TNPSC Thervupettagam

அந்நிய முதலீட்டை ஈர்ப்பதற்கான குழு

August 9 , 2022 711 days 387 0
  • இந்தியப் பத்திரங்கள் மற்றும் பரிவர்த்தனை வாரியம் ஆனது அந்நிய முதலீட்டை அதிகரிப்பதற்காக 15 பேர் கொண்ட குழு ஒன்றினை அமைத்துள்ளது.
  • இந்தியப் பத்திரங்கள் மற்றும் பரிவர்த்தனை வாரியத்தினால் அமைக்கப்பட்ட ஆலோசனைக் குழுவானது, ‘அந்நிய முதலீட்டை ஈர்ப்பதற்கான ஆலோசனைக் குழு’ என்று அழைக்கப்படுகிறது.
  • முன்னாள் தலைமைப் பொருளாதார ஆலோசகர் K.V.சுப்பிரமணியன் இந்தக் குழுவின் தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார்.
  • தற்போதுள்ளச் செயல்முறைகளை மதிப்பாய்வு செய்வதன் மூலம் வெளிநாட்டு முதலீட்டாளர்கள் இந்தியச் சந்தைகளில் முதலீடு செய்வதற்கான சில வழிகளை எளிதாக்குவதை இது நோக்கமாகக் கொண்டுள்ளது.
  • உள்நாட்டுப் பத்திரச் சந்தைகளில் வெளிநாட்டு முதலீட்டாளர்களின் பங்கேற்பை அதிகரிக்க இந்தக் குழு உதவும்.
  • முதலீட்டை ஈர்ப்பதற்கும் வெளிப்படைத் தன்மையை அதிகரிப்பதற்கும் தற்போதுள்ள விதிகளில் மாற்றங்களைக் கொண்டு வருவதற்கான புதிய வழிமுறைகளை இக்குழுப் பரிந்துரை செய்யும்.
  • பாதுகாப்பு அதிகாரிகள் தொடர்பான பிரச்சினைகள் குறித்தப் பரிந்துரைகளையும் இக்குழு வழங்கும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்