TNPSC Thervupettagam

அகழ்வாராய்ச்சித் தளத்திலேயே அருங்காட்சியகம் - ஆதிச்சநல்லூர்

February 5 , 2020 1628 days 659 0
  • அகழ்வாராய்ச்சித் தளத்திலேயே அருங்காட்சியகம் அமைக்கப்பட இருக்கும் ஐந்து தொல்பொருள் ஆராய்ச்சித் தளங்களில் தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள ஆதிச்சநல்லூர் தளமும் ஒன்றாகும்.
  • தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள பிற தொல்பொருள் தளங்கள்
    • ராக்கிஹார்கி (ஹரியானா),
    • ஹஸ்தினாபூர் (உத்தரப் பிரதேசம்),
    • சிவசாகர் (அசாம்) மற்றும்
    • தோலவீரா (குஜராத்).
  • தொலைதூரக் கிராமமான ஆதிச்சநல்லூரில் 200 ஏக்கருக்கும் அதிகமான பரப்பளவில் மூன்று அடுக்கு கல்லறை உள்ளது.
  • இது தெற்காசியாவில் அமைந்துள்ள மிகப்பெரிய மற்றும் மிகப் பழமையான முந்தைய இரும்புக் காலக் கல்லறைகளில் ஒன்றாக விளங்குகின்றது.
  • 2004-06 ஆம் ஆண்டில் இந்திய தொல்பொருள் ஆய்வு நிறுவனத்தினால் நடத்தப்பட்ட அகழ்வாராய்ச்சியில் 85 மனித எலும்புக் கூடுகள் காணப் பட்டன.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்