அகமதுநகர் நகரமானது, 18 ஆம் நூற்றாண்டின் மராட்டிய ராணியான அஹில்யாபாய் ஹோல்கரின் நினைவாக 'அஹில்யா நகர்' என மறுபெயரிடப்பட உள்ளதாக மகாராஷ்டிரா அரசு அறிவித்துள்ளது.
18 ஆம் நூற்றாண்டில், மால்வா மாகாணத்தில் மிகவும் திறன்மிக்க ஆட்சியாளராக இவர் வாழ்ந்து வந்தார்.
இவர் மகேஸ்வர் நகரினை (மத்தியப் பிரதேசத்தில்) ஹோல்கர் வம்சத்தின் தலமாக நிறுவினார்.
சமீபத்தில், ஔரங்காபாத் நகரினை ‘சத்ரபதி சம்பாஜிநகர்’ என்றும், ஒஸ்மானாபாத் நகரினை ‘தாராஷிவ்’ என்றும் அம்மாநில அரசாங்கம் மறுபெயரிட்டது.