TNPSC Thervupettagam

சமீபத்திய தமிழ்நாடு அரசுத் திட்டங்கள் பாகம் - 04

July 1 , 2024 7 hrs 0 min 325 0

(For English version to this please click here)

20. நீலக்குறிஞ்சி மலையேற்றத் தொடக்கம் மற்றும் நீலகிரி தார் திட்டம்

அமைச்சகம் அல்லது தலைமை முகமை:

  • தமிழக அரசு, முதல்வர் மு.க. ஸ்டாலின் அவர்களால் தொடங்கப்பட்டது.

நோக்கம்:

  • நீலக்குறிஞ்சி மலையேற்ற முயற்சியானது தமிழ்நாட்டின் அழிந்து வரும் மலைப் பூக்களை, குறிப்பாக நீலக்குறிஞ்சியை, அதன் எண்ணிக்கை, வாழ்விடங்கள் மற்றும் சுற்றுச்சூழல் பாதுகாப்பு பற்றிய விழிப்புணர்வு மேம்பாட்டின் மூலம் பாதுகாப்பதை நோக்கமாகக் கொண்டு ள்ளது.

பயனாளி:

  • இந்த முயற்சியானது தமிழகத்தின் பல்லுயிர்ப் பெருக்கத்திற்கு பயனளிக்கிறது, குறிப்பாக காலநிலை மாற்றத்திற்கு எதிரான மீள்தன்மையின் சின்னமான நீலக்குறிஞ்சியின் பாதுகாப்பு மற்றும் மேலாண்மையில் கவனம் செலுத்துகிறது.

தகுதி:

  • தமிழகத்தில் சுற்றுச்சூழல் பாதுகாப்பு மற்றும் பல்லுயிர்ப் பாதுகாப்பில் ஆர்வமுள்ள அனைத்து குடியிருப்பாளர்கள், பங்குதாரர்களும் இம்முயற்சியில் பங்கு பெறலாம்.
  • குறிப்பாக வனவியல், சுற்றுச்சூழல் ஆராய்ச்சி மற்றும் பொது விழிப்புணர்வுப் பிரச்சாரங்களில் ஈடுபட்டுள்ளவர்களை பங்கேற்கச் செய்வதாகும்.

நீலகிரி வரையாடுத் திட்டம்

தலைமை முகமை:

  • தமிழ்நாடு வனத்துறை

திட்டத்தின் நோக்கம்:

  • நீலகிரி வரையாடு திட்டம் தமிழகத்தில், அதன் பாதுகாப்பு, பரவல் மற்றும் பல்லுயிர் முக்கியத்துவம் ஆகியவற்றில் கவனம் செலுத்தி, நீலகிரி வரையாட்டின் சுற்றுச்சூழல் முக்கியத்துவத்தை பாதுகாத்து மேம்படுத்துவதை நோக்கமாகக் கொண்டுள்ளது.

இலக்கு பயனாளிகள்:

  • இந்தத் திட்டம் வரலாற்று வாழ்விடங்களைப் புதுப்பித்தல், உள்ளூர்ப் பல்லுயிர்களைப் பாதுகாத்தல் மற்றும் நீலகிரி வரையாடு பற்றிய விழிப்புணர்வை ஊக்குவித்தல் ஆகியவற்றின் மூலம் தமிழ்நாட்டின் சுற்றுச்சூழல் மற்றும் கலாச்சாரப் பாரம்பரியத்திற்கு பயனளிக்கும் வகையில் உள்ளது.

தகுதி:

  • தமிழ்நாட்டில் பல்லுயிர் பாதுகாப்பு மற்றும் சுற்றுச்சூழல் பாதுகாப்பில் ஈடுபட்டுள்ள ஆராய்ச்சியாளர்கள், பாதுகாவலர்கள் மற்றும் பங்குதாரர்கள் இத்திட்டத்தில் பங்கு பெறலாம்.

