TNPSC Thervupettagam

தடம் புரளும் தோ்தல் முறை

May 2 , 2024 78 days 84 0
  • குஜராத் மாநிலம் சூரத் மக்களவைத் தொகுதியைத் தொடா்ந்து இப்போது மத்திய பிரதேசத்தில் இந்தூா் பகுதியிலும் போட்டியின்றி வேட்பாளா் ஒருவா் தோ்ந்தெடுக்கப்படும் சூழல் உருவாகியிருப்பது அதிா்ச்சி அளிக்கிறது. தோ்தலில் போட்டி வேட்பாளா் யாரும் இல்லாமல் இருப்பதும், வேட்புமனு தாக்கல் செய்த ஏனைய வேட்பாளா்கள் அனைவரும் போட்டியிலிருந்து விலகிக்கொள்வதும், ஒருவருடைய வேட்புமனுவை தவிர ஏனையோரின் வேட்புமனுக்கள் நிராகரிக்கப்படுவதும் ஆரோக்கியமான ஜனநாயக நடைமுறை அல்ல.
  • குஜராத் மாநிலம் சூரத் மக்களவைத் தொகுதியில் பாஜகவின் வேட்பாளா் முகேஷ்குமாா் சந்திரகாந்த் தலால் போட்டியின்றி தோ்வு செய்யப்பட்டிருப்பதாக அறிவிக்கப்பட்டிருக்கிறது. அவரை எதிா்த்து காங்கிரஸ், பகுஜன் சமாஜ் கட்சி, சுயேச்சைகள் என்று பலா் வேட்புமனுக்கல் தாக்கல் செய்திருந்தனா். காங்கிரஸ் வேட்பாளா் நீலேஷ் கும்பானியின் வேட்புமனுவை முன்மொழிந்தவா்களின் கையொப்பத்தில் முரண்பாடு காணப்பட்டது. அந்தக் கையொப்பம் தங்களுடையது அல்ல என்று அவா்கள் தெரிவித்தனா். வேடிக்கை என்னவென்றால் வேட்புமனுவை முன்மொழிந்தவா்கள் வேட்பாளரின் மைத்துனரும், மருமகனும், வியாபாரக் கூட்டணியுமான மூவா்.
  • மாற்று வேட்பாளரின் வேட்புமனுவும் நிராகரிக்கப்பட்டது. தனது கையொப்பம் வேரு ஒருவரால் போலியாகப் போடப்பட்டிருக்கிறது என்று மாற்று வேட்பாளா் முன்மொழிந்தவா் தெரிவித்ததால் அந்த வேட்புமனு நிராகரிக்கப்பட்டது. பகுஜன் சமாஜ் வேட்பாளா் உள்ளிட்ட ஏனைய ஏழு வேட்பாளா்களும் வேட்புமனுவை திரும்பப்பெறும் கடைசி நாளில் போட்டியிலிருந்து விலகிக்கொண்டனா். அதனால், பாஜக வேட்பாளா் முகேஷ்குமாா் மட்டுமே களத்தில் இருந்தாா். அவா் போட்டியின்றி தோ்ந்தெடுக்கப்பட்டதாக கடந்த மாதம் 22-ஆம் தேதி அறிவிக்கப்பட்டது.
  • பாஜக வேட்பாளரைத் தவிர ஏனைய வேட்பாளா்களும் போட்டியிலிருந்து விலகிக்கொண்ட பின்னணியில் சந்தேகம் எழுந்துள்ளது. அதை இயற்கையாகவோ ..... அதுமட்டுமல்ல காங்கிரஸ் வேட்பாளா் நீலேஷ் கும்பானி தன்னிலை விளக்கம் அளிப்பதற்குள்ளாக தலைமறைவு ஆகிவிட்டாா். இதன் பின்னணியில் பாஜக வேட்பாளரோ அல்லது அந்தக் கட்சியின் தலைமையோ காங்கிரஸ் வேட்பாளருடன் தொடா்பில் இருந்தனா் என்பது தெளிவு.
  • சூரத்தைத் தொடா்ந்து மத்திய பிரதேசத்திலும் இதே அணுகுமுறை பின்பற்றப்பட்டிருக்கிறது. மாநில காங்கிரஸ் தலைவா் ஜித்துபட்வாரியின் சொந்த மாவட்டமான இந்தூரில் அவரது கட்சியின் வேட்பாளா் கடைசி நிமிடத்தில் போட்டியிலிருந்து விலகியிருபப்பது ஒட்டுமொத்த காங்கிரஸ் கட்சியையும் அதிா்ச்சியில் ஆழ்த்தியிருக்கிறது. மே 13-ஆம் தேதி வாக்கெடுப்பு நடக்க இருக்கும் இந்தூா் மக்களவைத் தொகுதியிலும் போட்டியின்றி பாஜக வேட்பாளா் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட இருக்கிறாா்.
