TNPSC Thervupettagam

இந்தியாவை அறிவோம்: ஆந்திரம்

April 25 , 2019 1911 days 1033 0
மாநில வரலாறு
  • புவியியல்ரீதியாக வட இந்தியாவுக்கும் தென்னிந்தியாவுக்கும் இடையிலான இணைப்பாக இருக்கும் மாநிலம் ஆந்திரம்.
  • ஆந்திரத்தின் கடலோரப் பகுதிகள், ராயலசீமா பிராந்தியங்கள் சென்னை மாகாணத்தில் இருந்த நிலையில் சென்னையைத் தலைநகராகக் கொண்டு ஆந்திரத்தைத் தனி மாநிலமாக அறிவிக்க வேண்டும் என்று நீண்ட நாட்களாக இருந்த கோரிக்கை, ஒருகட்டத்தில் போராட்டமாக வெடித்தது.
  • தொடக்கத்தில் பிரதமர் நேருவால் புறக்கணிக்கப்பட்ட இந்தக் கோரிக்கை, 1951-ல் சுவாமி சீதாராம் மேற்கொண்ட உண்ணாவிரதம் மூலம் தீவிரமடைந்தது.
  • அடுத்து, 1952 அக்டோபர் 19-ல் சாகும் வரை உண்ணாவிரம் தொடங்கிய பொட்டி ஸ்ரீராமுலு 58 நாட்கள் தொடர் உண்ணாவிரதம் இருந்த நிலையில் உயிரிழந்தார்.
    • 1953 அக்டோபர் 1-ல் ஆந்திரம் தனி மாநிலமாக அறிவிக்கப்பட்டது.
    • அப்போது அதன் தலைநகர் கர்னூல்.
  • 1956 நவம்பர் 1-ல் ஹைதராபாதைத் தலைநகராகக் கொண்டு ஆந்திர பிரதேசம் உருவானது.
புவியியல் அமைப்பு
  • இந்தியாவின் தென் கிழக்கில் அமைந்திருக்கும் ஆந்திரம், 1,62,968 சதுர கிமீ பரப்பளவைக் கொண்டது.
  • நாட்டின் ஏழாவது பெரிய மாநிலம் இது.
  • இந்தியாவின் பரப்பளவில் ஆந்திரம் 95%. ஒரு சதுர கிலோமீட்டருக்கு 303 பேர் என்று மக்கள் அடர்த்தி கொண்டது (தமிழகத்தின் மக்கள் அடர்த்தி 555). மக்கள்தொகை 4,95,77,103.
ஆறுகள்
  • கோதாவரியும் கிருஷ்ணாவும் பிரதான ஆறுகள்.
  • இந்தியாவின் நீராதாரத்தில் இந்த இரண்டு ஆறுகளின் பங்கு 30%.
  • கங்கைக்குப் பிறகு இந்தியாவின் இரண்டாவது நீளமான நதியான கோதாவரி மகாராஷ்டிரத்தில் உற்பத்தியாகி தெலங்கானா, ஆந்திரம், சத்தீஸ்கர், மத்திய பிரதேசம், ஒடிஷா, கர்நாடகா ஆகிய மாநிலங்களில் பாய்கிறது.
  • கிருஷ்ணா இந்தியாவின் நான்காவது நீளமான நதி. இதுவும் மகாராஷ்டிரத்தில் உற்பத்தியாகும் நதிதான்.
  • துங்கபத்ரா, பெண்ணாறு, நாகவள்ளி உள்ளிட்ட ஆறுகளும் இம்மாநிலத்தில் பாய்கின்றன.
காடுகள்
  • ஆந்திர வனப் பகுதிகளின் மொத்தப் பரப்பளவு 22,862 சதுர கிமீ.
  • தக்காண பீடபூமி, மத்திய பீடபூமி, கிழக்கு பீடபூமி, கிழக்குக் கடற்கரைச் சமவெளி என்று இம்மாநிலத்தின் வனப் பகுதிகள் நான்காகப் பிரிக்கப்பட்டிருக்கின்றன.
  • கிழக்குத் தொடர்ச்சி மலை, நல்லமலை, வங்காள விரிகுடாவின் கடலோரப் பகுதிகள் ஆகியவற்றில் வனப் பகுதிகள் செழித்திருக்கின்றன.
  • 13 சரணாலயங்கள், ஒரு தேசியப் பூங்கா இங்கு உண்டு.
கனிம வளம்
  • நிலக்கரி, இயற்கை வாயு, இரும்புத் தாது, சுண்ணாம்புக்கல் கணிசமாக உற்பத்தி செய்யப்படுகின்றன.
  • 2010-11 கணக்கின்படி, இந்தியாவின் கனிம வளத்தில் ஆந்திரத்தின் பங்கு 81%.
பொருளாதாரம்
  • பொருளாதாரரீதியாக வேகமாக வளர்ந்துவரும் மாநிலம் ஆந்திரம்.
  • மாநிலத்தின் 2017-18 நிதியாண்டு ஜிடிபி மதிப்பு ஏறக்குறைய ரூ.5 லட்சம் கோடி என்று மதிப்பிடப்பட்டிருக்கிறது.
  • நாட்டின் கோகோ பீன்ஸ் உற்பத்தியில் ஆந்திரத்தின் பங்களிப்பு 7%.
  • மீன், புகையிலை, மிளகாய், வாழை, எலுமிச்சை உற்பத்தியிலும் கணிசமான பங்கு வகிக்கிறது.
  • வர்த்தகத்தில் இலகுவான சூழலைக் கொண்ட மாநிலம் என்று உலக வங்கியால் பாராட்டப்பட்ட பெருமை ஆந்திரத்துக்கு உண்டு.
முக்கியப் பிரச்சினைகள்
  • 2014 பிப்ரவரியில் மாநில மறுசீரமைப்பு மசோதா மாநிலங்களவையில் நிறைவேற்றப்பட்டபோது, ஆந்திரத்துக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கப்படும் என்று மத்திய அரசு தெரிவித்தது.
  • கோதாவரி ஆற்றில் போலவரம் நீர்ப்பாசனத் திட்டம், வேளாண் துறை பிரச்சினைகள், பட்டியலின சமூகத்தினருக்கு நலத் திட்டங்கள் போன்றவை பிற பிரச்சினைகள்.

நன்றி: இந்து தமிழ் திசை

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்