழந்து நிற்​கும் விவசா​யிகளுக்கு அரசால் அறிவிக்​கப்​பட்​டுள்ள நிவாரணம் மிகவும் குறை​வாகவே உள்ளது.
  • அரசு அறிவிப்​பின்​படி, புயலால் பாதிக்​கப்​பட்ட ஒரு ஹெக்​டேர் மானா​வாரிப் பயிருக்கு 8,500 ரூபா​யும், நெல் - பாசன வசதி பெறும் பயிர்​களுக்கு 17,000 ரூபா​யும், நீண்ட காலப் பயிர்​களுக்கு ஹெக்​டேருக்கு 22,500 ரூபா​யும் வழங்​கப்​பட​வுள்​ளது. பயிர்​களுக்கான சாகுபடிச் செலவு மிகவும் அதிகம் உள்ள​போது, இவ்வளவு குறைவான நிவாரணம் எந்தத் தரவு​களின் அடிப்​படை​யில் கணக்​கிடப்​பட்​டுள்ளது என்பது தெரிய​வில்லை.
  • பயிர்​களின் விலை நிர்​ண​யத்​துக்​காக, அறிவியல்​பூர்​வ​மாகத் தரவு​களைத் திரட்டி வெளி​யிட்டு​வரும், மத்திய அரசின் விவசாயச் செலவு - விலை ஆணையம் (Commission for Agricultural Costs and Prices) 2024-25இல் வெளி​யிட்​டுள்ள விலைக் கொள்கை அறிக்கை​யின்​படி, தமிழகத்​தில் ஒரு ஹெக்​டேர் நெல் சாகுபடி செய்​வதற்கு ஆகும் செலவு (மதிப்​பீட்டுக்​குப் பயன்​படுத்​தும் செலவுக் காரணி​யைப் பொறுத்து) ரூ.67,064 முதல் ரூ.88,380 என மதிப்​பிடப்​பட்​டுள்​ளது.
  • ஆனால், தமிழக அரசால் நெல் விவசா​யிகளுக்கு அறிவிக்​கப்​பட்​டுள்ள நிவாரணமான ரூ.17,000, அதன் சாகுபடிக்கு ஆகும் செலவில் கால் பகுதி​யைக்கூட ஈடுகட்ட முடியாத அளவில் உள்ளது. மானா​வாரிப் பயிர்​களான சோளம், நிலக்​கடலை, பருத்தி போன்ற பயிர்​களைத் தமிழ்​நாட்​டில் ஒரு ஹெக்​டேரில் சாகுபடி செய்​வதற்கு ஆகும் செலவு ரூ.63,767 முதல் ரூ.1,24,493 என விவசாயச் செலவு - விலை ஆணையம் மதிப்​பிட்​டுள்​ளது. ஆனால், தமிழக அரசு அறிவித்​துள்ள நிவாரணம் வெறும் ரூ.8,500 மட்டுமே.
  • நீண்ட காலப் பயிர்​களான கரும்பு, வாழை போன்ற பயிர்​களுக்கு அறிவிக்​கப்​பட்​டுள்ள நிவாரண​மும் மிகவும் குறை​வாகவே உள்ளது. உதாரண​மாக, தமிழகத்​தில் ஒரு ஹெக்​டேர் கரும்​புச் சாகுபடி செய்​வதற்கு ஆகும் செலவு ரூ.1,89,742 முதல் ரூ.2,49,971 என விவசாயச் செலவு - விலை ஆணையம் மதிப்​பிட்​டுள்​ளது. ஆனால், நீண்ட காலப் பயிர்​களுக்​குத் தமிழக அரசு அறிவித்​துள்ள நிவாரணம் வெறும் ரூ.22,500 மட்டுமே.
  • இப்படி குறைவான நிவாரணத் தொகை கொடுத்​தால், விவசா​யிகள் பயிர்ச் சாகுபடிக்கான செலவை எப்படி ஈடுகட்ட முடி​யும்? அதிகக் கடன் தொல்​லை​யில் ஏற்கெனவே சிக்​கித் தவிக்​கும் விவசா​யிகளால் சாகுபடிக்காக வாங்கிய கடனை எப்படித் திருப்​பிக் கட்ட முடி​யும்? நிவாரணம் கொடுப்​ப​தற்கு அறிவியல் ​பூர்​வ​மாகச் சேகரிக்​கப்​பட்ட தரவு​களைப் பயன்​படுத்துவது அவசி​யமில்​லையா?

கஜா புயலிலும் இதுதான்:

