TNPSC Thervupettagam

தமிழ்நாடு குறித்த தேசிய குடும்ப நல ஆய்வு 2019-21 (NFHS-5) – பாகம் 01

October 18 , 2024 6 hrs 0 min 72 0

தமிழ்நாடு குறித்த தேசிய குடும்ப நல ஆய்வு 2019-21 (NFHS-5) – பாகம் 01

(For English version to this please click here)

அறிமுகம்

  • தேசிய குடும்ப நல ஆய்வு 2019-21 (NFHS-5) என்பது முக்கியமான தொடரின் ஐந்தாவது மறுசெயல் முறை ஆகும்.
  • இது இந்தியா மற்றும் அதன் மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்கள் (UTs) முழுவதும் மக்கள் தொகை, சுகாதாரம் மற்றும் ஊட்டச்சத்து பற்றிய விரிவான தரவை வழங்குகிறது.
  • NFHS-5 ஆனது NFHS-4 மீதான கட்டமைப்பின் மீது உருவாக்கப் பட்டுள்ளதோடு பல முக்கியமான குறிகாட்டிகளுக்கான மாவட்ட அளவிலான மதிப்பீடுகளையும் உள்ளடக்கியது.

  • இந்த அம்சம் காலப்போக்கில் விரிவான ஒப்பீடுகளை எளிதாக்குகிறது.
  • இது முந்தையக் கருத்துக் கணிப்புகளின் முக்கியக் கருப்பொருள்களைத் தக்க வைத்துக் கொண்டாலும், NFHS-5 பல புதிய தலைப்புகளை அறிமுகப் படுத்துகிறது.
  • இதில் பாலர் கல்வி, மாற்றுத் திறனாளிகள், கழிப்பறை வசதிகள், இறப்புப் பதிவு, மாத விடாய் சுகாதார நடைமுறைகள் மற்றும் கருக் கலைப்பின் அம்சங்கள், முறைகள் மற்றும் நோக்கங்கள் ஆகியவை அடங்கும்.
  • மருத்துவம், தடய அறிவியல் மற்றும் உயிரி வேதியியல் சோதனையின் (CAB) நோக்கமும் விரிவடைந்துள்ளது.
  • இது இப்போது இடுப்பிற்கு இடைப்பட்ட பகுதி மற்றும் இடுப்புச் சுற்றளவுகளின் அளவீடுகளையும் உள்ளடக்கியது.
  • தற்போது கூடுதலாக, இரத்த அழுத்தம் மற்றும் குளுக்கோஸ் மதிப்பீடுகளுக்கான வயது வரம்பு விரிவுபடுத்தப் பட்டுள்ளது.
  • எனினும் இந்தச் சுற்றில் எச்.ஐ.வி பரிசோதனை விலக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
  • NFHS-5 தேசிய, மாநில / யூனியன் பிரதேசங்கள் மற்றும் மாவட்ட அளவிலான மதிப்பீடுகளை வழங்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.
  • இது உடல்நலம் மற்றும் குடும்ப நலன் குறித்த மதிப்புமிக்க நுண்ணறிவுகளைத் தொடர்ந்து வழங்குகிறது.
  • இருப்பினும், பாலியல் நடத்தை, குடும்ப வன்முறை மற்றும் எச்.ஐ.வி / எய்ட்ஸ் அறிவு தொடர்பான சில முக்கியமான குறிகாட்டிகள் மாநில மற்றும் தேசிய அளவில் மட்டுமே கிடைக்கின்றன.
  • இந்த ஆய்வை இந்திய அரசின் சுகாதாரம் மற்றும் குடும்ப நல அமைச்சகம் மேற்கொண்டது.
  • இது மும்பையில் உள்ள சர்வதேச மக்கள்தொகை அறிவியல் நிறுவனத்தால் நடத்தப்படுகிறது.
  • NFHS-5 ஆனது சுகாதாரத் துறையின் முன்னேற்றத்தைக் கண்காணிப்பதற்கு அவசியமான உயர்தரத் தரவை வழங்குவதை நோக்கமாகக் கொண்டுள்ளது.
  • இந்தக் கண்டுபிடிப்புகள் ஏற்கனவே உள்ள திட்டங்களை மதிப்பிடவும், இலக்குசார் தலையீடுகள் தேவைப்படும் குறிப்பிட்டப் பகுதிகளை அடையாளம் காணவும் உதவுகிறது.
  • இறுதியில், இந்தத் தரவுகள் பின்தங்கிய மக்களுக்கான புதிய சுகாதார முயற்சிகளின் வளர்ச்சிக்கு வழிகாட்டுகிறது.

