இந்திய விமானப்படையானது (IAF) முதன்முறையாக மகளிர் அக்னிவீர்வாயு (மகளிர்) வீராங்கனைகளை தனது அதிகாரி சாராத படைப்பிரிவில் சேர்த்துள்ளது.
கர்நாடகாவின் பெலகாவியில் உள்ள வான்படை வீரர்கள் பயிற்சிப் பள்ளியில் இருந்து மொத்தம் 153 அக்னிவீர்வாயு (பெண்கள்) வீராங்கனைகள் பட்டம் பெற்றனர்.
இந்திய இராணுவம் ஆனது தற்போது இராணுவக் காவல் படையில் உள்ள அதிகாரிகள் தர வரிசைக்கு (PBOR) கீழ் உள்ள பதவிகளில் மட்டுமே மகளிரைப் பணியமர்த்தினாலும், அது விரைவில் மற்ற பிரிவுகளிலும் பெண்களுக்கு வாய்ப்புகளை வழங்கும் என எதிர்பார்க்கப் படுகிறது.
குறுகிய கால இளைஞர் ஆட்சேர்ப்புத் திட்டமான அக்னிபாத் திட்டத்தின் கீழ், இராணுவப் பிரிவுகளில் அக்னிவீரர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.