இயற்பியலாளரும் வானிலை ஆய்வாளருமான அண்ணா மொடயில் மணியின் 104வது பிறந்தநாளை முன்னிட்டு அவருக்கென ஒரு சிறப்பு டூடுலை அர்ப்பணித்து அவரது பிறந்த நாளினை கூகுள் கொண்டாடியது.
இவர் இந்தியாவின் முதல் பெண் அறிவியலாளர்களுள் ஒருவர் ஆவார்.
இவர் இந்திய வானிலை ஆய்வுத் துறையின் (IMD) துணைத் தலைமை இயக்குநராகப் பணியாற்றினார்.
ஐக்கிய நாடுகளின் உலக வானிலை அமைப்பிலும் இவர் சில முக்கியப் பதவிகளை வகித்துள்ளார்.
1987 ஆம் ஆண்டில் அறிவியல் துறையில் அவரது குறிப்பிடத்தக்க சில பங்களிப்புகளுக்காக INSA K.R.ராமநாதன் என்ற பதக்கத்தை அவர் வென்றார்.