21. பள்ளி இல்ல நூலகத் திட்டம்

தொடங்கப்பட்டது:

  • "பள்ளி இல்ல நூலகத் திட்டம்" ஆகஸ்ட் மாதம் 2022 ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது.

பொறுப்பான அமைச்சகம் அல்லது தலைமை முகமை:

  • சென்னை மாநகராட்சி

நோக்கம்:

  • சென்னை மாநகராட்சிக்குட்பட்ட தொடக்க, நடுநிலை, உயர்நிலை, மேல்நிலைப் பள்ளிகளில் படிக்கும் மாணவர்களின் வாசிப்பு, கற்றல், எழுதுதல், பேசுதல், ஓவியம் வரைதல் மற்றும் விளையாடும் திறன் ஆகியவற்றை மேம்படுத்துவதே பள்ளி இல்ல நூலகத் திட்டத்தின் நோக்கம் ஆகும்.

பயனாளிகள்:

  • சென்னை மாநகராட்சியின் கீழ் இயங்கும் தொடக்க, நடுநிலை, உயர்நிலை, மேல்நிலைப் பள்ளிகளை உள்ளடக்கிய 281 பள்ளிகளில் பயிலும் மாணவர்கள் இதன் பயனாளிகள் ஆவர்.

தகுதி:

  • சென்னை மாநகராட்சியின் கீழ் உள்ள பள்ளிகளில் சேரும் அனைத்து மாணவர்களும் இந்தத் திட்டத்தின் மூலம் பயன் பெறலாம்.

22. நம்ம ஊரு பள்ளித் திட்டம்

தொடங்கப்பட்ட தினம்:

  • டிசம்பர் 19, 2022.

பொறுப்பான அமைச்சகம் அல்லது தலைமை முகமை:

  • தமிழ்நாடு பள்ளிக் கல்வித் துறை.

நோக்கம்:

  • நம்ம ஊரு பள்ளித் திட்டம் தமிழ்நாட்டில் உள்ள பள்ளிகளின் தரம் மற்றும் உள்கட்டமைப்பை மேம்படுத்துவதை நோக்கமாகக் கொண்டுள்ளது, இதில் பெரிய, சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்கள், அரசு சாரா நிறுவனங்கள் மற்றும் பொது மக்கள் அனைவரும் பங்கு பெறலாம்.

பயனாளிகள்:

  • இத்திட்டத்தின் மூலம் தமிழ்நாட்டில் உள்ள 37,558 பள்ளிகள், அவற்றின் உள்கட்டமைப்பு மற்றும் கல்வி வளங்கள் மேம்படுத்தப்படுகின்றன.

தகுதி:

  • பெரிய, சிறிய மற்றும் நடுத்தர நிறுவனங்கள், அரசு சாரா நிறுவனங்கள் மற்றும் நிதி, சாதனங்கள் அல்லது தன்னார்வ சேவைகள் மூலம் பங்களிக்க விரும்பும் பொது மக்கள் இத்திட்டத்தில் பங்கு பெறலாம்.

கூடுதல் தகவல்:

  • திட்டத்திற்கான பிரத்தியேக இணையதளம்: https://nammaschool.tnschools.gov.in/.

பள்ளிக் கல்வித் துறையின் கீழ் உள்ள பல்வேறு முன்முயற்சிகள் விரிவாக உள்ளன, அவற்றுள்:

