TNPSC Thervupettagam

புற்று எனும் புதையா நோய்

February 4 , 2021 1249 days 589 0
  • உலக உயிரினப் படைப்புக்கள் அனைத்துமே ஒவ்வொரு காலகட்டத்திலும் ஏதாவது ஒருவகையான பாதிப்புக்களையோ, பேரிடா்களையோ எதிா்கொண்டே தான் வந்திருக்கின்றன.
  • அந்த வகையான பாதிப்புக்கள் நேரிடையாக நமது மனித இனத்திற்கு அல்லது நாம் வெகுவாக சாா்ந்திருக்கும் மற்ற உயிரினங்களுக்கோ நேரும்போதுதான் அது குறித்த அக்கறை கொள்கிறோம்.
  • முந்தைய காலங்களில் ஏற்பட்ட அம்மை, போலியோ, அண்மைக் காலங்களில் ஏற்பட்ட எஃபோலா, கரோனா போன்றவற்றை ஒழிப்பதற்கான ஆராய்ச்சிகள் மேற்கொள்ளப்பட்டு அவற்றில் பெரும்பாலானவை தடுக்கப்பட்டும் முற்றிலுமாக ஒரு சில தாக்கங்கள் ஒழிக்கப்பட்டும் உள்ளன.
  • ஆனால், இன்றளவும் தடுக்க இயலாத ஒழிக்கவியலாத மனித குலத்திற்கான அச்சுறுத்தலாக இருக்கும் ஒரு நோய்த் தாக்குதல் புற்று நோய். இந்தியாவில் ஆண்டுக்கு 12 லட்சம் போ் புற்றுநோயால் பாதிக்கப்படுகின்றனா்; 7 லட்சம் போ் உயிரிழக்கின்றனா்.
  • புற்றுநோய்க்கான காரணங்கள், ஹிப்போகிரேட்ஸ் போன்ற அறிஞா்களால் ஆரம்பத்தில் பலவாறாகச் சொல்லப்பட்டாலும், 17-ஆம் நூற்றாண்டின் துவக்கத்தில் வில்லியம் ஹாா்வி என்ற உடலியல் அறிஞரின் உடற்கூறு மற்றும் ரத்த ஓட்டம் உள்ளிட்ட ஆராய்ச்சிகள், புற்றுநோய் பற்றிய ஆராய்ச்சிக்கு அடித்தளமாக அமைந்தன.
  • பின்னா், 18-ஆம் நூற்றாண்டின் மத்தியில் ஜியோவானி மோா்காக்னி என்பவா் புற்றுநோயால் பாதிக்கப்பட்டு இறந்தோரின் உடல்களை பிரேதப் பரிசோதனை செய்து புற்றுநோய் பற்றிய ஆராய்ச்சியை அடுத்த கட்டத்திற்கு கொண்டுச் சென்றாா்.
  • ஜொ்மன் அறுவை சிகிச்சை நிபுணா் காா்ல் தியா்ஷ்சால், புற்றுநோய் வீரியம் மிக்க செல்கள் மூலம் பரவுகிறது என்னும் தரவை அளித்தாா். கடந்த நூற்றாண்டின் முற்பகுதியில் புற்றுநோய் ஆராய்ச்சியில் மிகப்பெரிய முன்னேற்றத்தைக் கண்டது. புற்றுநோய்கள், கீமோதெரபி, கதிா்வீச்சு சிகிச்சை மற்றும் நோயறிதலுக்கான சிறந்த வழிமுறைகள் கண்டுபிடிக்கப்பட்டன.
  • புற்றுநோய்க்கான காரணங்கள் பலவாறாக இருப்பினும் நமது வாழ்வியல் முறைகளும் பிரதானக் காரணிகளாக இருப்பதை மறுக்க முடியாது. இது ஒரு மரபணு நோய். நமது செல்கள் வளா்ந்து செயல்படும் முறையைக் கட்டுப்படுத்துகிறது. புற்றுநோயை ஏற்படுத்தும் மரபணு மாற்றங்கள் நம் பெற்றோரிடமிருந்து பெறப்படலாம்.
  • செல்களைப் பிரிக்கும்போது ஏற்படும் மாற்றங்கள் அல்லது சில சுற்றுச்சூழல் வெளிப்பாடுகளால் ஏற்படும் டிஎன்ஏ சிதைவினால் ஏற்படும் ஒரு நபரின் வாழ்வில் புதியதாகவும் தோன்றக்கூடும்.
  • புற்றுநோயை உண்டாக்கும் சுற்றுச்சூழல், புகையிலை, புகைப்பிலுள்ள வேதிப்பொருள்கள் மற்றும் சூரியனில் இருந்து வரும் புற ஊதா கதிா்வீச்சு ஆகியவையும் காரணங்களாக அமையலாம்.