மாநில விவரம்: தமிழ்நாடு

புவியியல் கண்ணோட்டம்

  • 130,058 கிமீ² பரப்பளவைக் கொண்ட தமிழ்நாடு, புவியியல் பரவலின் அடிப்படையில் இந்தியாவில் 11 வது இடத்தில் உள்ளது.
  • இந்த மாநிலம் 38 மாவட்டங்களாக பிரிக்கப்பட்டுள்ளது.

மக்கள்தொகை புள்ளிவிவரங்கள்

  • தமிழ்நாடு 7.21 கோடிக்கும் அதிகமான மக்கள்தொகையைக் கொண்டிருப்பதாக மதிப்பிடப் பட்டுள்ளது என்ற வகையில் இது இந்தியாவின் மொத்த மக்கள்தொகையில் தோராயமாக 5.94% ஆகும்.
  • 2021 ஆம் ஆண்டில் தமிழ்நாட்டின் மக்கள் தொகை 7.6 கோடியை எட்டும் என்று கணிக்கப் பட்டது.

பட்டியலிடப்பட்ட சாதியினர் மற்றும் பட்டியலிடப்பட்ட பழங்குடியின மக்கள்தொகை

  • 2011 மக்கள்தொகை கணக்கெடுப்பின்படி, தமிழ்நாட்டில் பட்டியலிடப்பட்ட சாதியினர் (SC) மக்கள் தொகை தோராயமாக 1.44 கோடியாக (20.01%) உள்ளது.
  • பட்டியலிடப்பட்ட பழங்குடியினர் (ST) மக்கள் தொகை சுமார் 0.08 கோடியாக (1.10%) உள்ளது.

மாவட்ட அளவிலான விநியோகம்

  • 38 மாவட்டங்கள் மத்தியில், ST பிரிவினர் ஆதிக்கம் செலுத்தும் மக்கள்தொகை கொண்ட முதல் ஐந்து மாவட்டங்கள், மாநிலத்தில் உள்ள ST மக்கள்தொகையில் 45.71% அளவினைக் கொண்டு உள்ளது.
  • SC பிரிவினர் ஆதிக்கம் செலுத்தும் அளவில் மக்கள்தொகை கொண்ட முதல் ஐந்து மாவட்டங்கள், தமிழ்நாட்டில் உள்ள SC மக்கள்தொகையில் சுமார் 16.40% அளவினைக் கொண்டு உள்ளது.

மாநில நெடுஞ்சாலைகள்

  • மொத்த நீளம்: 12,095 கி.மீ
  • மொத்த சாலை வலையமைப்பு சதவீதம்: 6.91%

மக்கள் தொகைப் பரவல்

கிராமப்புற மக்கள் தொகை

  • மொத்த மக்கள்தொகையின் சதவீதம்: 51.6%

நகர்ப்புற மக்கள் தொகை

  • மொத்த மக்கள் தொகையின் சதவீதம்: 48.4%

மக்கள் தொகையியல்

மாவட்ட மக்கள் தொகைப் பரவல்

  • இம்மாநிலத்தில், மொத்தம் 38 மாவட்டங்கள் உள்ளன.
  • இவற்றில் 9 மாவட்டங்களில் 30 லட்சம் மற்றும் அதற்கு மேற்பட்ட மக்கள் தொகை உள்ளது.
  • கூடுதலாக, 7 மாவட்டங்களில் 20 முதல் 30 லட்சம் மக்கள் உள்ளனர்.
  • பதிமூன்று மாவட்டங்களில் 10 முதல் 20 லட்சம் மக்கள் உள்ளனர்.
  • இறுதியாக, 3 மாவட்டங்களில் 10 லட்சத்திற்கும் குறைவான மக்கள் தொகை உள்ளது.

