ஐஸ்வால் சங்கத்தில் நடைபெற்ற ஒரு பேச்சுவார்த்தையின் போது, எல்லையில் அமைதியை மேம்படுத்தவும் அதனை நிலை நாட்டவும் அசாம் மற்றும் மிசோரம் ஆகிய மாநிலங்களின் உயர்மட்டக் குழுக்கள் ஒப்பந்தம் ஒன்றை மேற்கொண்டன.
இரண்டு வடகிழக்கு அண்டை மாநிலங்களைச் சேர்ந்த அதிகாரிகள் இதற்கான கூட்டு அறிக்கையில் கையெழுத்திட்டனர்.
பல தசாப்தங்களாக நிலவும் எல்லைப் பிரச்சனையை அமைதியான முறையில் தீர்க்க இரு தரப்பினரும் ஒப்புக் கொண்டனர்.
மிசோரம் மற்றும் அசாம் இடையே பல தசாப்தங்களாக நிலவும் ஒரு எல்லைப் தகராறானது, முக்கியமாக 1875 மற்றும் 1933 ஆம் ஆண்டுகளில் காலனித்துவ ஆட்சியில் மேற்கொள்ளப்பட்ட இரண்டு எல்லை நிர்ணய அறிவிப்புகளில் இருந்து உருவானது.
வங்காளக் கிழக்கு எல்லை ஒழுங்குமுறையின் கீழ் 1875 ஆம் ஆண்டு அறிவிப்பில் குறிப்பிடப் பட்ட எல்லை நிர்ணயத்தை மிசோரம் அரசு ஏற்றுக் கொண்டது.
ஆனால் அசாம் மாநில அரசானது, 1933 ஆம் ஆண்டின் அறிவிப்பின் கீழ் குறிப்பிடப் பட்ட எல்லை நிர்ணயம் தனது அரசியலமைப்பு எல்லைக்குட்பட்டது என்று கூறியது.