ஃபுகுஷிமா அணுமின் நிலையத்திலிருந்து 1 மில்லியன் டன்களுக்கும் அதிகமான அளவில் சுத்திகரிக்கப்பட்ட கதிரியக்க நீரை வெளியேற்றும் திட்டத்திற்கு ஜப்பானிய அரசானது சமீபத்தில் ஒப்புதல் அளித்துள்ளது.
சர்வதேச அணுசக்தி அமைப்பின் கூற்றுப்படி, ஃபுகுஷிமா அணுமின் நிலையத்திலிருந்து அந்த நீரை வெளியேற்றுவது என்பது உலகின் பிற இடங்களில் அணுசக்தி ஆலைகளில் இருந்து கழிவுநீரை வெளியேற்றுவதைப் போன்றதே ஆகும்.
ட்ரிட்டியத்தை மட்டும் விட்டு விட்டு அசுத்தமான தண்ணீரை வெளியிட ஜப்பான் திட்டம் தீட்டிள்ளது.
மற்ற கதிரியக்கக் கழிவுகளுடன் ஒப்பிடும்போது ட்ரிட்டியமானது குறைவான தீங்கை மட்டுமே விளைவிக்கும்.
இது மனித சருமத்தில் ஊடுருவ போதுமான சக்தியை வெளியிடுவதில்லை.
2011 ஆம் ஆண்டில், ஏற்பட்ட நிலநடுக்கம் மற்றும் சுனாமி காரணமாக அந்த அணுசக்தி ஆலையில் அணுசக்தி பேரிடர் ஏற்பட்டது.
சர்வதேச அணுசக்தி நிகழ்வு அளவில் நிலை 7 என வகைப்படுத்தப்பட்ட இது மிகவும் கடுமையான ஒரு அணு விபத்து ஆகும்.