TNPSC Thervupettagam

சூழலியலை, அரசியல் பொருளியலோடு இணைக்கும் நூல்

February 15 , 2025 10 days 75 0

சூழலியலை, அரசியல் பொருளியலோடு இணைக்கும் நூல்

  • நவீனமான இன்றைய வாழ்க்கை​யில் உலகில் ஏற்பட்டு வருகின்ற அரசி​யல், பொருளா​தார, சூழலியல் மாற்​றங்கள் நம்முடைய அன்றாட வாழ்​வில் கொடுமையான விளைவுகளை உண்டாக்கி வரு​கின்றன. அதன் விளைவாகச் சுற்றுச்​சூழல் மாசுபட்டுச் சீரழிந்​து​வரு​கிறது. நம் வாழ்​வியல் முறையை இந்நிலை​மைகள் மெல்ல மெல்ல அழித்து​வரு​கின்ற போக்கைக் கண்டு​கொள்​ளும் ஆற்றல் இல்லாமல் இயல்​பாக/மெத்​தனமாக இருக்​கிறோம்.
  • இத்தகுநிலை நம்வாழ்வை அழித்து​ விடும். கொடுமையான இச்சூழலை உணர்ந்​து​கொள்​ளாமல் யதார்த்தம் இதுதான் என்று அப்பா​வித்​தனமாக இருந்​தால் இறுதி​யில் என்ன அழிவு நேரும் என்ப​தைத் தவளை​யைப் பற்றிக் கூறப்​பட்​டுள்ள ஒரு செய்தி​யின் வழியாக இந்நூல் ஆசிரியர் மு.வெற்றிச்​செல்வன் அழகாக விளக்கு​கிறார்.
  • மனித வாழ்வை அழிக்​கின்ற சுற்றுச்​சூழல் கேடு​களுக்கு ஊற்றாக இருப்பது அரசும் அரசி​யல்​வா​தி​களும் கார்ப்​பரேட்டு​களும்​தான். உலகம் முழு​மை​யும் செயல்​பட்டு வருகின்ற மனிதகுல அழிவிற்​கும் சூழலியல் சீர்​கேட்டுக்​கும் எந்தவகையி​லாவது நாம் தீர்​வுகாண வேண்​டும். அவ்வாறு தீர்வு காண்​ப​தற்கான நடவடிக்கைகளை மேற்​கொள்ளத் தவறினால் நம்முடைய வாழ்க்கை​யும் நம் சந்த​தி​யினருடைய வாழ்க்கை​யும் அழிவுக்​குள்​ளாவதை எந்தச் சக்தி​யாலும் தடுக்க முடி​யாது.
  • எனவே, தீயவிளைவுகளை எதிர்​கொண்டு வாழ்​வை​யும் சூழலை​யும் காத்​துக் கொள்ள வேண்​டும் என்பதை நாம் அனைவரும் சிந்​திக்க வேண்டிய நிலை​யில் இருக்​கிறோம். அவ்வாறு சிந்​திக்​கும்​போது வாழ்​வைக் காத்​துக்​கொள்​வதற்கு வழிகாட்​டிகளாக விளங்​கும் அரிய சிந்​தனை​யாளர்​களாக மார்க்ஸ், அம்பேத்​கர், பெரி​யார் போன்ற​வர்கள் நம் முன்னே உள்ளனர். இவர்கள் அனைவரும் அரசி​யலை​யும் பொருளா​தா​ரத்​தை​யும் அடிப்​படை​யாகக் கொண்டு சிந்​தித்​தவர்​கள்​தானே; சுற்றுச்​சூழல் குறித்த சிந்​தனை​களுடன் இவர்களை இணைத்​துப் பார்ப்பது சரிதானா? என்ற கேள்வி எழக்​கூடும்.
  • இப்படியான கேள்விக்​குப்பதில் கூறும் முகமாகச் சுற்றுச்​சூழலியல் பற்றிய சிந்​தனை​யும் இன்றைய அரசியல் பொருளா​தாரச் சிந்​தனை​யும் பிரித்​துப் பார்க்க முடி​யாமல் இணைந்​துள்ளது என்பதை இந்நூலாசிரியர் மிகத் தெளிவாக விளக்கி​யுள்​ளார். உலகில் மனிதர்​களின் வாழ்​வைச் சிதைத்து, வதைத்து வருகின்ற வரலாற்றுத் தன்மைகளை மார்க்​ஸி​யம், வர்க்க முரண்​பாடு​களின் வழியாக ஆராய்​கிறது.
  • இந்தி​யர்​களை​யும் தமிழர்​களை​யும் வரலாறு நெடு​கிலும் (சுமார் 1000 ஆண்டு​களுக்​கும் மேலாக) இணைந்து பலம்​பெற்ற ஒரு சமூகமாக மாற முடி​யாமல் தடுக்​கின்றவை எவை? என்ற ஆராய்ச்​சிக்​குப் பதிலாகப் பெரி​யாரிய​மும் அம்பேத்​கரிய​மும் வருணாசிரமத்தை அடிப்​படை​யாகக் கொண்டு மனிதர்​களைப் பிளவுபடுத்து​கின்ற சாதி​யகோட்​பாடுகளே காரணம் என்ப​தைக் கண்டறிந்தன.
