TNPSC Thervupettagam

அனைவருக்குமான முன் எச்சரிக்கைகள் 2027

December 11 , 2023 222 days 162 0
  • இந்த முன்னெடுப்பானது, 2027 ஆம் ஆண்டின் இறுதிக்குள் அபாயகரமான வானிலை, நீர் சார்ந்த அல்லது பருவநிலை நிகழ்வுகளில் இருந்து பூமியில் உள்ள அனைவரையும் பாதுக்காப்பதற்காக உயிர்காக்கும் முன் எச்சரிக்கை அமைப்புகளை வழங்குவதை நோக்கமாகக் கொண்டுள்ளது.
  • EW4All முன்னெடுப்பிற்கான நிர்வாகச் செயல் திட்டமானது 27வது பங்குதாரர்கள் மாநாட்டில் அறிமுகப்படுத்தப் பட்டதோடு இது ஐந்து ஆண்டுகளில் 3.1 பில்லியன் டாலர் முதலீடுகளைத் திரட்டுவதை மையமாகக் கொண்டது.
  • இந்தத் திட்டத்தின் ஒரு பகுதியாக, 2023 ஆம் ஆண்டிற்கான EW4All முன்னெடுப்பினை விரைவாக செயல்படுத்த 30 நாடுகளுக்கு முன்னுரிமை அளிக்கப் பட்டுள்ளன.
  • இந்த முன்னெடுப்பு உலக வானிலை அமைப்பு (WMO) மற்றும் ஐக்கிய நாடுகளின் பேரிடர் அபாயக் குறைப்பு அலுவலகம் (UNDRR) தலைமையிலானதாகும்.
  • ஐக்கிய நாடுகள் சபையின் மேம்பாட்டுத் திட்ட அமைப்பு ஆனது (FAO, OCHA, UNEP, UNESCO, IFRC மற்றும் WFP ஆகியவற்றுடன் இணைந்து) அதன் தற்போதைய திட்டங்கள் மற்றும் திட்ட நிரல்கள் மூலம் EW4All முன்னெடுப்பினைச் செயல்படுத்தும் பங்குதாரர் ஆகும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்