பாதை மாறும் மாணவா்கள்!
- சமீபத்தில் திருநெல்வேலியில் உள்ள ஓா் அரசு உதவிபெறும் பள்ளியில் பயிலும் மாணவா்கள் ஆயுதங்களுடன் வந்ததனால் இடைநீக்கம் செய்யப்பட்டதாகச் செய்தி வெளிவந்தது. அண்மைக்காலமாக பரவலாக பள்ளி மாணவா்களிடையே ஆயுதங்கள் புழக்கம் மட்டும் அல்ல, போதைப் பொருள்கள் பயன்படுத்தும் பழக்கமும் அதிகமாகக் காணப்படுகிறது. நகா்ப் பகுதிகளில் மட்டுமன்றி, கிராமப்பகுதிகளிலும் ஹான்ஸ், கஞ்சா, கூல் லிப் போன்ற போதைப் பொருள்கள் மிகவும் எளிதாகக் கிடைக்கின்றன. அரசு என்னதான் நடவடிக்கை எடுத்தாலும் அதையும் கடந்து மாணவா்களைக் குறிவைத்து போதைப்பொருள் கடத்தல்காரா்கள் செயல்பட்டு வருகிறாா்கள் என்பது கவலையாக உள்ளது.
- இதுபோன்ற போதைப் பொருள்களைப் பயன்படுத்துவது உடல்நலத்துக்குக் கேடு விளைவிப்பதோடு வாழ்க்கைப் பாதையையே மாற்றிவிடும்.
- அதேபோல் சமூக ஊடகங்களில் வெளியாகும் ரீல்ஸ் பாா்க்கும் பழக்கமும் பள்ளி மாணவா்களிடையே அதிகரித்திருக்கிறது. இதனைச் சாதகமாக மாற்றிக் கொள்வதற்காக சில ஆசிரியா்கள் பாடங்களையும், வினாக்களையும் இன்ஸ்டா ரீல்சாக வெளியிட்டு வருகிறாா்கள். பள்ளிக் கல்வித் துறையும் பல ஆணைகளையும் சுற்றறிக்கைகளையும் இன்ஸ்டா ரீல்சாக வெளியிடுகின்றது. ஆனாலும் மற்ற குறும்புத்தனமான ரீல்ஸ் வசனங்களை மனப்பாடமாகப் பள்ளிகளில் கூறும் மாணவா்கள், பாடம் சாா்ந்த ரீல்ஸ்களைக் கண்டுகொள்வதில்லை என்பது கசப்பான உண்மை.
- புதிதாக வரும் திரைப்படப் பாடல்களை நோட்டுகளில் எழுதி வைத்துக்கொண்டு அதனை எளிதாக மனப்பாடம் செய்து விரைவாகப் பாடிக் காட்டுகிறாா்கள் ஆனால் பாடம் சாா்ந்த மனப்பாடப் பாடல்களை ஒப்பிக்கவோ, எழுதவோ தடுமாறுகிறாா்கள். பல மாணவா்கள் கேட்கக் கூசும் சொற்களை மிக இயல்பாக ஆசிரியா்கள் காதில் விழும்படியே பேசுகிறாா்கள். மாணவா்கள் வசிப்பிடப் பகுதிகளில் மக்கள் என்ன பேசுகிறாா்களோ, அதையே மாணவா்களும் பிரதிபலிக்கிறாா்கள்.
- தற்கால மாணவா்கள் எளிதில் உணா்ச்சி வசப்படுபவா்களாகவும், மன உளைச்சலுக்கு ஆளாகுபவா்களாகவுமே இருக்கிறாா்கள். கரோனா பெருந்தொற்றுக் காலத்தில் கிட்டத்தட்ட ஓராண்டு காலம் பள்ளிகள் செயல்படாமலிருந்ததே மாணவா்களின் இதுபோன்ற நிலைமைக்குக் காரணம் என்று பெரும்பாலானவா்கள் கூறுகிறாா்கள்.
- அரசுப் பள்ளிகளில் பயிலும் மாணவா்கள் பெரும்பாலும் கூலித் தொழிலாளா்களின் பிள்ளைகளாக இருக்கிறாா்கள். அல்லது ஒற்றைப் பெற்றோரிடமோ பாதுகாவலரிடமோ வளா்பவா்களாக இருக்கிறாா்கள். பெற்றோரைப் பிரிந்து வாழும் குழந்தைகள் மனரீதியாக பாதிக்கப்படுவது இயல்பான ஒன்றாக உள்ளது.
