TNPSC Thervupettagam

பீம்ராவ் ராம்ஜி அம்பேத்கர் - I

May 22 , 2019 1867 days 10775 0
  • பாரத ரத்னா டாக்டர் பீம்ராவ் ராம்ஜி அம்பேத்கர் இந்தியாவில் சமூக சமத்துவமின்மையை ஒழிப்பதற்காக தனது வாழ்க்கையை அர்ப்பணித்த ஒரு அறிஞர், சமூக சீர்திருத்தவாதி மற்றும் ஒரு உன்னத தலைவராவார்.
  • இவர் நன்கு அறியப்பட்ட ஒரு அரசியல் தலைவர், சிறப்பறிவு வாய்ந்த நீதியாளர், புத்தமத ஆதரவாளர், தத்துவ ஞானி, மானுடவியலாளர், வரலாற்று அறிஞர், நாவன்மையுள்ளவர், எழுத்தாளர், பொருளாதார அறிஞர் மற்றும் பத்திரிக்கை ஆசிரியர் என பல்வேறு சிறப்பம்சங்களை உடையவர்.
  • இவர் வரலாற்று ரீதியாகப் பின்தங்கிய மக்களுக்கு அதிக அளவிலான வாய்ப்புகளை வழங்குகின்ற ஒரு நாடாக ஒரு சமத்துவமிக்க இந்தியாவை நிறுவினார்.

  • இவர் தலித் இன பெளத்த இயக்கங்களுக்கு ஆதரவளித்தார். மேலும் இவர் தீண்டத் தகாதவர்களுக்கு (தலித்துகள்) இழைக்கப்பட்ட சமூகப் பாகுபாடுகளுக்கு எதிராக பிரச்சாரம் செய்தார்.
  • மேலும் இவர் பெண்கள் மற்றும் தொழிலாளர்களின் உரிமைகளுக்கு ஆதரவளித்தார்.
  • இந்திய அரசியலமைப்பின் கட்டமைப்பாளரான இவர் சுதந்திர இந்தியாவின் முதல் சட்ட மற்றும் நீதித்துறை அமைச்சராவார்.
  • நவீன கால மனு என்றறியப்படும் இவர் இந்தியக் குடியரசை தோற்றுவித்தவர் அல்லது இந்திய அரசியலமைப்பின் தந்தையாவார் என அறியப்படுகின்றார்.
  • இந்தியாவிலும் மற்ற இதர இடங்களிலும் மராத்தி மற்றும் இந்தி மொழியில் “மரியாதையுடைய தந்தை” எனும் பொருள்படும் பாபாசாஹிப் எனும் பெயரால் இவர் அழைக்கப்படுகின்றார்.
  • மேலும் இவர் “பீம்” என்றும் அழைக்கப்படுகின்றார்.
  • 1990 ஆம் ஆண்டு அவரது மறைவிற்குப் பின் இந்தியாவில் குடிமகன்களுக்கான மிக உயரிய விருதான பாரத ரத்னா விருதானது அம்பேத்கருக்கு வழங்கப்பட்டது.

 

தொடக்கக் கால மற்றும் தனிப்பட்ட வாழ்க்கை
  • தற்போது மத்தியப் பிரதேசமாக உள்ள மத்திய மாகாணத்தின் மாவ் எனும் இராணுவ கண்டோன்மென்ட் நகரத்தில் (தற்போது டாக்டர் அம்பேத்கர் நகர்) 1891 ஆம் ஆண்டு ஏப்ரல் 14 அன்று அவர் பிறந்தார்.
  • இவர் ராம்ஜி மலோஜ் சுக்பால் மற்றும் பீமாபாய் சக்பாலுக்குப் பிறந்த 14-வது மற்றும் கடைசிக் குழந்தையாவார்.
  • இவரின் உண்மையான குடும்பப் பெயர் சக்பால் என்பதாகும். ஆனால் இவரின் தந்தை பள்ளியில் அவரது பெயரை அம்பாடாவேகர் எனப் பதிவு செய்தார். இந்தப் பெயர் ரத்னகிரி மாவட்டத்தில் உள்ள அவரின் சொந்த கிராமமான அம்பாடாவேவிலிருந்து வந்ததாகும்.
  • இவரின் அம்பாடாவேகர் எனும் குடும்பப் பெயரை மாற்றி இவரது தேவ்ருகோ பிராமண ஆசிரியரான கிருஷ்ண கேசவ் அம்பேத்கர் என்பவர் தனது துணைப் பெயரான அம்பேத்கரை அவரது பெயருடன் சேர்த்து பள்ளிப் பதிவேடுகளில் அவரது பெயரைப் பதிவு செய்தார்.
  • 1906 ஆம் ஆண்டு 15 வயதான அம்பேத்கருக்கும் 9 வயதான ரமா பாய்க்கும் திருமணம் நடைபெற்றது.

