அடையாளம் தெரியாத உடல்களின் DNA தரவுத் தளத்தினை உருவாக்கிய “முதல் மாநிலமாக” இமாச்சலப் பிரதேசம் மாறியுள்ளது.
கடந்த ஆண்டு ஏப்ரல் மாதத்தில் இதற்கான செயல்முறைகள் தொடங்கப்பட்ட நிலையில் இது வரையில் அடையாளம் தெரியாத உடல்களின் 150 DNA மாதிரிகளின் பதிவுகள் இந்த தரவுத் தளத்தில் சேமிக்கப்பட்டுள்ளன.
இதில் உடல்களை அடையாளம் காண்பது மற்றும் இறந்தவர்களுக்கான இறுதிச் சடங்குகள் போன்றவற்றைச் செய்வதற்கான ஒரு வாய்ப்பு குடும்ப உறுப்பினர்களுக்குக் கிடைக்கப் பெற உதவும்.
மேலும், கொலை மற்றும் மரணத்திற்கு வழி வகுத்த பல்வேறு வழக்குகளில் உண்மைக் குற்றவாளியைக் கண்டுபிடிக்கவும் இது உதவும்.