பாலின விகிதம்

  • இம்மாநிலத்தில் பிறப்பின் போது பாலின விகிதம் 1000 ஆண்களுக்கு 908 பெண்கள் உள்ளது.
  • 1000 ஆண்களுக்கு 899 பெண்கள் உள்ள நிலையில் இந்த எண்ணிக்கை தேசிய சராசரியை விட அதிகமாக உள்ளது.

வயதுப் பரவல்

  • இங்கு மொத்த மக்கள் தொகையில் 14.2% பேர் 10 முதல் 19 வயதுக்கு உட்பட்டவர்கள் என மதிப்பிடப் பட்டுள்ளது.
  • மேலும், மக்கள் தொகையில் 59.1% பேர் 20 முதல் 59 வயதுக்கு இடைப்பட்டவர்கள் ஆவர்.
  • இதில் மீதமுள்ள 13.7% பேர் 60 வயது மற்றும் அதற்கு மேற்பட்டவர்கள் ஆவர்.

பிறப்பு மற்றும் இறப்பு விகிதம்

  • இம்மாநிலத்தில் பிறப்பு விகிதம் 2005 ஆம் ஆண்டில் 16.5 ஆக இருந்து 2019 ஆம் ஆண்டில் 14.2 ஆக குறைந்துள்ளது.
  • இதே போல், இறப்பு விகிதம் 2005 ஆம் ஆண்டில் 7.4 ஆக இருந்து 2019 ஆம் ஆண்டில் 6.1 ஆக குறைந்துள்ளது.

எழுத்தறிவு விகிதங்கள்

  • இம்மாநிலத்தில் கல்வியறிவு விகிதம் குறிப்பிடத்தக்க முன்னேற்றத்தைக் கண்டுள்ளது.
  • இது 2001 ஆம் ஆண்டில் 73.5% ஆக இருந்து 2011 ஆம் ஆண்டில் 80.1% ஆக அதிகரித்துள்ளது.
  • இங்கு ஆண்களின் கல்வியறிவு 86.8% ஆகவும், பெண்களின் கல்வியறிவு 73.4% ஆகவும் உள்ளது.

மொத்தப் பதிவு விகிதம் (GER)

  • ESAG 2018 அறிக்கையின்படி, உயர்கல்விக்கான மொத்தச் சேர்க்கை விகிதம் (GER) 44.3% ஆகும்.
  • உயர் நிலைக் கல்விக்கு, GER 82.03% ஆகும்.
  • இடைநிலைக் கல்விக்கான விகிதம் 93.92% ஆகும்.
  • கூடுதலாக, இது ஆரம்பக் கல்விக்கு 99.94% மற்றும் முதனிலைக் கல்விக்கு 103.89% ஆகும்.

முதியோர் மக்கள் தொகை

  • மக்கள்தொகை வயதானது ஆழமான சமூக, பொருளாதார மற்றும் அரசியல் தாக்கங்களைக் கொண்டுள்ளது.
  • தமிழ்நாட்டில், 60 வயது மற்றும் அதற்கு மேற்பட்ட முதியோர்கள் மொத்த மக்கள் தொகையில் 13.7% ஆக உள்ளனர்.

மக்களின் ஆயுட்காலம்

  • 2014 ஆம் ஆண்டு முதல் 2018 ஆம் ஆண்டு வரையிலான தரவுகளின் அடிப்படையில், 60 வயதில் ஆயுட்காலம் ஆண்களுக்கு 18.1 ஆண்டுகள் மற்றும் பெண்களுக்கு 20.0 ஆண்டுகள் ஆகும்.

பொருளாதாரச் சார்பு

  • தமிழ்நாட்டில், நகர்ப்புறங்களில் வசிக்கும் வயதான பெண்களில் 54.0% பேர் பொருளாதார ரீதியாக மற்றவர்களை முழுமையாக சார்ந்து இருக்கிறார்கள்.
  • நகர்ப்புறங்களில் உள்ள வயதான ஆண்களில் 19.0% பேருக்கும் இது பொருந்துகிறது.
  • கிராமப்புறங்களில், 66.0% வயதான பெண்களும், 30.0% வயதான ஆண்களும் பொருளாதார ரீதியாக மற்றவர்களைச் சார்ந்து உள்ளனர்.

