TNPSC Thervupettagam

அபோபிஸுக்கான திட்டம்

December 31 , 2023 202 days 236 0
  • பூமியின் சுற்றுப்பாதைக்கு அருகில் ‘ஒழுங்கற்ற நிலையின் கடவுள்’ என்ற சிறுகோள் வரத் தொடங்கியதால், அந்த சிறுகோளைப் பற்றி ஆய்வு செய்யும் திட்டத்தினை நாசா மீண்டும் தொடங்கியுள்ளது.
  • "ஒழுங்கற்ற நிலையின் கடவுள்" என்றும் அழைக்கப்படும் அபோபிஸ் என்ற இந்த சிறுகோள் 2029 ஆம் ஆண்டு ஏப்ரல் 13 ஆம் தேதி  அன்று பூமிக்கு அருகில் பயணிக்க வாய்ப்புள்ளதாகவும், மேலும் பூமிக்கு 20,000 மைல்கள் தொலைவில் இருக்கும் என்றும் நாசா குறிப்பிட்டுள்ளது.
  • கிட்டத்தட்ட 370 யார்டு அளவுள்ள இந்த விண்வெளிப் பாறையானது ஒவ்வொரு 7,500 வருடங்களுக்கு ஒருமுறை  பூமியை நெருங்குகிறது.
  • 2175 மற்றும் 2195 ஆண்டுகளுக்கு இடையில் பூமியைத் தாக்க 1/2700 வாய்ப்புகளைக் கொண்ட பென்னு சிறுகோள் மிகவும் முக்கியமானதாகும்.
  • பென்னுவில் இருந்து சேகரிக்கப்பட்ட தூசி மற்றும் பாறை மாதிரிகள் சமீபத்தில் நாசாவால் பூமிக்கு கொண்டு வரப்பட்டது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்