ஐக்கிய இராஜ்ஜிய அரசாங்கமானது ஐரோப்பிய பொருளாதாரப் பகுதிக்கு (EEA - European Economic Area) வெளியே உள்ள நாடுகளிலிருந்து ஐக்கிய இராஜ்ஜியத்திற்கு வரும் சர்வதேசப் பயணிகளால் முழுமையாக பூர்த்தி செய்யப்பட்ட அனுமதி அட்டைகளை வைத்திருக்க வேண்டும் என்ற நடைமுறையை நீக்கியுள்ளது.
இது பிரிட்டனிற்குள் எளிமையான முறையில் நுழைய வேண்டும் என்ற நோக்கத்திற்காக எடுக்கப்பட்ட நடவடிக்கைகளின் ஒரு பகுதியாகும்.
நுழைவின் போது நிரப்பப்பட்ட அனுமதி அட்டைகளை வைத்திருப்பதற்கு இந்தியர்களுக்கும் விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.
EEA
ஐரோப்பிய பொருளாதாரப் பகுதி மீதான ஒப்பந்தமானது 1994 ஆம் ஆண்டு ஜனவரி 01 அன்று நடைமுறைக்கு வந்தது.
EEA மீதான ஒப்பந்தமானது பின்வருவனவற்றை ஒன்றிணைக்கின்றது.
ஐரோப்பிய ஒன்றிய உறுப்பு நாடுகள்
3 EEA நாடுகள் : ஐஸ்லாந்து, லிச்செடென்ஸ்டைன், நார்வே
இந்த நாடுகள் “உள்நாட்டுச் சந்தை” என்றறியப்படும் ஒரு பொதுச் சந்தையை உருவாக்குகின்றன.