TNPSC Thervupettagam

அனைத்து வானிலை புவிக் கண்காணிப்பு செயற்கைக் கோள்

November 9 , 2020 1388 days 549 0
  • பி.எஸ்.எல்.வி-சி 49 ராக்கெட்டைப் பயன்படுத்தி இஸ்ரோவானது அனைத்து வானிலை புவிக் கண்காணிப்பு செயற்கைக் கோளான  ஈஓஎஸ்-01  என்ற செயற்கைக் கோளை விண்ணில் செலுத்தி உள்ளது.
  • ஏவப்பட்ட இந்த புவிக் கண்காணிப்பு செயற்கைக் கோளானது ராடார் மூலம் புகைப் படமெடுக்கும் ஒரு  செயற்கைக் கோளாகும்.
  • மூன்று விண்கலத் தொகுப்பில் இது மூன்றாவது ஆகும்.
  • ரைசாட் -2 பி மற்றும் ரைசாட் -2 பிஆர் 1 ஆகியவை மற்ற இரண்டு ஆகும்.
  • இந்த இரண்டு செயற்கைக் கோள்களும் 2019 ஆம் ஆண்டில் விண்ணில் ஏவப்பட்டன.
  • விண்மீன் தொகுப்பில் உள்ள இந்த மூன்று செயற்கைக் கோள்களும் அனைத்து வானிலைகளையும் உயர் தெளிவுத்திறன் கொண்ட படங்களுடன் 24 மணி நேரச் சேவையை வழங்கும்.
  • இந்த செயற்கைக் கோள் ரேடார் மூலமான படமாக்கத்தைப் பயன்படுத்துவதால், மேகங்கள், மூடுபனி அல்லது சூரிய ஒளி இல்லாததால் இது பாதிக்கப்படாது.
  • மூன்று செயற்கைக் கோள்களும் நகர்ப்புற நிலப்பரப்பு, வன நிலம் மற்றும் விவசாய நிலங்களைப் படமாக்கம் செய்ய எக்ஸ்-பேண்ட் (X-band) வகை ரேடார்களைப் பயன்படுத்துகின்றன.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்