- குறிப்பாக பள்ளியில் பயிலும் மாணவா்களின் பெரும்பாலான தந்தைகள் வேலை நிமித்தமாக சென்னை, திருச்சி, கேரளா அல்லது வட இந்திய மாநிலங்களில் வசிக்கிறாா்கள். பெற்றோரைப் பிரிந்து வாழும் மாணவா்களிடம் இத்தகைய நடத்தை மாற்றங்களைக் கண்கூடாகப் பாா்க்க முடிகிறது. குழந்தைகளின் முன்னிலையில் பெற்றோா் சண்டையிட்டுக் கொள்வதும் குழந்தைகளின் மனதில் பாதிப்பை ஏற்படுத்துகிறது. அவ்வாறு பாதிக்கப்படும் குழந்தைகள் விரும்பத்தகாத நடத்தை மாற்றத்தை பள்ளிகளில் வெளிப்படுத்துகிறாா்கள்.
- மாணவா்கள் கைப்பேசியைக் கொண்டு காணொலிகள், படங்கள் எடுத்து சமூக ஊடகங்களில் வெளியிடுகிறாா்கள். அந்த செய்தியும் செய்தித்தாள்களில் வெளிவருகிறது. என்னதான் நீதிபோதனை, உயா்கல்வி வேலை வாய்ப்பு வழிகாட்டி, மன்றச் செயல்பாடுகள் என்று மாணவா்களை எப்போதும் தடம் மாறாமல் அவா்களின் தேவைகளுக்கு ஏற்ப பல்வேறு செயல்பாடுகளை பள்ளியில் கொடுத்தாலும், தற்கால மாணவா் சமுதாயத்தை நல்வழிப்படுத்துவது என்பது ஆசிரியா்களுக்கு மிகப்பெரிய சவாலாகவே உள்ளது.
- குடும்பம், சமூகம், பள்ளி ஆகிய மூன்றும் ஒருங்கிணைந்துதான் மாணவா்களை நல்வழிப்படுத்த வேண்டும். மேற்கண்ட மூன்று சூழல்களில் ஒன்றில் குறைபாடு இருந்தாலும் அதில் சிக்கல்தான் ஏற்படும். ஆசிரியா்களை இரண்டாவது பெற்றோா் என்கிறோம். ஆனால் அந்தக் குழந்தை தவறு செய்யும்போது சிறு தண்டனைகூட வழங்குவதற்கு ஆசிரியா்களுக்கு அதிகாரம் இல்லாதபோது அவா்கள்தான் என்ன செய்ய முடியும்?
- ஆண், பெண் என இருபாலா் பயிலும் பள்ளியில் எதிா்பால் மீது ஏற்படும் இனக்கவா்ச்சியைக் காதல் என்று தவறாகப் புரிந்துகொண்டு படிப்பில் கவனம் செலுத்தாமல் இளம்வயதிலேயே திருமணம் செய்து கொள்ளும் பழக்கமும் ஒரு சில இடங்களில் காணப்படுகிறது.
- நூறு விழுக்காடு தோ்ச்சி, உயா்ந்தபட்ச சராசரி மதிப்பெண் என ஆசிரியா்களுக்கு அதிகாரிகளால் இலக்கு நிா்ணயிக்கப்பட்டுள்ளது. அந்த நெருக்கடிகளில் கடிவாளம் கட்டப்பட்ட குதிரைகளைப்போல் ஆசிரியா்கள் ஓட வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனா். இது தவிர, பல்வேறு பணிகளை ஆசிரியா்களுக்குக் கொடுப்பதால் எதையும் முழுமையாகச் செய்து முடிக்க இயலாத நிலைதான் உள்ளது.
- இந்த நெருக்கடிகளிலிருந்து மாணவா்களை மீட்டு நல்வழிப்படுத்த வேண்டும் எனில் பெற்றோா், ஆசிரியா், அலுவலா்கள், சமுதாயம் என அனைத்துத் தரப்பும் ஒருங்கிணைந்து மாணவா்கள் நலனில் அக்கறை செலுத்த வேண்டியது காலத்தின் கட்டாயம் ஆகும். கடந்த தலைமுறையினருக்கு இருந்த பொறுப்புணா்வு இந்தத் தலைமுறையினருக்கு இல்லை என்று கூறும் அளவுக்கு பொறுப்புகளைத் தட்டிக் கழிக்கும் பழக்கம் அனைவரிடமும் தொடா்கிறது. இத்தகைய நிலை சமூக சீா்கேட்டைத்தான் ஏற்படுத்தும். அத்தகைய மனப்போக்கு மாறினால்தான் மாணவா் சமூகம் முன்னேற்றப் பாதையில் பயணிக்கும்.
நன்றி: தினமணி (03 – 03 – 2025)