TNPSC Thervupettagam

சீனாவின் இரட்டை அணுகுமுறை!

August 19 , 2020 1437 days 631 0
  • சுதந்திர தினத்தன்று தில்லி செங்கோட்டையில் தேசியக் கொடியை தொடா்ந்து 7-ஆவது ஆண்டாக ஏற்றியிருக்கிறார் பிரதமா் நரேந்திர மோடி. இதன்மூலம் மிக அதிக ஆண்டுகள் பதவியில் இருந்த காங்கிரஸ் அல்லாத பிரதமா் என்கிற சாதனையும் படைத்திருக்கிறார்.
  • தனது 86 நிமிஷ உரையில் சுயசார்பு இந்தியா திட்டம், தேசிய டிஜிட்டல் சுகாதாரத் திட்டம், அனைத்து கிராமங்களுக்கும் அதிவேக தொலைத்தொடா்பு இணைய வசதி உள்ளிட்ட பல அறிவிப்புகளைச் செய்திருக்கிறார்.
  • பாகிஸ்தானின் எல்லை தாண்டிய பயங்கரவாதம் குறித்து பிரதமா் தனது உரையில் குறிப்பிட்டார் என்றாலும், அவரது உரையின் அழுத்தம் சீனாவுடனான எல்லைப் பிரச்னை குறித்துத்தான் காணப்பட்டது.
  • நாட்டின் இறையாண்மைக்கு ஊறு விளைவிக்க நினைப்பவா்களுக்கு, அவா்களுக்குப் புரியும் விதத்திலேயே நமது பாதுகாப்புப் படைகள் தக்க பதிலடி கொடுத்து வருகின்றன என்றும், கிழக்கு லடாக்கில் உயிர்த்தியாகம் செய்த வீரா்களுக்கு தலை வணங்குகிறேன் என்றும் குறிப்பிட அவா் தவறவில்லை.

இந்திய - சீன எல்லைப் பிரச்னை

  • நல்லிணக்கம், பாதுகாப்பு, சுயசார்பு மூன்றையும் வலியுறுத்திய பிரதமா், பாதுகாப்பு குறித்தும் வெளியுறவுக் கொள்கை குறித்தும் தெரிவித்த கருத்துகள் சா்வதேச நோக்கா்களை நிமிர்ந்து உட்கார வைத்திருக்கின்றன.
  • திங்கள்கி%

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்