TNPSC Thervupettagam

அயோத்தியா தீப உத்சவ் - 2018

November 10 , 2018 2080 days 582 0
  • தீபாவளி கொண்டாட்டங்களை அயோத்தியா நகரத்தில் அனுசரிப்பதற்காக நடத்தப்பட்ட நிகழ்வான அயோத்தியா தீப உத்சவ் 2018 உலக சாதனைகளுக்கான கின்னஸ் புத்தகத்தில் இடம் பெற்றிருக்கின்றது.
  • இது சரயு நதிக்கரையில் 3,01,152 அகல் விளக்குகளை தீபம் ஏற்றிய சாதனைக்காக கின்னஸ் புத்தகத்தில் இடம் பெற்றுள்ளது.
  • இதற்கு முந்தைய சாதனையானது 2016 ஆம் ஆண்டு ஹரியானாவின் சிர்சாவில் 1,50,009 விளக்குகளை வெளிப்படுத்தி மிகப்பெரிய நிகழ்ச்சியை நடத்திய தேரா சச் சௌதாவால் நிகழ்த்தப்பட்டது.
  • இந்த தீப உத்சவ் நிகழ்ச்சியானது உத்தரப் பிரதேச அரசின் சுற்றுலாத் துறை மற்றும் கலாச்சாரத் துறையின் முயற்சியாகும். இது ராமன் ராவணனை வீழ்த்திய வெற்றிக்காகவும் அதன்பின் தனது அரசான அயோத்தியாவிற்குத் திரும்பியதை நினைவு கூறுவதற்காகவும் கொண்டாடப்படுகிறது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்