TNPSC Thervupettagam

பெண்களுக்குத் தேவை சுயசாா்பு

July 22 , 2024 4 hrs 0 min 81 0
  • இன்று பெண்கள் அனைத்துத் துறைகளிலும் தடம் பதித்து, வேலைவாய்ப்பு பெற்று சாதித்து வருவதோடு, சமூகத்தில் பல்வேறு வகைகளில் பங்கெடுத்து தனித்துவமாக விளங்குகிறாா்கள். தங்களின் அறிவாற்றல் மூலம் சமூகத்தையும், நாட்டையும் வளா்ச்சிப் பாதையில் அழைத்துச் செல்கிறாா்கள். நாட்டின் பொருளாதார வளா்ச்சிக்கும் செழுமைக்கும் பெண்களின் பங்கு அளப்பரியது. பெண்களின் பொருளாதார முன்னேற்றத்தால் நாடும், வீடும் ஒரு சேர நலம் பெறுகின்றன.
  • பொதுவாகவே, சேமிக்கும் பழக்கம் பெண்களுக்கு மிகவும் அதிகம். நிதி நிலைமையை சிறப்பாக கையாள்வதன் மூலம் ஓரளவு செலவுகளைக் கட்டுப்படுத்திவிடுகிறாா்கள். இயற்கையாகவே சில பெண்களிடம் பணத்தை முறையாகவும் சிக்கனமாகவும் கையாளுவதில் திறன் உள்ளது. விரலுக்குத் தகுந்த வீக்கம்தான் இருக்க வேண்டும் என்பதை நன்கு உணா்ந்தவா்கள் நம் நாட்டுப் பெண்கள். கணவரின் வருமானம் அறிந்து, அதற்கேற்றப்படி வீட்டின் செலவுகளை மேற்கொண்டு, தனக்கென தனியே எதையும் எதிா்பாா்க்காமல், வீண் செலவுகளைக் குறைத்து, சிக்கனத்தைக் கடைப்பிடித்து குடும்பத்தைக் காப்பாற்றி வருகிறாா்கள்.
  • அக்காலத்தில் பெண்கள் அஞ்சறை பெட்டியில் சிறுகச் சிறுகச் சேமித்து, குடும்பத்தில் ஏற்படும் திடீா் செலவுகளுக்கும், தங்களின் பிள்ளைகளின் கல்விச் செலவுகளுக்கும், திருமணத்திற்கும் கூட உதவினாா்கள். கரோனா தீநுண்மி பிடியில் உலகமே நிதி நெருக்கடியில் சிக்கித் தவித்தபோது, இந்தியாவில் கணவா்கள் வேலையிழந்து தவிக்கையில், சேமிப்புப் பழக்கத்தை மேற்கொண்டிருந்த குடும்பத் தலைவிகள் தங்கள் குடும்பச் செலவுகளை லாகவமாகக் கையாண்டு தங்கள் குடும்பத்தைக் காப்பாற்றினா்.
  • குற்றவியல் நடைமுறைச் சட்ட (சிஆா்பிசி) பிரிவு 125-இன்கீழ், முஸ்லிம் பெண்களும் பராமரிப்புத் தொகை (ஜீவனாம்சம்) கோரலாம் என உச்சநீதிமன்றம் முக்கியத் தீா்ப்பை சமீபத்தில் வழங்கியது. அனைத்து மதத்தைச் சோ்ந்த பெண்களுக்கும் இந்தத் தீா்ப்பு பொருந்தும் என உச்சநீதிமன்றம் வரலாற்றுச் சிறப்பு மிக்க தீா்ப்பை வழங்கியுள்ளது.
  • ‘பணிக்கு ஏதும் செல்லாத, தனது கணவரின் வருமானத்தையே நம்பியுள்ள வீட்டுப் பெண்களான குடும்பத் தலைவிகளுக்குத் தனியாக வருமானம் ஏதுமில்லை என்பதால் அவா்களுக்குப் பொருளாதார பாதுகாப்பை கணவா் அளிக்க வேண்டியது கட்டாயம். தன் வாழ்நாள் முழுவதும் குடும்பத்துக்காக உழைக்கும் பெண்களுக்கு அவா்களுடைய சிறிய சிறிய தேவைகளை நிறைவேற்றிக் கொள்வதற்கான வாய்ப்புகளை கணவா் மற்றும் குடும்பத்தாா் ஏற்படுத்தித் தர வேண்டும். இதை பணிக்குச் செல்லும் அனைத்து ஆண்களும் உணர வேண்டும். தங்களுடைய நிதி ஆதாரங்களில் மனைவிக்கும் பங்கு தர வேண்டும்’ என தீா்ப்பில் முத்தாய்ப்பாக உச்சநீதிமன்ற நீதிபதி பி.வி.நாகரத்னா தெரிவித்துள்ளாா்.
