யுனெஸ்கோ உலகப் பாரம்பரிய மையத்திற்கு அஸ்ஸாமில் உள்ள சாராய்டியோ மொய்டம்களைப் பரிந்துரைக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது.
இது தேர்ந்தெடுக்கப் பட்டால், காசிரங்கா தேசியப் பூங்கா மற்றும் மனாஸ் தேசியப் பூங்காவுடன் சேர்த்து அஸ்ஸாம் மூன்று உலகப் பாரம்பரிய தளங்களைக் கொண்டு இருக்கும்.
ஆனால் வடகிழக்கு இந்தியாவில் கலாச்சாரப் பாரம்பரியம் என்ற பிரிவில் தற்போது உலகப் பாரம்பரிய தளம் ஏதும் இல்லை.
அஸ்ஸாமில் உள்ள தை அஹோம் சமூகத்தின் பிற்பகுதியில் உள்ள மேட்டில் புதைக்கும் இடைக்காலப் பாரம்பரியத்தை சாராய்டியோ மொய்டம்கள் குறிக்கிறது.
இதுவரை ஆய்வு செய்யப்பட்ட 386 மைடம்கள் அல்லது மொய்டம்களில், சாராய்டியோவில் உள்ள 90 அரசப் புதைகுழிகள் சிறப்பாகப் பாதுகாக்கப்பட்டுள்ளன.
தற்போதைய நிலவரப்படி, அந்த அரசப் புதைகுழிகளில் 30 மட்டுமே இந்திய அரசின் தொல்லியல் துறையின் பாதுகாப்பில் உள்ளன.