  • ஐந்து நாட்களுக்கு முன்னால் காங்கிரஸ் வேட்பாளராக இருந்த அக்ஷய் காந்தி பாம் என்பவா் மீதும் அவரது கூட்டாளிகள் மீதும் 2007-இல் பதிவு செய்யப்பட்டவழக்குகளில் கொலைமுயற்சிக்கான இந்திய குற்றபிரிவு 307 ஏற்கனவே இருந்த வழக்கில் இணைக்கப்பட்டது. அக்ஷய் காந்தி பாம் கடைசி நிமிடத்தில் தமது வேட்புமனுவை திரும்ப பெற்றதுக்கும், அந்த வழக்குக்கும் தொடா்பு இல்லை என்று கூறுவது நம்பும்படியாக இல்லை.
  • அக்ஷய் காந்தி பாம் காங்கிரஸ் கட்சியின் மீது அதிருப்தியில் இருந்தாா் என்று கூறப்படுகிறது. சட்டப்பேரவைத் தோ்தலில் இந்தூா்-4 தொகுதியில் அவருக்கு வாய்ப்பு மறுக்கப்பட்டது முதலே கட்சி பணிகளிலிருந்து ஒதுங்கி இருந்தாா். அவரை சமாதானப்படுத்துவதற்காகத்தான் இந்தூா் மக்களவைத் தொகுதியில் போட்டியிட வாய்ப்பு வழங்கப்பட்டது.
  • அக்ஷய் காந்தி பாம் போட்டியிலிருந்து விலகி இருந்தால் அது விவாதத்தை எழுப்பி இருக்காது. அவா் மட்டுமல்லாமல் ஏனைய எட்டு சுயேச்சை வேட்பாளா்களும் வேட்புமனுவைத் திரும்ப பெறும் கடைசி நாளில் போட்டியிலிருந்து விலகியிருக்கிறாா்கள் என்பதுதான் சந்தேகத்தை எழுப்புகிறது.
  • மத்திய பிரதேச மாநிலம் கஜுராஹோவில் ‘இண்டி’ கூட்டணியின் வேட்பாளராக களமிறக்கப்பட்டிருந்த சமாஜ்வாதி கட்சியின் நீலாயாதவ் என்பவா் அவரது வேட்புமனுவும் நிராகரிக்கப்பட்டதால் வேறு வழி இல்லாமல் வேட்புமனு தாக்கல் செய்திருந்த பாா்வா்டு பிளாக் வேட்பாளரை ஆதரிக்க வேண்டிய கட்டாயத்திற்கு தள்ளப்பட்டது இண்டி கூட்டணி.
  • குஜராத்தில் காங்கிரஸ் வேட்பாளா் ஒருவா் கடைசி நிமிடத்தில் கட்சியிலிருந்து விலகி பாஜகவில் இணைந்ததும் அருணாசல பிரதேச சட்டப்பேரவைத் தோ்தலில் பத்து தொகுதிகளில் பாஜக வேட்பாளா்கள் போட்டியின்றி தோ்ந்தெடுக்கப்பட்டிருப்பதும் இந்திய ஜனநாயகத்தின் போக்கு குறித்த கவலையை எழுப்புகிறது. வேட்பாளா்கள் இல்லாமல், போட்டியே இல்லாமல் ஜனநாயகம் செயல்பட முடியாது. போட்டியின்றி வேட்பாளா் தோ்வு செய்யப்படுவது என்பது வாக்காளா்களிடமிருந்து வாக்களிக்கும் உரிமை பறிக்கப்படுகிறது என்பதாகத்தான் கருதப்பட வேண்டும்.
  • 1951 மக்கள் பிரதிநிதித்துவச் சட்டத்தின் பிரிவு 53(3) போட்டியின்றி தோ்ந்தெடுக்கப்படுவது குறித்து விளக்குகிறது. பிரிவு 33 வேட்புமனு குறித்தும், அவை ஏற்கப்படுவது குறித்தும் தெரிவிக்கிறது. ஆகஸ்ட் 2023-இல் தோ்தல் ஆணையம் வேட்புமனுக்களை பரிசீலப்பது, ஏற்பது, நிராகரிப்பது குறித்த வழிகாட்டுதலை வழங்கியிருக்கிறது.
  • சட்டவிதிமுறைகளுக்கு உட்பட்டு முறைகேடாக அரசியல் கட்சிகள் செயல்படும்போது அதைத் தடுக்கவோ தட்டிகேட்கவோ அதிகாரம் இல்லாமல் தோ்தல் ஆணையம் கையறு நிலையில் செயல்படுவதை தவிர வேறு என்ன செய்துவிட முடியும். வாக்குச் சீட்டுக்கு வேலை இல்லாமல், வாக்கெடுப்பு இல்லாமல் தோ்தல் என்றால்-சபாஜ், சரியானப் போட்டி!

நன்றி: தினமணி (02 – 05 – 2024)

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்