இந்த விதிமுறைகளை மத்திய சுற்றுச்சூழல் அமைச்சகமானது இப்போது திருத்தி உள்ளது.
இது 2015 ஆம் ஆண்டில் துகள்மப் பொருட்கள், சல்பர் டை ஆக்சைடு மற்றும் நைட்ரஜனின் ஆக்சைடுகளுக்கான உமிழ்வு அளவுகளை அறிவித்து இருந்தது.
இவற்றை 2017 ஆம் ஆண்டில் மின் நிலையங்கள் பின்பற்ற வேண்டுமென அது விதித்து இருந்தது.
இது இப்போது தேசிய தலைநகரப் பிராந்தியத்தின் 10 கிலோமீட்டருக்குள் உள்ள பகுதிகளில் மற்றும் 10 லட்சத்துக்கும் அதிகமான மக்கள் தொகை கொண்ட நகரங்களில் 2022 ஆம் ஆண்டின் இறுதிக்குள் புதிய உமிழ்வு விதிமுறைகளுக்கு இணங்க வெப்ப மின் நிலையங்களை அனுமதிக்கிறது.
நைட்ரஜன் (NOx), சல்பர் டை ஆக்சைடு (SO2) மற்றும் துகள்மப் பொருட்கள் (PM) ஆகியவற்றின் ஆக்சைடுகள், நிலக்கரியை எரிக்கும் மின் உற்பத்தி நிலையங்களிலிருந்து வரும் முதன்மை மாசுபடுத்திகளாகும்.
நாட்டில் மொத்த தொழில்துறை உமிழ்வுகளில் துகள்மப் பொருட்களின் 60 சதவீதம்; SO2 உமிழ்வின் 45 சதவீதம் ; NOx உமிழ்வின் 30 சதவீதம்; மற்றும் பாதரச உமிழ்வின் 80 சதவீதம் போன்ற அதிகமான உமிழ்வுகளுக்கு அனல் மின் நிலையங்கள் காரணம் ஆகின்றன.
மேலும் அனைத்துத் தொழில்துறை நிறுவனங்களாலும் எடுக்கப்படும் மொத்த நன்னீரில் 70 சதவீதத்திற்கு மேற்கூறிய அனல் மின் நிலையங்கள் பொறுப்பாகும்.