  • இதற்கு முன்பு இருந்த ஆட்சி​யாளர்​களும் பயிர்ச் செலவினங்​களைக் கருத்​தில் கொள்​ளாமல், மிகவும் குறைவான அளவுக்கு நிவாரணத் தொகையை விவசா​யிகளுக்​குக் கொடுத்​துள்ளார்​கள். 2018 நவம்​பரில் வீசிய கஜா புயலால் நாகப்​பட்​டினம், திரு​வாரூர், தஞ்சாவூர், புதுக்​கோட்டை மாவட்ட விவசா​யிகளுக்​குப் பெரிய அளவில் பாதிப்பு ஏற்பட்​டது. பல ஆண்டு​களாகத் தென்னைச் சாகுபடிக்​குப் பெயர் பெற்ற பேராவூரணி - பட்டுக்​கோட்டை பகுதி​களில், யாரும் நினைத்​துப் பார்க்க முடியாத அளவுக்​குப் பெரும் பாதிப்பை விவசா​யிகள் எதிர்​கொண்​டார்​கள்.
  • ஆனால், 25 ஆண்டு​களுக்​கும் மேலாக வளர்க்​கப்​பட்ட தென்னை மரத்​துக்கு நிவாரணமாக ரூ.600, அவற்றை வெட்டி அப்பு​றப்​படுத்த ரூ.500 என மொத்​தமாக ஒரு மரத்​துக்கு ரூ.1,100 நிவாரணமாக வழங்​கப்​படும் எனக் கூறி அப்போது இருந்த ஆட்சி​யாளர்கள் கணக்கை முடித்து​விட்​டார்​கள். கரும்பு, வாழை, நெல், காய்​கறிகள், மலர்கள் போன்ற பயிர்​களும், கஜா புயலால் அடியோடு அழிக்​கப்​பட்டன. விவசாயச் செலவு - விலை ஆணையம் தமிழ்​நாட்டுக்காக வெளி​யிட்ட பயிர்ச் செலவு பற்றிய தரவுகள் கையில் இருந்தும், அப்போதைய அரசு இப்ப​யிர்​களுக்கு நிவாரணமாக ஒரு ஹெக்​டேருக்கு ரூ.13,500 மட்டுமே அறிவித்​தது.

என்ன செய்ய வேண்​டும்?

  • மற்ற மாநிலங்​களைப் போல் அல்லாமல், விவசா​யத்​துக்​குப் பயன்​படுத்​தப்​படும் வேலை ஆள்களின் கூலிச்​செலவு மிகவும் அதிகமாக உள்ள​தால், பயிர்ச் சாகுபடிக்கு ஆகும் மொத்தச் செலவு தமிழகத்​தில் மிகவும் அதிகம் உள்ளதாக விவசாயச் செலவு - விலை ஆணையம் வெளி​யிட்​டுள்ள விலைக் கொள்கை அறிக்கை​யின் தரவுகள் கூறுகின்றன.
  • நெல் சாகுபடி​யில் முன்னோடி மாநிலங்​களாக உள்ள பஞ்சாப், மேற்கு வங்கம், உத்தரப் பிரதேசம், ஒடிஷா போன்ற மாநிலங்​களைக் காட்​டிலும், தமிழ்​நாட்​டில் ஒரு ஹெக்​டேர் நெல் சாகுபடி செய்​வதற்​குத் தேவைப்​படும் செலவு மிகவும் அதிகம். எனவே, சரியான தரவு​களைக் கொண்டு, குறைந்த​பட்சம் பயிர் சாகுபடிக்​குச் செய்​யப்​பட்ட செலவுகளை ஈடுகட்டும் அளவுக்​காவது விவசா​யிகளுக்கு நிவாரணம் வழங்​கப்பட வேண்​டும்.
  • பயிர்ச் சாகுபடி அதிகச் செலவு கொண்ட தொழிலாகத் தற்போது மாறி​விட்​டது. எனவே, வட்டாட்​சி​யர், கிராம நிர்வாக அலுவலர் போன்ற​வர்​களைக் கொண்டு பயிர்​களின் சேதத்தை மதிப்​பிடு​வதைத் தவிர்த்து, விவசாயம் பற்றி நன்கு அறிந்த அறிஞர்​களைக் கொண்டு குழு அமைத்​துப் புயலால் ஏற்பட்​டுள்ள பயிர் இழப்புகளை முறையாக மதிப்​பீடு செய்ய வேண்​டும். புயல் வெள்​ளத்​தால் பாதிக்​கப்​பட்​டுள்ள மாவட்​டங்​களில் உள்ள நீர்​நிலைகள், ஆறுகள், குளங்​களைப் போர்க்கால அடிப்​படை​யில் சரிசெய்து, விவசா​யிகள் உடனடி​யாகப் பயன்​பெறும் வகையில் நடவடிக்கை எடுக்க வேண்​டும்.
  • ஆடு, மாடுகளை இழந்​தவர்​களுக்கு அதன் நடப்பு சந்தை மதிப்​பீட்​டைக் கணக்​கிட்டு, உரிய நிவாரணம் வழங்க வேண்​டும். அத்துடன் விதைகள், உரம், பூச்சிக்​கொல்லி மருந்து, சொட்டு நீர்ப்​பாசனம், டிராக்டர் - விவசாயத் தளவாடங்​களைப் பாகு​பாடின்றி அனைத்து விவசா​யிகளுக்​கும் குறைந்தது இரண்டு ஆண்டு​களுக்​குக் கூடுதல் மானிய விலை​யில் கொடுக்க நடவடிக்கை எடுக்க வேண்​டும்.
  • தமிழ்​நாட்​டில் பயிர்ச் சாகுபடி மூலம் கிடைக்​கும் வருமானம் மற்ற மாநிலங்​களோடு ஒப்பிடு​கை​யில் மிகவும் குறைவாக உள்ள காரணத்​தால், மற்ற பெரிய மாநிலங்​களைவிட தரிசு நிலங்​களின் பரப்​பளவு அதீத வேகமாக உயர்ந்து​வரு​கிறது. புயல், வெள்ளம் போன்ற காலங்​களில் ஏற்​படும் பயிர்ச் சேதங்​களுக்கு, உரிய நிவாரணம் கொடுக்க​வில்லை என்​றால், பயிர்ச் சாகுபடிப் பரப்​பளவு மேலும் குறைந்து, உணவு உற்​பத்​தி​யும் குறை​யும். இதனால் பணவீக்​கம் ஏற்படக்கூடும் என்​ப​தைக் கொள்கை வகுப்​பாளர்​கள் மறந்​துவிடக் கூடாது.

நன்றி: இந்து தமிழ் திசை (04 – 03 – 2025)

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

Categories