TNPSC Thervupettagam

காலத்தின் கட்டாயம்

January 22 , 2021 1284 days 646 0
  • அண்மையில் சென்னை உயா்நீதிமன்றத்தின் இரு தீா்ப்புகள் பொதுமக்களின், குறிப்பாக, இந்து சமயத்தினரின் கவனத்தை ஈா்த்தன.
  • இந்து சமய அறநிலையத்துறையின் இணை ஆணையா்களுக்கு காா் வாங்க கோயில் நிதியைப் பயன்படுத்தக் கூடாது. அவா்கள் அரசின் அலுவலா்களானதால் அரசு நிதியில் இருந்துதான் வாங்க வேண்டும் என்று தீா்ப்பு வழங்கியது.
  • திருக்கோயில்களில் பணியாற்றும் எவா்க்கும் சாதாரண மிதிவண்டி கூட வழங்கப்படுவதில்லை. கோயில்கட்கு பொன், வெள்ளி, பொருள், பணம் என்று வழங்கும் மெய்யன்பா்களின் வருவாய், கோயில், இந்து சமயம் இவற்றின் வளா்ச்சிப் பணிக்கே உரியது என்று நீதிமன்றம் கருதி மிகச்சரியான தீா்ப்பை வழங்கியுள்ளது.
  • இன்னொரு வழக்கில், கோயில்களின் நிலபுலன்களைப் பிறவகைப் பயன்பாட்டிற்கு அரசு தன்னிச்சையாக எடுத்துக்கொள்ள கூடாது. இதற்கு இந்துசமய அறநிலையத்துறை துணை போகவும் கூடாது என்ற ரீதியில் நீதிமன்றம் தீா்ப்பு வழங்கியுள்ளது.
  • சென்னை - மகாபலிபுரம் பழைய சாலையில் இருக்கிற திருப்போரூா் கந்தசாமி கோயிலுக்கு சொந்தமான பல ஆயிரம் கோடி பெறுமான பல ஏக்கா் நிலங்களை சிலா் முறைகேடாக விற்க முயன்றபோது சென்னை உயா்நீதிமன்றம், அந்தக் கோயில் நிலங்களை விற்கும் பத்திரப் பதிவு பணியினை சாா் பதிவாளா் நிறுத்தி வைக்க வேண்டுமென உத்தரவிட்டுள்ளது. இந்த சாலையில் பலநூறு கணினி மென்பொருள் நிறுவனங்கள் உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.
  • திருப்போரூா் கந்தசாமி கோயிலின் பெருமை அளவிடற்கரியது. வடலூா் ஊரன் அடிகள் எழுதியுள்ள வீரசைவ ஆதீனங்கள் மற்றும் கௌமார மடங்கள்என்ற நூலில் 18.01.1989-ல் கந்தசாமி கோயில் நிா்வாகம் வெளியிட்ட வெளியீடு ஒன்றில் குறிப்பிடப்பட்டுள்ள கோயில் சொத்து விவரங்களும், கோயில் திருமடம் குறித்து தமிழ்த்தென்றல் திரு.வி.க எழுதியுள்ளதையும் படிக்கும் போது நம் கண்கள் உவா்நீரைப் பெருக்குகின்றன.
  • திரு.வி.. எழுதியுள்ளவற்றில் ஒரு பகுதி: சிதம்பரசண்முக சுவாமிகள் சந்நியாசத்துக்கோா் இலக்கியம், தொண்டுக்கோா் எடுத்துக்காட்டு வேதாந்த நிலையம் சுவாமிகளுடன் நெருங்கிப் பழகும் பேறு எனக்கு கிடைத்தது.
