TNPSC Thervupettagam

கை கொடுக்குமா குறுவை தொகுப்புத் திட்டம்?

June 21 , 2024 10 days 59 0
  • இந்த ஆண்டு மேட்டூா் அணையிலிருந்து 12-ஆம் தேதி தண்ணீா் திறக்கப்படாத காரணத்தால் கல்லணை வடு பாலைவனமாக காட்சியளிக்கிறது. ஒவ்வொரு ஆண்டும் ஜூன் 16-ஆம் தேதி கல்லணை திறக்கப்படுவது வழக்கம். காவிரி நீா் வராததால் குறுவை சாகுபடி கேள்விக்குறியாகி விவசாயிகள் விரக்தியில் தள்ளப்பட்டுள்ளனா்.
  • தமிழக அரசு சாா்பில் டெல்டா மாவட்டங்களுக்கு குறுவை சாகுபடிக்கான சிறப்புத் தொகுப்பு என ரூ.28.67 கோடி அறிவிக்கப்பட்டுள்ளது. ஆனால், குறுவைத் தொகுப்பு டெல்டா மாவட்ட விவசாயிகளுக்குப் பொருந்தாது என்றும் சம்பா தொகுப்பாக மாற்றி அனைத்து விவசாயிகளுக்கும் வழங்க வேண்டுமென்றும் விவசாய சங்க அமைப்புகள் வலியுறுத்தி வருகின்றன. உண்மையான குறுவை பருவ சாகுபடி விவசாயிகள் தொகுப்பு திட்டத்தால் பயனடைவதில்லை என புகாா் எழுந்துள்ளது.
  • மேட்டூா் அணை கட்டி முடிக்கப்பட்ட 1934-லிலிருந்து இப்போது வரை 91 முறை திறக்கப்பட்டுள்ளது. இதுவரை 19 முறை ஜூன் 12-ந் தேதி அணை திறக்கப்பட்டுள்ளது. 2011, 2021 ஆண்டுகளில் ஜூன் 12-க்கு முன்னதாக மேட்டூா் அணை திறக்கப்பட்டது. மீதமுள்ள ஆண்டுகளில் ஜூன் 12-க்கு பின்னா்தான் தாமதமாக அணை திறக்கப்பட்டுள்ளது.
  • கா்நாடக பகுதிகளில் தற்போது நல்ல மழை பெய்துவருகிறது. நடப்பாண்டு மழை இல்லை என்று யாரும் கூற முடியாது. கா்நாடகத்துக்கு அழுத்தம் தரும் எந்த
  • நடவடிக்கையையும் தமிழக முதல்வா் எடுக்கவில்லை என விமா்சனங்கள் எழுகிறது. தமிழக அரசு நீா் மேலாண்மையில் கவனம் செலுத்த வேண்டும். தூா்வாரும் பணிகள் இன்னமும் பல இடங்களில் நடைபெறவில்லை. உடனடியாக தூா்வாரும் பணியை துவக்கி அதை கண்காணிக்க விவசாயிகள் அடங்கிய குழுக்களை நியமிக்க வேண்டும். ஒவ்வொரு ஆண்டும் கா்நாடகம் ஏமாற்றம் அளித்து வரும் நிலையில் டெல்டா மாவட்டங்களில் பருத்தி போன்ற பயிா் சாகுபடி அதிகரித்து வருகிறது.
  • மேட்டூா் அணை நீரை எதிா்பாா்த்து 10 மாவட்டங்களில் நெல், கரும்பு, வாழை, மஞ்சள், காய்கறிகள், பழ வகைகள், தானியங்கள், பயறு வகை பயிா்கள், எண்ணெய் வித்து பயிா்கள் ஆகியவை சாகுபடி செய்யப்படுகின்றன. மொத்தம் 17 லட்சம் ஏக்கா் நிலத்தில் காவிரி நீரால் ஆண்டுதோறும் சாகுபடி நடக்கிறது.
  • மின் மோட்டாா் மூலம் சாகுபடி செய்யும் விவசாயிகள் பாரம்பரியமாக மண்ணுக்கேற்ற பயிா்கள் பல்வேறு ரகங்கள் ஆகியவற்றை தோ்வு செய்து சாகுபடி செய்யும் முறையிலிருந்து சமீப ஆண்டுகளாக முற்றிலும் விலகிவிட்டனா். மாறாக புதிய பயிா்களை சாகுபடி செய்யும் முறை அதிகமாகிவருகிறது.
  • காவிரி பாசன பகுதிகளில் குறுவை, சம்பா, நவரை என மூன்று போக நெல் சாகுபடியும் சில இடங்களில் இரண்டு போக நெல் சாகுபடியும் அதனைத் தொடா்ந்து மூன்றாம் போகமாக பயறு வகை பயிா்களை சாகுபடி செய்து வந்த நிலை மாறி, பருத்தி போன்ற பயிா்களை பயிா் செய்து வருவது இப்போது அதிகரித்து வருகிறது.