  • இல்லம் தேடி கல்வி (வீட்டு வாசலில் கல்வி)
  • முதலமைச்சரின் காலை உணவுத் திட்டம்
  • எண்ணும் எழுத்தும் (எண்ணும் எழுத்தறிவும்)
  • வானவில் மன்றம் (ரெயின்போ கிளப்)
  • நான் முதல்வன் (நான் தலைவர்)
  • பள்ளி மேலாண்மை குழுக்கள்
  • மணற்கேணி (மாணவர் வழிகாட்டல்)
  • தொழிற்கல்வி மேம்பாடு
  • ஆசிரியர் திறன் மேம்பாடு
  • முன்னாள் மாணவர் ஒருங்கிணைப்புத் திட்டம்
  • பேராசிரியர் அன்பழகன் பள்ளி மேம்பாட்டுத் திட்டம்
  • மாணவர் பேரவைகள்
  • பங்களிப்புகளை நிர்வகிக்க ஒரு பிரத்யேக வங்கி கணக்கு உருவாக்கப்பட்டது.
  • SMC (School Management Committee) பெற்றோர் செயலியானது அரசுப் பள்ளிகளின் உள் கட்டமைப்பு மற்றும் பிற தேவைகளைப் பட்டியலிடுவதற்குச் செயல்படுகிறது.

23. மனம் திட்டம்

தொடங்கப்பட்ட தினம்:

  • டிசம்பர் 22, 2022

பொறுப்பான அமைச்சகம் அல்லது தலைமை முகமை:

  • தேசிய சுகாதார இயக்கம் – தமிழ்நாடு.

நோக்கம்:

  • மனநல மேம்பாடு மற்றும் நல்வாழ்வு குறித்த விழிப்புணர்வு உருவாக்க நடவடிக்கைகள், பயிற்சி மற்றும் ஆசிரியர்கள் மற்றும் மாணவர்களுக்கான நல்வாழ்வு நிகழ்ச்சிகள் மூலம் மாணவர்களின் மன ஆரோக்கியம் மற்றும் நல்வாழ்வை மேம்படுத்துவதே மனம் திட்டம் திட்டத்தின் முதன்மை நோக்கமாகும்.

பயனாளிகள்:

  • தமிழகம் முழுவதும் உள்ள பள்ளி, கல்லூரிகளில் பயிலும் மாணவர்கள்.

தகுதி:

  • தமிழ்நாடு முழுவதும் உள்ள பள்ளிகள் மற்றும் கல்லூரிகளில் உள்ள அனைத்து மாணவர்களும், ஆசிரியர்களும் இத்திட்டத்தில் பங்கு பெறலாம்.

கூடுதல் தகவல்:

  • தமிழகம் முழுவதும் உள்ள அனைத்து மருத்துவக் கல்லூரிகளிலும், மனநல நல்லாதரவு மன்றம் (மாணவர்களின் மனநல ஆதரவு மன்றம்) தொடங்கப்பட்டு அனைத்து கல்லூரிகள் மற்றும் பள்ளிகளுக்கும் இத்திட்டமானது விரிவுபடுத்தப்பட்டது.
  • இந்த மன்றங்களின் உறுப்பினர்கள் சக உதவிக் குழுக்களாகச் செயல்படுகின்றனர், துன்பத்தில் இருக்கும் மாணவர்களுக்கு உளவியல் முதலுதவி அளித்து, மேலும் அன்புடன் மற்றும் ஆதரவிற்கு வழிகாட்டுகிறார்கள்.
  • சேவைகளானது "நட்புடன் உங்களோடு மனநல சேவை" தொலைபேசி ஆலோசனை சேவைகள் மற்றும் மாவட்ட மனநல திட்டம் (DMHP) சிகிச்சையகத்துடன் இணைக்கப்பட்டுள்ளன.
  • பள்ளி ஆசிரியர்களுக்கு பயிற்சி அளிப்பதற்காக மாணவர்களின் மனநல மேம்பாடு மற்றும் நல்வாழ்வு குறித்த ஆசிரியர்களுக்கான பயிற்சி தொகுதி மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களால் மனம் திட்டத்தில் வெளியிடப்பட்டது.

24. ‘விழுதுகள்' திட்டத் தொடக்கம்

அமைச்சகம் அல்லது தலைமை முகமை:

  • பள்ளிக் கல்வித்துறை, தமிழ்நாடு அரசு

நோக்கம்:

  • 'விழுதுகள்' திட்டத் தொடக்கத்தின் நோக்கம் தமிழகத்தில் உள்ள அரசுப் பள்ளிகளை மேம்படுத்துவதாகும்.

