TNPSC Thervupettagam

அதிஉயர் சுற்றுச்சூழல் நிலப் பகுதிகளில் புலிகள்

September 5 , 2019 1781 days 607 0

மத்திய சுற்றுச்சூழல் அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் ‘உயரமான சுற்றுச்சூழல் நிலப் பகுதிகளில் புலி வாழ்விடங்களின் நிலை’ குறித்த அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.

  • இந்த ஆய்வானது உலகளாவியப் புலிகள் மன்றம் (GTF - Global Tiger Forum), இயற்கைக்கான உலகளாவிய நிதியம், பன்னாட்டு இயற்கைப் பாதுகாப்புச் சங்கத்தின் (International Union for Conservation of Nature - IUCN) புலிகளுக்கான ஒருங்கிணைந்த வாழ்விடப் பாதுகாப்புத் திட்டம் மற்றும் இந்தியா, நேபாளம் & பூடான் ஆகிய அரசாங்கங்கள் ஆகியவற்றினால் மேற்கொள்ளப் பட்டன.
  • அதிஉயர சுற்றுச் சூழல் அமைப்பு கூட புலிகளின் வளர்ச்சிக்கு ஒத்துப் போகும் என்று இந்த ஆய்வு தெரிவிக்கின்றது.

GTF பற்றி

  • உலகில் புலிகளைக் கொண்டுள்ள 13 நாடுகளில் பரவியிருக்கும் புலிகளின் மீதமுள்ள 5 துணை இனங்களைப் பாதுகாப்பதற்கான உலகளாவிய பிரச்சாரம் மீதான அரசாங்கங்களுக்கிடையேயான ஒரே சர்வதேச அமைப்பு GTF ஆகும்.
  • GTF 1993 இல் உருவாக்கப்பட்டது. 1997 இல் இது ஒரு சுயாதீன அமைப்பாக உருவெடுத்தது.
  • அதன் செயலகம் புது தில்லியில் உள்ளது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்