2021 ஆம் ஆண்டு கால்நடைப் பாதுகாப்பு மசோதாவானது அசாம் மாநில சட்ட சபையில் சமீபத்தில் நிறைவேற்றப்பட்டது.
இது கால்நடைகளை வெட்டுதல், இறைச்சியினை உட்கொள்ளுதல் மற்றும் அவற்றை இடம் மாற்றுதல் போன்றவற்றை ஒழுங்குமுறைப்படுத்த விழைகிறது.
இந்த மசோதாவானது ஒரு குறிப்பிட்ட பகுதியின் அங்கீகரிக்கப்பட்ட கால்நடை நல அலுவலரிடமிருந்து அவசிய சான்றிதழைப் பெறாமல் ஒருவர் கால்நடையினை வெட்டுவதைத் தடை செய்கிறது.
‘கால்நடை’ எனும் சொற்கூறில் எருதுகள், காளைகள், பசுக்கள், கிடாரிகள், கன்றுகள், ஆண் மற்றும் பெண் எருமைகள் மற்றும் எருமைக் கன்றுகள் ஆகியவை அடங்கும்.