பயனாளி

  • இப்போது உலகம் முழுவதும் வெற்றிகரமான தொழில் வல்லுநர்களாக உள்ள தமிழ்நாடு அரசுப் பள்ளிகளின் முன்னாள் மாணவர்கள்.

தகுதி:

  • தமிழ்நாடு அரசுப் பள்ளிகளின் முன்னாள் மாணவர்கள்.

கூடுதல் தகவல்:

  • இந்த முயற்சியானது அரசுப் பள்ளிகளின் முன்னேற்றத்தில் சமூகப் பங்களிப்பை ஊக்குவிக்கிறது மற்றும் பல்வேறு துறைகளில் சிறந்து விளங்கும் முன்னாள் மாணவர்களின் ஆதரவுடன் கல்வி மேம்பாட்டிற்கான ஒரு மாதிரியை உருவாக்குவதை நோக்கமாகக் கொண்டு ள்ளது.
  • இந்த முன்முயற்சியானது, சென்னையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் அரசு அதிகாரிகள், கல்வித் துறை தலைவர்கள் உள்ளிட்ட முக்கிய பிரமுகர்கள் கலந்து கொண்டதன் மூலம் அதிகாரப் பூர்வமாக தொடங்கப்பட்டது.
  • இந்த முன்முயற்சி தனிநபர்கள் மற்றும் சமூகங்களை வடிவமைப்பதில் கல்வியின் பங்கை அடிக்கோடிட்டுக் காட்டுகிறது, அவர்களின் வெற்றிக்குப் பங்களித்தப் பள்ளிகளுக்கு ஆதரவளிப்பதற்கும், வளர்ப்பதற்குமான ஒரு கூட்டுப் பொறுப்பை வலியுறுத்துகிறது.

25. நம்ம பள்ளி அறக்கட்டளைத் திட்டம்

அமைச்சகம்/துறை:

  • தமிழ்நாடு பள்ளிக் கல்வித் துறை

தலைமை முகமை:

  • 'நம்ம பள்ளி அறக்கட்டளை'.

நோக்கம்:

  • 'நம்ம பள்ளி அறக்கட்டளை'யின் நோக்கம், தனியார் அமைப்புகள் மற்றும் தனிநபர்களுடன் இணைந்து தமிழகம் முழுவதும் உள்ள அரசுப் பள்ளிகளை முழுமையாக சீரமைப்பதாகும்.
  • வேலியிடுதல், ஓவியம், இணைய இணைப்பு, சுகாதாரமான கழிப்பறைகள், ஆராய்ச்சி வசதிகள் மற்றும் நூலகங்கள் போன்ற உள்கட்டமைப்புகளை மேம்படுத்துவது போன்றவை இதில் அடங்குகிறது.

பயனாளிகள்:

முதன்மைப் பயனாளிகள்:

  • தமிழகம் முழுவதும் உள்ள அரசுப் பள்ளிகள்

இரண்டாம் நிலைப் பயனாளிகள்:

  • இப்போது உயர் பதவிகளில் உள்ள முன்னாள் மாணவர்கள், தொழில் வல்லுநர்கள், சமூகப் பொறுப்புணர்வுள்ள நிறுவனங்கள் மற்றும் நிதிப் பங்களிக்கும் பெருநிறுவனங்கள் ஆகும்.

தகுதி:

  • இப்போதைய தொழில் வல்லுநர்கள் அல்லது நிறுவனங்களில் உயர் பதவிகளை வகிக்கும் முன்னாள் மாணவர்கள் ஆவர்.
  • சமூகப் பொறுப்புணர்வுள்ள நிறுவனங்கள் மற்றும் சமூகப் பொறுப்புணர்வு முயற்சிகளில் பங்களிப்பதில் ஆர்வமுள்ள பெருநிறுவனங்கள் ஆகும்.