முதியோர்களின் சார்பு விகிதம்

  • 2011 ஆம் ஆண்டில் தமிழ்நாட்டில் முதியோர் சார்பு விகிதம் 15.8 ஆக இருந்தது.
  • இந்த விகிதம் ஆண்களுக்கு 15.5 ஆகவும், பெண்களுக்கு 16.1 ஆகவும் பிரிகிறது.
  • கூடுதலாக, இந்த விகிதம் கிராமப்புறங்களில் 16.7 ஆகவும், நகர்ப்புறங்களில் 14.8 ஆகவும் உள்ளது.

ஆரோக்கியம் சார்ந்த புரிதல்

  • வயதானவர்களிடையே நோய் பற்றிய புரிதல் என்பது ஆண்களுக்கு 30% மற்றும் பெண்களுக்கு 32% என தெரிவிக்கப்பட்டுள்ளது.
  • இது இரு பாலினருக்கும் தேசிய சராசரியான 31% என்ற அளவினை விட சற்று அதிகமாகும்.

தாய்வழி ஆரோக்கியம்

  • தேசிய சுகாதார இயக்கத்தின் (NHM) கீழ் முதன்மை மற்றும் இரண்டாம் நிலைப் பராமரிப்பில் முதன்மையாக கவனம் செலுத்தி, இனப்பெருக்கம், தாய்வழி நலம், புதிதாகப் பிறந்தவர்கள், குழந்தைகள் மற்றும் இளம்பருவ சுகாதாரச் சேவைகளை வழங்குவதில் மாநிலம் குறிப்பிடத் தக்க முன்னேற்றம் அடைந்துள்ளது.

முக்கிய குறிகாட்டிகள்

  • 2005 ஆம் ஆண்டிலிருந்து முன்னேற்றம் அடைந்து, தேசிய குடும்ப சுகாதார ஆய்வு (NFHS) 4 மற்றும் 5 அறிக்கையின்படி, பிரசவத்திற்கு முந்தையப் பராமரிப்பு (ANC), மருத்துவமனைகளில் நிகழும் பிரசவங்கள், அறுவை சிகிச்சை முறைகள், இரும்பு மற்றும் ஃபோலிக் அமில (IFA) மாத்திரைகள் விநியோகம், அதிக சிக்கலான கர்ப்பங்களைப் பின்பற்றுதல் மற்றும் பிரசவத்திற்குப் பிந்தைய நடவடிக்கைகள் மற்றும் புதிதாகப் பிறந்த குழந்தையைப் பராமரிப்பது போன்ற குறிகாட்டிகள் கணிசமாகக் குறிப்பிடப் பட்டுள்ளன.

தாய்வழி இறப்பு விகிதம்

  • மகப்பேறு இறப்பு விகிதம் 100,000 உயிருள்ளப் பிறப்புகளுக்கு 97 ஆக இருந்து (2007-09), 100,000 பிறப்புகளுக்கு 60 ஆகக் கணிசமாகக் குறைந்துள்ளது.

பிறப்புக்கு முந்தைய பராமரிப்பு (ANC)

  • தமிழ்நாட்டில், 88.1% பெண்கள் நான்கு ANC பரிசோதனைகளைப் பெற்றுள்ளனர்.
  • NFHS 5 அறிக்கை, திண்டுக்கல், கரூர், நாமக்கல், தேனி மற்றும் திருவண்ணாமலை ஆகிய மாவட்டங்களில் சுமார் 95.7% முதல் 98.7% வரை அதிக ANC பரவலைப் பதிவு செய்துள்ளதாக குறிப்பிடுகிறது.
  • மாறாக, கடலூர், காஞ்சிபுரம், கன்னியாகுமரி, தூத்துக்குடி மற்றும் விருதுநகர் மாவட்டங்கள் ஒப்பீட்டளவில் குறைந்த ANC பரவல் 76.1% முதல் 84.2% வரை பதிவாகியுள்ளன.

