TNPSC Thervupettagam

அசாம் ரைபிள்ஸ் படைப் பிரிவின் 188வது எழுச்சி தினம் - மார்ச் 24

March 31 , 2023 512 days 199 0
  • அசாம் ரைபிள்ஸ் படைப்பிரிவின் 188வது எழுச்சி தினமானது மார்ச் 24 ஆம் தேதியன்று கொண்டாடப் படுகிறது.
  • இது நாட்டின் பழமையான மற்றும் மிகவும் மதிப்புமிக்க துணை இராணுவப் படைப் பிரிவாகும்.
  • அசாம் ரைபிள்ஸ் படைப்பிரிவானது 1835 ஆம் ஆண்டு மார்ச் 24 ஆம் தேதியன்று நிறுவப் பட்டது.
  • 1883 ஆம் ஆண்டில் அசாம் எல்லைப்புறக் காவல்துறையாகவும், 1891 ஆம் ஆண்டில் அசாம் ராணுவக் காவல்துறையாகவும், 1913 ஆம் ஆண்டில் கிழக்கு வங்காளம் மற்றும் அசாம் ராணுவக் காவல்துறையாகவும் இந்தப் படை மறுவடிவமைப்பு செய்யப் பட்டது.
  • இது தனது தற்போதையப் பெயரை 1917 ஆம் ஆண்டில் பெற்றது.
  • இது வடகிழக்கு இந்தியாவில் எல்லைப் பாதுகாப்பு, கிளர்ச்சி எதிர்ப்பு மற்றும் சட்டம் ஒழுங்கைப் பராமரிப்பதற்கானப் பொறுப்பினை வகிக்கும் மத்திய துணை ராணுவப் படையாகும்.
  • இந்தப் படைப் பிரிவானது இந்திய-மியான்மர் நாடுகளின் எல்லையைப் பாதுகாக்கும் பொறுப்பினையும் வகிக்கிறது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்