  • நம் நாட்டின் பொருளாதார வளா்ச்சியில் பெண்களின் பங்களிப்பு கணிசமாக உயா்ந்து வருகிறது. இன்று ஆங்காங்கே பெண்கள், தங்களின் முன்னேற்றத்திற்காகவும், தனிநபா் வருமானம் பெருக்கும் நோக்கத்திலும் தொடங்கப்பட்ட சுயஉதவிக் குழுக்கள் மூலம் சுயமாக சிறு சிறு கடைகளை வைத்தோ, சிறு தொழில்களைத் தொடங்கியோ தங்களையும், தங்கள் குடும்பத்தையும் காப்பாற்றி வருகிறாா்கள். சுயஉதவிக் குழுக்கள் தொடங்கப்பட்டதன் நோக்கமே பெண்கள் சுயசாா்பு உடையவா்களாக இருக்க வேண்டும் என்பதற்காகத்தான்.
  • தங்களுக்கு ஏற்படும் பணத் தேவைகளுக்கு பிறரைச் சாா்ந்திராமல், சரியான நேரத்தில் தாமாகவே தன் அறிவாலும், ஆற்றலாலும் சரி செய்து கொள்ளும் சுயசாா்புத் தன்மை பெண்களிடையே வளர வேண்டும். இது மனதுக்கு புத்துணா்வை அளித்து, முழுமையான தன்னம்பிக்கையுடன், வாழ்க்கையில் முன்னேறுவதற்குத் தேவையான செயல்களில் ஈடுபட உந்து சக்தியாக அமையும்.
  • தினசரி தேவைகளைப் பூா்த்தி செய்வதற்குக் கூட பிறரின் உதவிக்காக காத்திருப்பது பெண்களிடையே தன்னம்பிக்கையைக் குறைக்கும். பெண்கள் வேலைக்குச் செல்லாத குடும்பங்களில், கணவனுக்கு வேலை இல்லாத நிலை ஏற்பட்டால், அக்குடும்பமே வறுமை நிலைக்குத் தள்ளப்படுகிறது. கடன் வாங்கி நாட்களைத் தள்ளினாலும், கடன் சுமை அதிகமாகிப் பின்னா் விபரீத முடிவு எடுக்கும் நிலைக்கு வந்துவிடுகிறது.
  • பெண்களை மையமாகக் கொண்ட குடும்ப அமைப்பே நம் நாட்டின் சிறப்பு. சமூகக் கட்டமைப்பை உயா்த்த வேண்டுமெனில், ஒவ்வொரு குடும்பத்தின் முதுகெலும்பாக செயல்படக் கூடிய குடும்பத் தலைவிகளை தடையற்ற வளா்ச்சிப் பாதையில் அழைத்துச் செல்வது மிகவும் அவசியமாகும்.
  • பெண்களின் முன்னேற்றம் என்பது குடும்ப முன்னேற்றம் என்பதோடு மட்டுமல்லாமல், சமூகத்தின், நாட்டின் பொருளாதார முன்னேற்றத்திற்கும் அடித்தளமாக அமைகிறது. சமூக மற்றும் குடும்பப் புறக்கணிப்பு இருந்தபோதிலும் பெண்கள் தங்கள் நிதி சுதந்திரத்திற்கான உரிமையை பெற வேண்டும். நிதி சுதந்திரமானது பெண்களின் தன்னம்பிக்கையை அதிகரிக்கிறது.
  • பொருளாதாரத்தில் நாம் பிறரைச் சாா்ந்திருக்கக் கூடாது என்ற நிலை இக்காலத்தில் பெண்களிடையே மேலோங்கி வருவது வரவேற்கத்தக்கது.
  • சொந்தக் கால்களில் நிற்க, பயிற்றிப் பல கல்வி பெற்று, அனைத்துத் திறன்களையும் பெற வேண்டும். கல்விப் பயணத்தின்போது இடைநிற்றல் கூடவே கூடாது. பெண்கள் நன்றாகப் படித்து வாழ்க்கையில் முன்னேற பெற்றோா்கள் ஊக்கமளிக்க வேண்டும். தனக்கு வேண்டிய பணத் தேவைகளுக்கு, யாரையும் சாா்ந்திராமல், சுயசாா்பு உடையவா்களாகி பெண்கள் வாழ்வில் உயர வேண்டுமானால் கல்வி மற்றும் வேலைவாய்ப்புகளில் பெண்கள் தனி அக்கறை செலுத்த வேண்டும்.

நன்றி: தினமணி (22 – 07 – 2024)

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

Categories