TNPSC Thervupettagam

அந்தமான் மற்றும் நிக்கோபார் தீவுகளுக்குப் பெயரிடுதல்

December 7 , 2022 590 days 359 0
  • அந்தமான் & நிக்கோபார் ஒன்றியப் பிரதேசத்தில் உள்ள மக்கள் எவரும் வசிக்காத 21 தீவுகளுக்கு அரசாங்கம் பெயரிட்டுள்ளது.
  • நாட்டின் மிக உயரியப் போர் முறை வீர விருதான பரம் வீர் சக்ராவைப் பெற்ற வீரர்களின் நினைவாக அந்தத் தீவுகளுக்குப் பெயரிடப்பட்டுள்ளது.
  • மொத்தம் 21 தீவுகளில், 16 தீவுகள் வடக்கு மற்றும் மத்திய அந்தமான் மாவட்டத்திலும், ஐந்து தீவுகள் தெற்கு அந்தமான் பகுதியிலும் உள்ளன.
  • வடக்கு மற்றும் மத்திய அந்தமானில் உள்ள ‘INAN370’ என்ற எண் கொண்ட முதல் மக்கள் வசிக்காத தீவிற்கு மேஜர் சோம்நாத் சர்மா அவர்களின் நினைவாகப் பெயர் சூட்டப்பட்டது.
  • இனி ‘INAN370’ தீவானது ‘சோம்நாத் த்வீப்’ என்று அழைக்கப்படும்.
  • இவர் முதலாவது பரம் வீர் சக்ரா விருதினைப் பெற்ற முதல் நபர் ஆவார்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்