கர்நாடக மாநில அரசு அதிக எடையுள்ள பள்ளிப் புத்தகப் பைகளை எடுத்துச் செல்வதனால் ஏற்படும் சுகாதாரச் சீர்கேடுகளிலிருந்து பள்ளிக் குழந்தைகளைப் பாதுகாப்பதற்காக விதிமுறைகளை அறிமுகப் படுத்தியுள்ளது.
குழந்தையின் எடையில் 10 சதவிகிதத்திற்கும் மேலே பள்ளிப் புத்தகப் பைகளின் எடை இல்லாமல் இருப்பதை உறுதி செய்ய வேண்டும் என்று பள்ளிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
ஒன்றாம் மற்றும் இரண்டாம் வகுப்பைச் சேர்ந்த குழந்தைகளின் புத்தகப் பைகளின் எடை ஏறத்தாழ 1.5 கிலோ கிராமிலிருந்து 2 கிலோ கிராமிற்குள்ளாக மட்டுமே இருக்க வேண்டும்.
மூன்றாம், நான்காம் மற்றும் ஐந்தாம் வகுப்பைச் சேர்ந்த குழந்தைகளின் பள்ளி புத்தகப் பைகளின் எடையானது 2 கி.கி.லிருந்து 3 கி.கி. வரை மட்டுமே இருக்க வேண்டும்.
பள்ளிகள் ஒவ்வொரு மாதத்தின் 3-வது சனிக்கிழமையை “புத்தகப் பைகளற்ற தினமாக” கட்டாயம் கடைபிடிக்க வேண்டும்.