October 2 , 2022
660 days
341
- துபாய் தனது நகரத்தில் உள்ள ஏழை மக்களுக்கு இலவசமாக ரொட்டி விநியோகம் செய்வதற்காக விநியோக இயந்திரங்களை அறிமுகப்படுத்தியுள்ளது.
- விநியோக இயந்திரங்களில் கணினி தொடுதிரை உள்ளதால், அது பல்வேறு வகை ரொட்டிகளைத் தேர்ந்தெடுக்க மக்களுக்கு வழிவகை செய்கிறது.
- இந்த இயந்திரங்களில் உள்ள 'அனைவருக்கும் ரொட்டி' என்ற உரையானது நூற்றுக் கணக்கான புலம்பெயர்ந்த தொழிலாளர்களுக்கு உதவியாக இருக்கும் என்பதைக் குறிக்கிறது.
- துபாய் வேகமாக உயர்ந்து வரும் நுகர்வோர் விலைகளால் பாதிக்கப் பட்டுள்ளது.
- துபாய் புள்ளியியல் மையமானது, உணவு விலைக் குறியீடானது ஜூலை மாதத்தில் 8.75 சதவீதம் உயர்ந்துள்ளதாகக் குறிப்பிட்டுள்ளது.
- ஐக்கிய அரபு அமீரகமானது இந்தியா, வங்காளதேசம் மற்றும் பாகிஸ்தான் ஆகிய நாடுகளைச் சேர்ந்த சுமார் 8.7 மில்லியன் குடியேறிய நபர்களைக் கொண்டுள்ளது.
Post Views:
341