மகப்பேறு மற்றும் அறுவை சிகிச்சை புள்ளிவிவரங்கள்

  • 2019-20 ஆம் ஆண்டிற்கான சுகாதார மேலாண்மைத் தகவல் அமைப்பின்படி (HMIS), 100% பிரசவங்கள் மருத்துவமனைகளில் நடந்தன என்பதோடு, 54.3% பிரசவங்கள் அரசுப் பொது சுகாதார மையங்களில் நிகழ்கின்றன.
  • மகப்பேறு அறுவைச் சிகிச்சைகளின் மொத்தச் சதவீதம் 44.3% ஆகும் என்பதோடு இது உலக சுகாதார அமைப்பு (WHO) பரிந்துரைத்த 10-15% தரத்தை விட அதிகமாகும்.
  • குறிப்பிடத்தக்க வகையில், சுமார் 52.2% மகப்பேறு அறுவை சிகிச்சைகள், மாநிலத்தில் உள்ள தனியார் மருத்துவமனைகளில் நடைபெற்றன.

பிரசவத்திற்குப் பிந்தையப் பராமரிப்பு

  • ஏறக்குறைய 1.7% பெண்கள் பிரசவத்திற்குப் பிறகு 48 மணி நேரம் முதல் 14 நாட்களுக்குள் அவர்களின் முதல் பிரசவப் பரிசோதனைக்காக கண்காணிக்கப்படுகிறார்கள்.

இரத்த சோகை பரவல்

  • 15-49 வயதுடைய பெண்களிடையே இரத்த சோகையின் பாதிப்பு 55.0% (NFHS-4) என்ற அளவில் இருந்து, 53.4% ​​(NFHS-5) என்ற அளவாகக் குறைந்துள்ளது.
  • வயது வந்த பெண்களில் இரத்த சோகையானது, ஒத்த வயதுடைய ஆண்களை விட கிட்டத்தட்ட மூன்று மடங்கு அதிகமாக உள்ளது என்பதைக் கவனத்தில் கொள்ள வேண்டும்.

புதிதாகப் பிறந்த குழந்தை, குழந்தை மற்றும் குழந்தை ஆரோக்கியம்

  • 2005 ஆம் ஆண்டில் தேசிய சுகாதார திட்டம் (NHM) தொடங்கப்பட்டதில் இருந்து, குழந்தை இறப்பு விகிதத்தில் (IMR) குறிப்பிடத்தக்கச் சரிவை இந்த மாநிலம் நிரூபித்துள்ளது என்பதோடு இது 2005 ஆம் ஆண்டில் 37 இல் இருந்து 2019 ஆம் ஆண்டில் 15 ஆகக் குறைந்தது.

  • விதிவிலக்காக, இந்த விகிதம் தேசிய சராசரியான 30 என்ற அளவை விடக் குறைவாக உள்ளது.

பிறந்த குழந்தை இறப்பு மற்றும் பிரசவ விகிதங்கள்

  • இதே போல், பிறந்த குழந்தை இறப்பு விகிதம் (NNMR) மற்றும் குழந்தை இறந்து பிறத்தல் விகிதம் (1,000 உயிருள்ளப் பிறப்புகளுக்கு) 2005 ஆம் ஆண்டில் முறையே 26.2 மற்றும் 11.2 என்ற அளவிலிருந்து, 2018 ஆம் ஆண்டில் முறையே 10 மற்றும் 4 ஆக கணிசமாகக் குறைந்துள்ளது.

  • இந்த மேம்பாடுகளுக்கு NHM திட்டத்தின் கீழ் உள்கட்டமைப்பை வலுப்படுத்துதல், அதாவது பிறந்த குழந்தைக்கான பராமரிப்பு மீதான சிறப்புப் பிரிவுகள் (SNCUs), புதிதாகப் பிறந்த குழந்தையினை ஆரோக்கியப் படுத்தும் பிரிவுகள் (NBSUs) மற்றும் புதிதாகப் பிறந்த குழந்தைகளுக்கானப் பராமரிப்பு மையங்கள் (NBCCs) உள்ளிட்ட பல்வேறு மாநில அளவிலான தலையீடுகள் காரணமாக இருக்கலாம்.

                -------------------------------------

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்