26. வானவில் மன்றம் திட்டம்

முன்முயற்சியின் பெயர்:

  • ஸ்கை வகுப்பறை

அமைச்சகம் அல்லது தலைமை முகமை:

  • பள்ளிக் கல்வித் துறை, தமிழ்நாடு அரசு

நோக்கம்:

அரசுப் பள்ளி மாணவர்களிடையே அறிவியல் ஆர்வத்தையும் கணிதத் திறனையும் வளர்ப்பது:

  • தமிழ்நாடு முழுவதும் உள்ள அரசுப் பள்ளிகளில் படிக்கும் மாணவர்களிடையே அறிவியல் மற்றும் கணிதத்தில் ஆழ்ந்த ஆர்வத்தை வளர்ப்பதை நோக்கமாகக் கொண்டது ஸ்கை வகுப்பறை முயற்சியாகும்.
  • உரையாடக்கூடிய மற்றும் கற்றல் அனுபவங்களை ஒருங்கிணைப்பதன் மூலம், இந்த முயற்சி ஆர்வத்தைத் தூண்டி மாணவர்களை அறிவியல் கருத்துக்கள் மற்றும் கணிதக் கோட்பாடுகளை நடைமுறை வழிகளில் ஆராய ஊக்குவிக்கிறது.

ஆய்வு மற்றும் கேள்விகளை ஊக்குவித்தல்

  • ஸ்கை வகுப்பறை முன்முயற்சியின் மூலம், மாணவர்கள் கேள்விகளைக் கேட்கவும், அறிவியல் விசாரணையில் தீவிரமாக ஈடுபடவும் ஊக்குவிக்கப்படுகிறார்கள்.
  • இந்தத் திட்டமானது மாணவர்கள் அறிவியல் நிகழ்வுகளை பரிசோதிக்கவும், உற்று நோக்கவும், பகுப்பாய்வு செய்யவும், தீவிர விமர்சன சிந்தனை மற்றும் சிக்கலைத் தீர்க்கும் திறன்களை வளர்க்கும் கற்றல் சூழலை ஊக்குவிக்கிறது.

அறிவியல் மற்றும் கணிதத்தில் ஆர்வத்தை வளர்த்துக் கொள்ளுங்கள்:

  • சிறுவயதிலிருந்தே அறிவியல் மற்றும் கணிதத்தின் மீதான ஆர்வத்தை வளர்ப்பதே இந்த முயற்சியின் முதன்மை இலக்குகளில் ஒன்றாகும்.
  • அதிநவீன அறிவியல் உபகரணங்கள் மற்றும் வளங்களுக்கான அணுகலை வழங்குவதன் மூலம், இந்த முயற்சி மாணவர்களை STEM (அறிவியல், தொழில்நுட்பம், பொறியியல் மற்றும் கணிதம்) துறைகளில் தொழிலைத் தொடர ஊக்குவிக்கும் மற்றும் இத்திட்டம் இந்தியாவின் அறிவியல் முன்னேற்றத்திற்கு பங்களிப்பதை நோக்கமாகக் கொண்டுள்ளது.

பயனாளி:

தமிழ்நாட்டில் உள்ள அரசுப் பள்ளி மாணவர்கள்:

  • இந்த முயற்சி முதன்மையாக தமிழ்நாட்டில் உள்ள அரசுப் பள்ளிகளில் 6 முதல் 8 ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களின் பங்கேற்பை நோக்கமாகக் கொண்டுள்ளது.
  • இவர்களை கவனம் செலுத்த வைப்பதன் மூலம், அதிக எண்ணிக்கையிலான மாணவர்களைச் சென்றடைவதையும், மேலும் அவர்களின் கல்விப் பயணத்தில் குறிப்பிடத்தக்க தாக்கத்தை ஏற்படுத்துவதையும் இத்திட்டம் நோக்கமாகக் கொண்டுள்ளது.

