தற்போது இஸ்ரேலில் நடைபெற்று வரும் போர் சூழ்நிலைகளில் சிக்கித் தவிக்கும் இந்தியக் குடிமக்களை இந்தியாவிற்குத் திருப்பி அனுப்புவதற்கான முதல் சிறப்பு விமானம் புது டெல்லியை வந்தடைந்தது.
இந்த விமானமானது, ‘அஜய் நடவடிக்கையின்’ கீழ் இஸ்ரேலில் இருந்து 212 இந்தியப் பயணிகளை ஏற்றி வந்தது.
குறிப்பாக மாணவர்கள், தொழில் வல்லுநர்கள் மற்றும் வர்த்தகர்கள் உட்பட சுமார் 18,000 இந்தியர்கள் இஸ்ரேலில் உள்ளனர்.