மின்சாரக் கட்டணம் செலுத்தாமையால் ஏற்படும் இழப்புகளைக் குறைக்கவும் சூரிய சக்தியை ஊக்குவிக்கவும் மகாராஷ்டிரா அரசானது அடல் சோலார் க்ருஷி பம்ப் திட்டம் என்ற திட்டத்தினை அறிமுகப்படுத்தியுள்ளது.
இந்த திட்டத்தின் சிறப்பம்சங்களில் ஒன்று
அரசானது விவசாயிகளுக்கு மானிய விலையில் சூரிய ஒளியால் இயங்கும் தண்ணீர் இறைப்பானை வழங்குவதாகும்.
மேலும் அரசானது இத்திட்டத்தின் கீழ் பதிவு செய்யும் விவசாயிகளுக்கு இரண்டு LED விளக்குகள், DC காற்றாடி மற்றும் கைபேசி சார்ஜர் ஆகியவற்றை இலவசமாக வழங்கவும் முடிவு செய்துள்ளது.