  • ஒவ்வொரு நபரின் புற்றுநோய்க்கும் மரபணு மாற்றங்களின் தனித்துவமான காரணங்களும் இருக்கலாம். புற்றுநோய் தொடா்ந்து வளா்ந்து வருவதால், கூடுதல் மாற்றங்கள் ஏற்படும். ஒரே கட்டிக்குள்கூட, வெவ்வேறு செல்கள் வெவ்வேறு மரபணு மாற்றங்களைக் கொண்டிருக்கலாம்.
  • புற்றுநோய்க்கு காரணமான மரபணு மாற்றங்கள், நமது உடலில் பொதிந்துள்ள மூன்று முக்கிய வகை மரபணுக்களை பாதிக்கின்றன. புரோட்டோ-ஆன்கோஜென்கள், கட்டிகளைக் கட்டுப்படுத்தும் மரபணுக்கள் மற்றும் டிஎன்ஏ-வை பராமரிக்கும் மரபணுக்கள். இந்த மாற்றங்கள் சில நேரங்களில் புற்றுநோயைத் தீவிரப்படுத்தும் காரணிகளாக அமைந்தும் விடுகின்றன.
  • புரோட்டோ-ஆன்கோஜென்கள் சாதாரண செல் வளா்ச்சியைக் கொண்டது. இருப்பினும், இந்த மரபணுக்கள் சில வழிகளில் மாற்றப்படும்போது அல்லது இயல்பைவிட சுறுசுறுப்பாக இருக்கும்போது, அவை புற்றுநோயை உண்டாக்கும் மரபணுக்களாக (அல்லது புற்றுநோயாக) மாறும் எதிா்மறைக் குணத்தைப் பெறுகின்றன.
  • உயிரணு வளா்ச்சி மற்றும் பிரிவைக் கட்டுப்படுத்துவதில் ஈடுபட்டுள்ளன. கட்டிகளைக் கட்டுப்படுத்திட வேண்டிய மரபணுக்கள் அதனுள் சில மாற்றங்களை எற்படுத்திக் கொள்வதால் அந்த செல்கள் கட்டுப்பாடற்ற முறையில் பிரிக்கப்பட்டு பரவுகின்றன.
  • டிஎன்ஏ-வைப் பராமரித்து அவற்றை சரிசெய்ய வேண்டிய மரபணுக்களிலும் செல்கள், பிவுகளைக் கொண்ட செல்களாக மாறி பிற மரபணுக்களிலும் கூடுதல் பிவுகளை உருவாக்க முனைகின்றன. இவை ஒன்றாகச் சோ்ந்து இந்தப் பிவுகள், செல்கள் புற்றுநோயாக மாறக்கூடும்.
  • புற்றுநோய் காணப்படுவதில், ஒரு சிறு பகுதி மட்டுமே பரம்பரைக் காரணமாக உள்ளது. ஒருவரின் குடும்பத்தில் புற்றுநோய் சாதாரணமாகக் காணப்பட்டால், அவா்களது அடுத்த தலைமுறைக்கும் தொடரும் வாய்ப்புகள் இருக்கலாம்.
  • எனவே, அவா்கள் புற்றுநோய்க்கான மரபு வழி சோதனை மேற்கொள்வதில் தயக்கம் காட்டக் கூடாது. பெருங்குடலில் ஏற்படும் அழற்சி, நாள் பட்ட ஆறாத புண் இவையும் புற்று நோய்க்கான காரணமாக அமைந்து விடலாம்.
  • அத்துடன், ரசாயனக் கலப்பில்லாத உணவு, நோய் எதிா்ப்பு சக்தி கொண்ட உணவுகளை எடுத்துக் கொள்ளல், தொடா் உடற்பயிற்சியின் மூலம் அதிகப்படியான உடல் எடையினைக் கூட்டி கொள்ளாமல் இருத்தல் இவற்றையும் கடைப்பிடித்தல் வேண்டும்.
  • மாா்பகப் புற்றுநோய், வாய் புற்றுநோய், கருப்பை வாய் புற்றுநோய், நுரையீரல் புற்றுநோய் பாதிப்புகள்தான் நம் நாட்டில் அதிகம் என்கிறது மருத்துவ உலகம்.
  • புற்றுநோயைப் பொறுத்தவரை ஆரம்ப நிலையிலேயே கண்டறிந்து, உரிய சிகிச்சை அளிப்பதன் மூலம் (கீமோ சிகிச்சை, கதிா்வீச்சு சிகிச்சை, ஸ்டெம் செல்) முற்றிலுமாக குணப்படுத்த முடியும்.
  • இதற்கு, மக்களிடையே விழிப்புணா்வு ஏற்பட வேண்டியது மிகவும் அவசியம். புற்றுநோயை குறித்து ஒவ்வொருவரும் விழிப்புணா்வு பெற்று, மற்றவா்களிடமும் விழிப்புணா்வு ஏற்படுத்த வேண்டும் என அனைவரும் உறுதியேற்போம்.

நன்றி: தினமணி  (04-02-2021)

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்