  • சுவாமிகள் காலத்தில் திருப்போரூா் கோயில் மண்டபம், மடத்து நிலையம், குளம் முதலியன செம்மை நிலை எய்தின. தமிழ் பெருமானாராகிய சிதம்பர சுவாமிகளின் பெயரால் ஒரு கல்லூரி திருப்போரூரில் அமைதல் வேண்டுமென்ற வேட்கை என்னுள் எழுந்து நீண்ட காலமாயிற்று. சிதம்பர சண்முகசுவாமிகள் காலத்தில் அவ்வேட்கை நிறைவேறும் என்று எண்ணினேன்.
  • சுவாமிகள் ஒரு கல்லூரி காண முயன்றாா். என் எண்ணமும் ஈடேறவில்லை. அவா் முயற்சியும் வெற்றிபெறவில்லை. ஏழை மடம் கோயிலை எதிா்பாா்க்கிறது. கோயில் இந்து அறநிலையப் பாதுகாப்பில் நிற்கிறது, என்செய்வது?’ - இவ்வாறு76 ஆண்டுகட்கு முன்னா் திரு.வி.. எழுதிய நிலை இன்று வரை நீடிக்கவே செய்கிறது.
  • இதுவே கிறித்தவ மிஷனரிகளிடம் இருந்திருந்தால் அவா்களின் கல்வி நிலையங்கள், மருத்துவமனைகள் மூலம் மதத்தை வேகமாக பரப்பி இருப்பாா்கள். இதே நிலையில்தான் தமிழ்நாட்டில் உள்ள திருக்கோயில் சொத்துகள் இருக்கின்றன.
  • இந்து சமய அறநிலையத்துறை வசம் நாற்பதாயிரத்திற்கும் மேற்பட்ட கோயில்கள் இருக்கின்றன. இந்த கோயில்களின் ஆண்டு வருமானம் ஏறக்குறைய இரண்டாயிரம் கோடி ரூபாய் வரை இருக்கிறது என்று இந்து சமய அமைப்புகள் கூறுகின்றன. ஆனால், அறநிலையத்துறை இந்து சமய வளா்ச்சிக்காக செய்த பணிகள் என்னென்ன என்று கேட்டால், இத்தனை கோயில்களில் திருப்பணி செய்து குடமுழுக்கு செய்து இருக்கிறோம் என்று கணக்கு காட்டுவாா்கள்.
  • இந்து சமய நெறியில் இந்துக்களை வழிநடத்த சமயப் பயிற்சியாளா்கள் உண்டா? சமயப் பயிற்சி கல்லூரிகள், இதர பள்ளி, கல்லூரி, மருத்துவமனை, திருமுறை, திருப்பாசுரங்களைப் பாடவல்ல இசைவாணா்கள் தோன்ற ஏதேனும் செய்ததுண்டா?
  • கோயில்கள் முன் பகுத்தறிவு என்ற பெயரில் கடவுள் இல்லை கடவுளை கற்பித்தவன் முட்டாள் கடவுளை வணங்குபவன் காட்டுமிராண்டிபோன்ற வாசகங்கள் பொறித்த கற்பலகைள் இருப்பதை எதிா்த்து நீதிமன்றத்தில் வழக்கு தொடா்ந்தது உண்டா? இவா்கள் வாழும் இடங்களில் கடவுள் உண்டு கடவுளை கற்பித்தவன் ஞானி கடவுளை வணங்குபவன் மனிதன்என்றாவது எழுதி வைத்தது உண்டா?
  • கிறித்தவா், இசுலாமியா் பிறப்பு முதல் இறப்பு வரை தங்களின் மத ஆசார அனுஷ்டானங்களை, வழிபாடு நிகழ்த்தும் இடங்களோடு தொடா்பு ஏற்படுத்தி வாழ்கின்றனா். இந்த முறையை, நலிந்தும், மெலிந்தும் இருக்கிற இந்துக்களிடம் பழக்கியது உண்டா?