  • இதன் விளைவாக இந்தியச் சமூக​மும் தமிழ்ச் சமூக​மும் தங்களுடைய பலத்தை இழந்து 1000 ஆண்டுகள் அடிமை​களாகச் சிக்​கிச் சீரழிந்​து​போனதை​யும் உணர்ந்​து​கொண்​டனர். எனவே, இவ்வாறான அரசி​யலைச் சார்ந்த அடிமைத்​தளை​யில் இருந்து விடுதலை அடைவது மட்டுமல்​லாமல் சமூக விடு​தலைக்​காக​வும் போராட வேண்​டும் என்பதை மக்களுக்கு உணர்த்த வேண்டிய கடமைக்​குள்​ளா​யினர். அத்தகைய கடமைகள் எப்படிப்​பட்டவை என்ப​தை​யும் அவற்றை எவ்வாறு புரிந்​து​கொள்ள வேண்​டும் என்ப​தைப் பற்றி​யும் மக்களுக்கு விளக்​கும் வகையில் நூலின் பகுதி அமைந்​துள்ளது.
  • இவற்றுள் முக்​கிய​மானது ஆளும் வர்க்​க​மும் பொருளாதார வலிமை நிறைந்த மனிதர்​களும் பூமி​யின் வளங்​களைத் தங்களுக்​கும் தங்களுடைய வாரிசுகளுக்​கும் சொத்​துக்​களாக மாற்றிக் கொள்​கின்ற நிகழ்வுகள் சமூகத்​தில் பாரதூரமான மாற்​றங்களை உண்டாக்​கி வரு​கின்றன. அதாவது, இயற்கை அமைப்பு​களின் மீதான பொது​மக்​களின் உரிமை​களைத் தனியார் மயப்​படுத்துவது என்பது ‘ஓர் அடிமை முறை’ என மார்க்​ஸியம் கூறுகிறது.
  • அரசியல் பொருளா​தாரத் தளத்​தில் நடைபெறுகின்ற திட்​ட​மிட்டச் செயல்​பாடு​களைப் பொது​மக்கள் இயற்​கையாக நடைபெறுகின்ற யதார்த்​தமான ஒன்றெனக் கருதிக் கொண்டு வாழ்​கின்ற அவலநிலை​யில் உள்ளனர் அல்லது ஆக்கப்​படுகின்றனர். இப்படியான பொதுக்​கருத்து நிலை​யில் கட்டுண்டு கிடக்​கின்​றனர்.
  • இத்தகைய கருத்​து​நிலை இயல்​பானதன்று. இதை ஏற்றுக் கொண்டு வாழ்தல் அறியாமை​யாகும் என்று உணர்த்து​வது​தான் ஜனநாயகச் சிந்​தனை​யாகும். இத்தகைய நவீன சிந்​தனையை இந்தி​ய/தமிழக மக்களுக்கு உணர்த்தி விழிப்​படையச் செய்​வதான அரசியல் நடவடிக்கைகளை அம்பேத்​கரும் பெரி​யாரும் தங்களுடைய பணியாகக் கொண்​டனர். அதை இந்நூலின் வழியாக நுட்பமாக விளக்கு​கிறார் நூலாசிரியர்.
  • அதாவது, சூழலியல் அரசியலை மனித விடு​தலை​யோடு தொடர்​புப்படுத்திய நுட்​பமான பார்​வையை இந்நூலின் மூலம் முன்​வைத்​துள்ளார். சூழலியல் நீதி பற்றி வெற்றிச்​செல்வன் எழுதுவது குறிப்​பிடத்​தக்​கது. அதாவது, நூலின் ஒட்டுமொத்த அரசியல் கருத்​து​நிலையை இப்பகு​தி​யில் வாசகர்​களுக்​குப் புரிய​வைத்து​விடு​கிறார் நூலாசிரியர். அதாவது சாதி, மதம், முதலா​ளித்துவ அமைப்புகள் உள்ளிட்​ட​வற்​றால் மனித வாழ்வு, இயற்கை வளங்கள் சூறை​யாடப்​படு​கின்றன. அதிலிருந்து விடு​தலை​யடைய வேண்​டும்.
  • வேட்​டைக் காடாக மனித உடல்​களும் மாறிப் போன நிலை​யில் சமூக அரசியல் நடவடிக்கைகளோடு சூழலியல் அரசியலை முன்​வைத்​துள்ள பார்வை சமகாலப் பொருத்​தப்​பாடுடையது. அதை இந்நூலின் மூலம் செய்​து​காட்​டி​யுள்​ளார் வெற்றிச்​செல்​வன். சூழலியலை, அரசி​யல் பொருளா​தா​ரச் சிந்​தனை​களோடு இணைத்து ஆராய்கின்ற ஆசிரியர் அதனை ​மார்க்​ஸி​யத்​துட​னும் அம்​பேத்​காரி​யத்​துட​னும் பெரி​யாரி​யத்​துட​னும் பொருத்தி எளிய நடை​யில் ​விளக்கு​கின்​றார். இந்த நூல் ஆரம்பத்​திலிருந்து இறு​திவரை வாசிப்புச் சுவை உள்ள​தாக இருப்பது பாராட்​டத்​தக்கது.

நன்றி: இந்து தமிழ் திசை (15 – 02 – 2025)

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்