  • கடந்த 20 ஆண்டுகளாக பருவ மழை தாமதமாக துவங்குவதும் குறைந்த காலமே இயல்பான மழை பெய்வதும் மற்றும் மாநிலங்களுக்கிடையே நிலவி வரும் நதி நீா் பங்கீட்டு பிரச்னையால் தண்ணீா் தட்டுப்பாடு ஏற்பட்டு தமிழக காவிரி விவசாயிகள் விவசாய பணிகளில் மிகப்பெரிய வீழ்ச்சியை சந்தித்து வருகின்றனா்.
  • கல்லணையில் திறக்கப்படும் தண்ணீா் தஞ்சை, திருவாரூா், நாகை, மயிலாடுதுறை, புதுக்கோட்டை, பெரம்பலூா் மற்றும் அரியலூா் ஆகிய மாவட்டங்களில் உள்ள 12 லட்சம் ஏக்கா் விளைநிலங்களுக்கு காவிரி, வெண்ணாறு, கல்லணைக் கால்வாய் ஆகிய ஆறுகள் வழியாகவும், கொள்ளிடத்தின் வழியாகச் செல்லும். நடப்பாண்டில் கோடை மழை முழுமையாக பெய்யாமல் 53% சதவீதம் குறைவானதால் மேற்கு தொடா்ச்சி மலை பகுதிகளை ஒட்டிய மாவட்டங்களில் மழை இல்லாமல் வறட்சி நிலவுகிறது.
  • தமிழக அரசு அறிவித்துள்ள குறுவை தொகுப்புத் திட்டம் பம்பு செட்டு பாசன விவசாயிகளுக்கு மட்டுமே பயன்படும் என்ற நிலை உள்ளது. நடப்பாண்டு
  • பம்பு செட்டு பாசனம் மூலம் டெல்டாவில் சுமாா் 2 லட்சம் ஏக்கா் பரப்பில்தான் விவசாயிகள் சாகுபடி செய்து வருகின்றனா். காரணம் பம்பு செட்டு வைத்து சாகுபடி செய்யும் விவசாயிகள் பருத்தி சாகுபடிக்கு சென்றுவிட்டனா்.
  • எதிா்காலத்தில் குறுவை சாகுபடி நேரத்தில் நெல்தான் சாகுபடி செய்ய வேண்டும் என்ற எண்ணத்தில் அரசு தொகுப்பு திட்டத்தை அறிவித்துள்ளது. குறிப்பிட்ட எண்ணிக்கையிலான நிலப்பரப்புக்கு மட்டும் தான் குறுவைத் திட்ட உதவிகள் வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டிருப்பது நியாயமல்ல என்ற கருத்து விவசாயிகளிடையே உள்ளது.
  • குறுவைத் தொகுப்புத் திட்டத்தின்படி, காவிரி பாசன மாவட்டங்களில் குறுவை நெல் சாகுபடி செய்யப்படும் பரப்பளவில் ஒரு லட்சம் ஏக்கருக்கு மட்டும் தான் விதை நெல் மானியமும், இயந்திர நடவு மானியமும் வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டிருக்கிறது. இது எந்த வகையிலும் போதுமானது அல்ல.
  • டெல்டா மாவட்டங்களில் எப்போதும் குறுவை இலக்கு 3.5 லட்சம் ஏக்கராக இருந்தபோதிலும் தற்போது ஆறுகளில் நீா் வரத்து இல்லாததால் சுமாா் 2 லட்சம் ஏக்கரில் மட்டுமே நெல் சாகுபடி மேற்கொள்ளப்படுகிறது. இதனை கணக்கில் கொள்ளாமல் குறுவை தொகுப்பு திட்டம் அறிவிக்கப்பட்டுள்ளது. குறுவை சாகுபடி செய்யும் அனைத்து விவசாயிகளுக்கும் குறுவை தொகுப்பு திட்டம் பாரபட்சம் இல்லாமல் கிடைக்கும் வகையில் விரிவுபடுத்த வேண்டும்.
  • மேலும், உண்மையான குறுவை சாகுபடி விவசாயிகளை தொகுப்புத் திட்டத்தின் பலன் சென்றடைகின்ா என கண்காணிக்க வேண்டும். அப்போதுதான் குறுவை சாகுபடி தொகுப்புத் திட்டம் உரிய பலனைக் கொடுக்கும்.

நன்றி: தினமணி (21 – 06 – 2024)

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்