  • 1935 ஆம் ஆண்டு இவர் தனது மனைவி ரமா பாயை இழந்தார்.
  • பின்னர் 1948 ஆம் ஆண்டு ஏப்ரல் 15 ஆம் நாள் புதுடெல்லியில் உள்ள அவரின் வீட்டில் டாக்டர் சாரதா கபீர் எனும் சரஸ்வத் பிராமணப் பெண்ணை திருமணம் செய்தார்.

 

பாகுபாடுகள்
  • தீண்டத் தகாதவர்களாக நடத்தப்படுகின்ற மற்றும் சமூகப் பொருளாதாரப் பாகுபாடுகளுக்கு உட்படுத்தப் படுகின்ற மஹர் (தலித்) எனும் சாதியில் ஒரு ஏழ்மையான குடும்பத்தில் அம்பேத்கர் பிறந்தார்.
  • இவர்கள் பள்ளிக்குச் சென்ற போதிலும் அம்பேத்கர் மற்றும் இதர தீண்டத்தகாத மாணவர்கள் தனியாக அமர வைக்கப்பட்டும் ஆசிரியர்களால் குறைவாக கவனிக்கப்பட்டும் வந்தனர்.
  • இவர்கள் வகுப்பறைக்குள் உட்கார அனுமதிக்கப்படவில்லை.
  • தண்ணீரையோ அல்லது தண்ணீர் வைக்கப்பட்டிருக்கும் பாத்திரத்தையோத் தொடுவதற்கு இவர்களுக்கு அனுமதியில்லாததால் இவர்களுக்கு குடிநீர் தேவைப்படும் போது உயர்சாதியினரில் ஒருவர் தண்ணீரை உயரத்திலிருந்து இவர்களுக்கு ஊற்றுவர்.
  • இந்தப் பணியானது அம்பேத்கருக்கு பொதுவாகப் பள்ளியின் உதவியாளரால் செய்யப்பட்டது. ஒருவேளை பள்ளியின் உதவியாளர் இல்லையெனில் இவர்கள் தண்ணீர் குடிக்காமல் போக வேண்டிருந்தது.
  • பின்னர் இவர் இந்த சூழ்நிலையை “பள்ளியின் உதவியாளர் இல்லையேல் நீர் இல்லை” என தனது எழுத்துகளில் விவரித்தார்.
  • இவர் ஒரு கோணிப் பையை தனது வீட்டிலிருந்துப் பள்ளிக்கு கொண்டுச் சென்று அதிலேயே உட்கார வேண்டியிருந்தது.

 