தகுதி:

அரசுப் பள்ளிகளில் 6 முதல் 8 ஆம் வகுப்பு வரை உள்ள மாணவர்கள்:

  • 6 முதல் 8 ஆம் வகுப்பு வரை உள்ள தமிழக அரசுப் பள்ளிகளில் படிக்கும் அனைத்து மாணவர்களும் ஸ்கை வகுப்பறை முயற்சியில் பங்கேற்கத் தகுதியுடையவர்கள் ஆவர்.
  • தகுதியுள்ள அனைத்து மாணவர்களிடையேயும், அவர்களின் பின்னணி அல்லது சமூகப் பொருளாதார நிலையைப் பொருட்படுத்தாமல், கற்றல் மற்றும் திறன் மேம்பாட்டிற்கான சம வாய்ப்புகளை வழங்குவதை இந்தத் திட்டம் நோக்கமாகக் கொண்டுள்ளது.

கூடுதல் தகவல்:

  • ஸ்கை வகுப்பறை முன்முயற்சியானது ரூ. 25 கோடி நிதி ஒதுக்கீடைப் பெற்றதன் மூலம் கணிசமான ஆதரவைப் பெற்றுள்ளது.
  • இந்த நிதியுதவியானது, ஊடாடும் கற்றல் அமர்வுகளைத் திறம்பட நடத்துவதற்குத் தேவையான மேம்பட்ட அறிவியல் கருவிகள், கல்விப் பொருட்கள் மற்றும் உள்கட்டமைப்பு ஆகியவற்றுடன் பங்கேற்கும் பள்ளிகளை சித்தப்படுத்துவதற்கான முன்முயற்சியை செயல்படுத்துகிறது.
  • முன்முயற்சி கோட்பாட்டு அறிவில் கவனம் செலுத்துவது மட்டுமல்லாமல், நடைமுறைப் பயன்பாடுகள் மற்றும் கற்றல் அனுபவங்களை வலியுறுத்துகிறது.
  • இந்தக் கூறுகளை பாடத்திட்டத்தில் ஒருங்கிணைப்பதன் மூலம், மாணவர்களின் அறிவுசார் மற்றும் கல்வி வளர்ச்சியை வளர்க்கும் ஒரு முழுமையான கற்றல் சூழலை உருவாக்குவதை நோக்கமாகக் கொண்டுள்ளது.
  • தமிழ்நாட்டில் உள்ள அரசுப் பள்ளிகள் முழுவதும் செயல்படுத்தப்பட்ட ஸ்கை வகுப்பறை முயற்சியானது, தற்போதுள்ள கல்வித் திட்டங்களை நிறைவு செய்யவும், மாநிலத்தில் அறிவியல் மற்றும் கணிதக் கல்வியின் ஒட்டு மொத்தத் தரத்தை மேம்படுத்தவும் வடிவமைக்கப் பட்டுள்ளது.
  • கல்வியாளர்கள் மற்றும் பங்குதாரர்களுடனான கூட்டாண்மை மூலம், மாணவர்கள் மற்றும் கல்வித் துறைக்கு நிலையான விளைவுகளையும் நீண்டகால நன்மைகளையும் அடைய இத்திட்டம் முயற்சிக்கிறது.
  • இந்த விரிவான விரிவாக்கம் ஸ்கை வகுப்பறை முன்முயற்சியின் ஒரு விரிவான கண்ணோட்டத்தை வழங்குகிறது, அதன் நோக்கங்கள், இலக்குப் பார்வையாளர்கள், தகுதி அளவுகோல்கள் மற்றும் தமிழ்நாட்டில் அறிவியல் மற்றும் கணிதக் கல்வித் துறையில் அது அடையும் பரந்த தாக்கத்தை எடுத்துக்காட்டுகிறது.

-------------------------------------

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்