இந்தியாவில் முன்னிலையில் உள்ள சமகால ஆங்கில எழுத்தாளர்களில் ஒருவரான அமிதவ் கோஷ் என்பவருக்கு 2018 ஆம் ஆண்டின் ஞானபீட விருது வழங்கி கௌரவிக்கப்பட்டது. இலக்கியத்தில் அவருடைய தலைசிறந்தப் பங்களிப்பிற்காக இந்த விருது அவருக்கு வழங்கப்பட்டுள்ளது.
இந்த விருது கோபால கிருஷ்ண காந்தியினால் வழங்கப்பட்டது.
இவர் இதற்கு முன்பு “நிழல் வரிகள்” (1998) என்ற தன்னுடைய நாவலுக்காக சாகித்ய அகாதமி விருதைப் பெற்றுள்ளார்.
கண்ணாடி மாளிகை, பசி அலை, இபிஸ் என்ற மூன்று நாவல் தொகுதியான “ஸீ ஆப் பாப்பீஸ்” ஆகியவை இவருடைய இதரப் படைப்புகளாகும்.
ஞானபீட விருது பற்றி
ஞானபீட விருது இலக்கியம் மற்றும் ஆராய்ச்சி அமைப்பான பாரதிய ஞானபீடம் என்ற அமைப்பினால் வழங்கப்படுகின்றது.
இது 1944 ஆம் ஆண்டில் சாகு சாந்தி பிரசாந்த் ஜெயின் என்பவரால் ஏற்படுத்தப்பட்டது.
முதலாவது ஞானபீட விருது 1965 ஆம் ஆண்டில் G. சங்கரா குரூப் (மலையாளம்) என்பவருக்கு வழங்கப்பட்டது.
இந்த வருடாந்திர விருது ஆங்கிலம் மற்றும் இந்திய அரசியலமைப்பின் எட்டாவது பட்டியலில் உள்ள இந்திய மொழிகளில் எழுதும் இந்திய எழுத்தாளர்களுக்கு மட்டும் வழங்கப்படுகின்றது.
மூர்த்தி தேவி விருது மற்றும் நவலேகான் விருது ஆகியவை இந்த அமைப்பினால் வழங்கப்படும் இதர விருதுகளாகும்.