கல்வி
  • 1987 ஆம் ஆண்டு அம்பேத்கரின் குடும்பம் மும்பைக்கு இடம் பெயர்ந்தது. அங்கு உள்ள எல்பின்ஸ்டோன் உயர்நிலைப் பள்ளியில் சேர்ந்த ஒரே ஒரு தீண்டத் தகாதவராக அம்பேத்கர் இருந்தார்.
  • 1908 ஆம் ஆண்டில் மஹர் சாதியிலிருந்து முதன்முதலில் எல்பின்ஸ்டோன் கல்லூரியில் நுழைந்த முதல் நபரும் இவரேயாவார்.
  • 1912 ஆம் ஆண்டில் பம்பாய் பல்கலைக் கழகத்திலிருந்துப் பொருளியல் மற்றும் அரசியல் அறிவியல் பட்டம் பெற்று பரோடா மாநில அரசில் பணியாற்றுவதற்காக அவர் தயாரானார்.
  • 1913 ஆம் ஆண்டில் தனது 22 ஆம் வயதில் அம்பேத்கர் அமெரிக்காவிற்கு சென்றார்.
  • இவர் பரோடாவைச் சேர்ந்த கெய்குவாடான மூன்றாம் சாயாஜி ராவ் என்பவரால் நிறுவப்பட்ட பரோடா மாநிலத்தின் கெய்குவாட் உதவித் தொகையை வழங்கப் பெற்றார்.
  • இது நியூயார்க் நகரத்தின் கொலம்பியா பல்கலைக் கழகத்தில் முதுகலைக் கல்வியைப் பெறுவதற்கான வாய்ப்பை வழங்குவதற்காக வடிவமைக்கப்பட்டது.
  • 1915 ஆம் ஆண்டு ஜுன் மாதம் இவர் பொருளாதாரத்தை முதன்மையாகக் கொண்ட பிரிவோடு  இதர பாடங்களான சமூகவியல், வரலாறு, தத்துவம் மற்றும் மானுடவியல் உள்ளிட்ட பிரிவுகளையும் சேர்த்து முதுகலை கலையியல் தேர்வில் வெற்றி பெற்றார்
  • இவர் “பண்டைய இந்திய வணிகம்” எனும் தலைப்பில் தனது ஆய்வறிக்கையைச் சமர்ப்பித்தார்.
  • 1916 ஆம் ஆண்டில் இவர் “இந்திய தேசத்தின் பங்கு: ஒரு வரலாற்று மற்றும் பகுப்பாய்வுக் கட்டுரை” எனும் தலைப்பில் தனது இரண்டாம் ஆய்வுக் கட்டுரையை மற்றொரு முதுநிலை கலையியல் படிப்பிற்காகச் சமர்ப்பித்தார்.