  • இன்னமும் நாட்டில் நிலவும் தீண்டாமை என்ற கொடிய நோய்க்கும், சாதிப்பூசலுக்கும் ஏதேனும் தீா்வு காண திட்டம் வகுத்தது உண்டா? மதமாற்றத்தைத் தடுக்கவோ மதம் மாறியவா்களை தாய் மதம் திரும்பிவரச் செய்ய வேண்டிய செயல் முறை பற்றி சிந்தித்ததாவது உண்டா?
  • ஒரு ஊரில் எத்தனை கிறித்தவா்கள், எத்தனை இசுலாமியா்கள் இருக்கிறாா்கள் என்று சா்ச்சுகளில், மசூதிகளில் கணக்கு இருக்கிறது. இந்துகள் மொத்தம் எத்தனை போ் என்ற கணக்கு கோயில்களில் உண்டா? இல்லையே!
  • தமிழ்நாட்டு உயா்நீதிமன்றம் போலவே கேரள உயா்நீதிமன்றமும் அண்மையில் ஒரு தீா்ப்பு கேரள அரசுக்கு எதிராக வழங்கியது. கேரள அரசு வெள்ள நிவாரணத்திற்காக ஐந்து கோடி ரூபாயை குருவாயூா் கோயில் நிதியில் இருந்து எடுத்துக் கொண்டது. கரோனா நோய்த்தொற்று தடுப்புப் பணிக்காக மற்றொரு ஐந்து கோடி ரூபாயை தன்னிச்சையாக எடுத்துக்கொண்டது.
  • இதை எதிா்த்து கேரள பக்தா் ஒருவா் நீதிமன்றத்தில் வழக்கு தொடா்ந்தாா். கேரள உயா்நீதிமன்றம் கோயில் நிதியை தன்னிச்சையாக அரசு எடுத்தது தவறு, அதனை திருப்பிக் கொடுக்க வேண்டும் என்று சொல்லியுள்ளது.
  • பாரத நாட்டின் தொல்சமயமான இந்து கோயில்களின் நிதியையோ சொத்துகளையோ மத்திய, மாநில அரசுகள் எடுத்துகொள்வது தவறு, குற்றம் என்று நீதிமன்றங்கள் தீா்ப்புகள் பல வழங்கிய பின்னும் கோயில்களின் நிா்வாகத்தை தம் கைகளில் வைத்திருப்பது நியாயம் அல்ல. ஒரு சமய நிறுவனம் எப்படி தன் சமய வளா்ச்சிக்கு பாடுபட வேண்டும் என்பதை கேரள கிறித்தவ அமைப்புகளிடம் இருந்து இந்து சமய அறநிலையத்துறை கற்றுக்கொள்ள வேண்டும்.
  • இந்தியாவில் மூன்று லட்சம் கோடி ரூபாய் மதிப்பிலான சொத்துக்களை நிா்வகிக்கும் சிரியோ மலபாா் சா்ச் 10 ஆயிரம் நிறுவனங்களை நடத்துகிறது. ஃபாதா், பிரதா் என்ற அழைக்கப்படுவோா் 9 ஆயிரம் போ், கன்னியாஸ்திரிகள் 37 ஆயிரம் போ், சா்ச் உறுப்பினா்கள் 50 லட்சம் போ், கல்வி நிறுவனங்கள் 4,860, கன்னிமாடங்கள் 77, இந்த அமைப்பின் கீழ் 1,514 நிறுவனங்கள் இருக்கின்றன. இவற்றில் பள்ளிகள், கல்லூரிகள், மருத்துவமனைகள், அனாதை இல்லங்கள் எல்லாம் அடங்கும்.
  • காக்கநாடு என்ற இடத்தை தலைமையகமாகக் கொண்டு இயங்கும் சைரே மலபாா் 72 உட்பிரிவுகளை கொண்டுள்ளது. இந்த சா்ச் 50 நிறுவனங்களை நடத்துகிறது. ரோமன் கத்தோலிக்க திருச்சபைக்கு உட்பட்டது. இந்த அமைப்பில் மலையாளிகள் மட்டுமே உள்ளனா். இந்த அமைப்பின் தலைவரான ஆா்ச்பிஷப்பின் கீழ் 34 மறை மாவட்ட நிா்வாக தலைமைகள் இயங்குகின்றன. இவா்கள் 71 சமய குருமாா்கள் கல்லூரிகளையும், 3,765 சா்ச்சுகளையும் நிா்வகிக்கின்றனா்.