  • இறுதியாக 1927 ஆம் ஆண்டில் இவரின் மூன்றாவது ஆய்வுக் கட்டுரைக்காக பொருளாதாரவியலில் முனைவர் பட்டம் பெற்றார். பின்னர் அவர் லண்டன் சென்றார்.
  • இவ்வகையில் வெளிநாட்டில் பொருளாதாரத்தில் முனைவர் பட்டம் வென்ற முதல் இந்தியர் அம்பேத்கர் ஆவார்.
  • மே 9 ஆம் தேதியன்று மானுடவியலாளர் அலெக்சாண்டர் கோல்டன் வெய்சர் நடத்திய ஒரு கருத்தரங்கில் “இந்தியாவில் உள்ள சாதிகள்: அவற்றின் தோற்றம் மற்றும் வளர்ச்சி” எனும் ஆய்வறிக்கையை சமர்ப்பித்தார்.
  • 1916 ஆம் ஆண்டு அக்டோபரில் “கிரேஸ் இன்” என்ற கல்வி நிலையத்தில் (Gray's Inn) அவர் வழக்கறிஞர் படிப்பிற்காகப் பதிவு செய்தார். அதே வேளையில் லண்டன் பொருளாதாரப் பள்ளியில் சேர்ந்து முனைவர் பட்டத்திற்கானப் பணியையும் அவர் தொடங்கினார்.
  • இவ்வகையில் பின்தங்கிய வகுப்பினரிலிருந்து உருவான முதல் வழக்குரைஞர் பாபா சாஹிப் ஆவார்.
  • 1917 ஆம் ஆண்டு பரோடாவின் உதவித் தொகை முடிவுற்றதால் அவர் இந்தியாவிற்குத் திரும்பினார்.
  • ஆனால் பின்னர் அவர் நான்கு ஆண்டுகளுக்குள் லண்டனுக்குத் திரும்பி தனது ஆய்வறிக்கையை சமர்ப்பிப்பதற்கான அனுமதியைப் பெற்றார்.
  • லண்டன் பொருளாதாரப் பள்ளியில் ஒரு நாளைக்கு 21 மணிநேரங்கள் படித்து 8 வருட கால அளவிலான படிப்பினை வெறும் 2 வருடம் 3 மாதங்களில் பாபா சாஹிப் நிறைவு செய்தார்.
  • இவர் தமது முதல் வாய்ப்பிலேயே தனது முதுகலை பட்டப் படிப்பை 1921 ஆம் ஆண்டில் முடித்தார்.
  • 1922 ஆம் ஆண்டில் கிரேஸ் இன் என்ற கல்வி நிலையத்தால் வழக்கறிஞர் மன்றத்தின் உறுப்பினராக நியமிக்கப்பட்ட இவர் 1923 ஆம் ஆண்டில்” ரூபாயின் பிரச்சினைகள்: அதன் தோற்றம் மற்றும் தீர்வு” எனும் ஆய்வறிக்கையைச் சமர்ப்பித்தார்.
  • கறுப்புப் பணத்தையும் கள்ள நோட்டுகளையும் ஒழிக்க வேண்டுமெனில் ஒவ்வொரு 10 ஆண்டுகளுக்கொரு முறை நாட்டின் பணமானது பண மதிப்பிழப்பு செய்யப்பட வேண்டுமென தனது புத்தகத்தில் அவர் விவரித்துள்ளார்.
  • இவர் தனது அறிவியல் முனைவர் பட்டத்தைப் பொருளாதாரத்தில் அதே ஆண்டில் நிறைவு செய்தார்.
  • லண்டன் பொருளாதாரப் பள்ளியில் புகழ்பெற்ற “அனைத்து அறிவியல் முனைவர்” எனும் பட்டம் பெற்ற உலகின் முதல் மற்றும் ஒரே நபர் உலகில் பாபா சாஹிப் ஆவார்.
  • இவரது மூன்றாவது மற்றும் நான்காம் முனைவர் பட்டங்கள் (LL. D, கொலம்பியா-1952 மற்றும் Litt., ஒஸ்மானியா-1953) கௌரவ முனைவர் பட்டங்களாக அவருக்கு வழங்கி கௌரவிக்கப் பட்டது.

 

இளமைக்கால பணி
  • 1918 ஆம் ஆண்டில் மும்பையில் உள்ள சிடான்ஹெம் வணிகவியல் மற்றும் பொருளாதாரக் கல்லூரியில் அரசியல் பொருளாதாரப் பேராசிரியராக இணைந்தார்.
  • 1919 ஆம் ஆண்டில் இந்திய அரசுச் சட்டம் உருவாக்கப்பட்டுக் கொண்டிருக்கும் போது அது குறித்து சான்றளிக்க அச்சட்டத்தை உருவாக்கிக் கொண்டிருக்கும் சவுத்போரோ குழு முன்பாக இவர் அழைக்கப்பட்டார்.
  • இந்த விவாதத்தின் போது தீண்டத்தகாதவர்கள் மற்றும் இதர மதச் சமூகத்தினருக்கு என்று தனியாக வகுப்புவாரி தொகுதிகள் மற்றும் இட ஒதுக்கீட்டை வழங்க ஆதரவாக அம்பேத்கார் வாதிட்டார்.
  • 1920 ஆம் ஆண்டில் கொல்ஹாபூரின் ஷாகுவான நான்காம் ஷாகுவின் உதவியுடன் “மூக்நாயக்” (அமைதியின் தலைவர்) எனும் வாராந்திரப் பத்திரிக்கையை மும்பையில் அவர் தொடங்கினார்.
  • 1935 ஆம் ஆண்டு மும்பையில் உள்ள அரசு சட்டக் கல்லூரியின் முதல்வராக அவர் நியமிக்கப்பட்டார்.

- - - - - - - - - - - - - - -

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்