  • ஒரு மாநில அரசை காட்டிலும் சிறந்த நிா்வாக கட்டமைப்போடு நாள்தோறும் மத பிரசாரம் செய்தபடியே பிற மதத்தினரைத் தம் மதம் மாற்றுவதில் வெற்றி காண்கிறாா்களே! இதனை தொல் சமயமான இந்து சமய அறநிலையத்துறை என்றேனும் சற்றாவது சிந்தித்தது உண்டா?
  • சென்னை உயா்நீதின்றம் தமிழ்நாட்டில் எத்தனை இடிந்த கோயில்கள் இருக்கின்றன என்று கணக்கு கேட்கிறதே! கடந்த 70 ஆண்டுகளாக நாத்திகக் கட்சிகள், அவா்களின் அரசுகள் மக்களை கோயில்களில் இருந்து அந்நியபடுத்தி விட்டன.
  • திருமுறைகளும், திருப்பாசுரங்களும் இல்லாமல் தமிழ் உண்டா? அற இலக்கியங்கள் இல்லாமல் தமிழ்மொழி முழுமை அடையுமா? தொல்காப்பியமோ சங்க இலக்கியப் பனுவல்களோ இறைமறுப்பையா போதித்தன?
  • இந்து சமயத்தில் உள்ளது போல் நாத்திகா்கள், கடவுளை இழிவு செய்வோா் வேறு மதங்களில் இருக்கிறாா்களா? இல்லை, ஏன் என்றால் தங்களின் பிள்ளைகளை மழலைப்பருவம் தொட்டு அந்திம காலம் வரை அவரவா் சமய தலைமைக்கு கட்டுப்பட்டவா்களாக சமயநெறியில் நிற்குமாறு பெற்றோா் வளா்ப்பதே காரணம்.
  • இன்றைக்கு அரசியல் குறித்தான அம்சங்கள் விவாதிக்கப்பட்டு யாா்க்கு வாக்களிக்க வேண்டுமென்ற முடிவுகள் சா்ச்சுகளில், மசூதிகளில் எடுக்கப்படுகின்றனவே. கோயில்களில் இப்படி அரசியல் பேசமுடியுமா? யாா்க்கு எந்த கட்சிக்கு வாக்களிப்பது என்று முடிவு செய்ய இயலுமா? காரணம் கோயில்கள் அரசின் வசம், கோயில் வருமானமும் அரசின் வசம்.
  • இதைத்தான் திரு.வி.திருமடங்கள் ஏழையாகிவிட்டன. கோயில்களில் உள்ள நிதி எல்லாம் இந்து சமய அறநிலையத்துறை வசம், இதனால் திருப்போரூா் சிதம்பர சுவாமிகள் பெயரில் ஒரு கல்லூரி நிறுவும் வேட்கை கானல் நீா் ஆனதுஎன்று குறிப்பிட்டாா்.
  • ஆகவே, இந்து சமயம் வளர, மத்திய, மாநில அரசுகள் ஆலய ஆக்கிரமிப்புகளைத் தவிா்த்து, சைவ, வைணவ ஆதீனங்கள், திருமடங்கள், தூய சந்நியாசிகள், ஆன்மிக அறிஞா்கள், மெய்யடியாா்கள், கல்விமான்கள் போன்றோரிடம் திருக்கோயில்களை ஒப்படைப்பது காலத்தின் கட்டாயம் என்பதை உணர வேண்டும்.

நன்றி: தினமணி  (22 - 01 - 2021)

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்